புதன், 26 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -90

மெய்ப்பொருள் காண்பது அறிவு -90
கெராக்லிடஸ் (Heraclitus) கி.மு. 535 – 475.
இவர் அரசப் பரம்பரையைச் சேர்ந்தவர். தன் உடன்பிறப்பிற்காக அரசுரிமையைத் துறந்தவர்.
மாற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அதிகமான வாய்ப்புடைய நெருப்பே இயற்கையின் முதல் மூல்கம் எனக் கருதினார். நெருப்பு உண்டாக்கப்படுவதில்லை ; அழிக்கப்படுவதில்லை என்றும் உள்ளது. எல்லாப் பொருள்களும்  அவற்றின் பண்புகளை அதனதன் எதிமறைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. வெப்பம் x குளிர் ; பிறப்பு x இறப்பு ;  உயர்வு x தாழ்வு  இவ்வெதிர்மறை மாற்றம் இடையீடின்றித் தொடர்ந்து நடைபெறும் இயற்கை நிகழ்வு என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக