ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :999


திருக்குறள் -சிறப்புரை :999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.--- ௯௯௯
பிறருடன் மனம்விட்டுச் சிரித்துப் பேசி மகிழும் பண்பில்லாதவர்களுக்கு இவ்வுலகம், பகல் பொழுதிலும் இருள் நிறைந்ததாகவே தோன்றும்.
“ வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
 பண்புஇலன் பற்றார்க்கு இனிது. குறள் ---865.
வினையின் எதிர்வினகளை அறியான்;  வாய்ப்பிருந்தும் செய்யவேண்டிய நற்செயல்களைச் செய்யான் ; பழிக்கு அஞ்சான் ; நற்பண்பும் இல்லான் அவனை வெல்வது  பகைவர்க்கும் எளிது.

1 கருத்து: