வெள்ளி, 21 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :997


திருக்குறள் -சிறப்புரை :997
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். --- ௯௯௭
அரத்தைப் போல கூர்மையான அறிவு உடையவராயிருந்தாலும் ஆறறிவு உடைய மக்கள் பண்பு இல்லாதவர் ஓரறிவு உடைய மரத்தைப் போன்றாவராவர்.
“ பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணுத் தக்கன்று அது காணுங் காலை.”--- நற்றிணை.
ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக