ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1006


திருக்குறள் -சிறப்புரை :1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். ---- ௧00௬

( தான் துவ்வான் ; தக்கார்க்கு ஒன்று ; இயல்பு இலாதான். )

 தானும் துய்க்க மாட்டான், உதவி வேண்டி இரந்து நிற்கும் தக்கவர்களுக்கும் கொடுத்துதவும் பண்பும் இல்லாதவன் தேடிக்குவித்த பெருஞ்செல்வம், அவன் தேடிப்பெற்றுக்கொண்ட பெரு நோய் ஆகும்.

“பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே.” ---புறநானூறு.

குளிர்ந்த நீர்த்துறையின்கண் தேன் பொருந்திய பெரிய பகன்றை மலர் பிறரால் சூடப்பெறாது வாடி வீழ்வதைப் போலப் பிறர்க்கு ஒரு பொருளையும் கொடுக்காது மாய்ந்து போகும் உயிர்கள் மிகப் பலவே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக