செவ்வாய், 18 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :994


திருக்குறள் -சிறப்புரை :994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.---- ௯௯௪
அன்பொடு  அறம் பிறழாது நன்மை செய்து, யாவர்க்கும் பயன்படுபவர்தம்  பண்பினை உலகத்தார் பாராட்டி மகிழ்வர்.
“ நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்.” –பதிற்றுப்பத்து.
அகன்ற உலகத்தில் நல்ல புகழை நிலைநாட்டும் பொருட்டு இல்லாதார் துன்பம் நீங்கும்படி வழங்கும் வள்ளல் தன்மை மிக்க, அன்பு நிறைந்த மனம் உடையவன்.(சேரலிரும்பொறை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக