வியாழன், 27 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1003


திருக்குறள் -சிறப்புரை :1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.---- ௧00௩
தேடிய செல்வத்தைப் பாதுகாத்துப் பிறர்க்குக் கொடுத்துப் புகழை விரும்பாது பதுக்கி வைத்திருப்பவர்,  இவ்வுலகில் பிறப்பது, நிலத்திற்குப் பெரும் சுமையாகும்..  
“ மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை.” –நாலடியார்.
மறுமை இன்பமாகிய புகழை அறியாத கீழ் மக்களின் செல்வத்தைக் காட்டிலும் சான்றோர் வறுமை உயர்ந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக