செவ்வாய், 25 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1001


திருக்குறள் -சிறப்புரை :1001
101. நன்றியில் செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். --- ௧00௧
பெரும்செல்வம் பெற்றவன், தானும் துய்க்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இறந்து போகிறவன் இவ்வுலகத்திற்குச் செய்தது என்று சொல்ல ஒன்றுமில்லை.
”வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அ ஆ
இழந்தான் என்று எண்ணப்படும்.” –நாலடியார்.
இல்லாதார்க்கு ஒன்றும் வழங்காதவனாய் வீணாகப் பொருளைப் பூட்டி வைத்திருப்பவன் ; அப்பொருளை இழந்தவனாகவே எண்ணப்படுவான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக