திங்கள், 24 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -88

மெய்ப்பொருள் காண்பது அறிவு -88
அனாக்சி மேண்டர் (Anaximander)  கி.மு. 610 – 546.
இவர் தேலிசின் மாணவர். தமது சிந்தனைகளை நூல் வடிவில் தந்தவர். தேலிசின் கருத்திற்கு முரண்பட்டவர். எந்த ஒரு மூலகத்தையும் பேரண்டத்தின் முதற் காரணமாக இவர் கொள்ளவில்லை இப்பேரண்டம் எதிர்மறைகளின் தொடர்பு என்பது இவர் கருத்து. நீர்x நெருப்பு ; வன்மை x மென்மை ;  என்பன போன்று  பகுக்கப்படாத முழுமையான எல்லையற்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒன்றே அனைத்திற்கும் மூலகாரணம். எதிலிருந்து தோன்றியதோ அதிலேயே அடங்கும்.
 மனிதனின் பரிணாமத்தை முதலில் குறித்தவர் இவரே. மனிதன் மீனிலிருந்து தோன்றியவன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக