செவ்வாய், 16 அக்டோபர், 2012

தமிழின் தொன்மையை அறிய வேண்டுமா...
 A resend archaeological evidence suggests   Tamil spoken in the Indian sub-continent could have been the language used by the Indus civilization and even the Sumerian.
References to rivers that dried up 10,000 years ago seen in Tamil literature. In fact there is a possibility that Tamil was the root of Sanskrit, in turn the root of all Indo European Languages.i
                                                                          Flora Pulman
                                                                               Ivy bridge, Devon


வெள்ளி, 12 அக்டோபர், 2012

அன்புடையீர் வணக்கம்
என்னுடைய வலைத் தளம் இதுநாள் வரை இயங்காமல் இருந்தது.... மீண்டுன் சந்திக்கிறேன்
நன்றியுடன்//இரெ.குமரன்

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

புதன், 11 ஏப்ரல், 2012

சங்க இலக்கியச் செய்திகள் -


சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
    மாறோக்கத்து நப்பசலையார்,புறநா.280:13-15
உரை:- சிறிய வெள்ளிய ஆம்பலிட்த்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வ்ழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் எனத் தலைவி வருந்துகிறாள்.
மகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத த்ம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீ ந்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் என்வே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.

சங்க இலக்கியச் செய்திகள் -


சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
    மாறோக்கத்து நப்பசலையார்,புறநா.280:13-15
உரை:- சிறிய வெள்ளிய ஆம்பலிட்த்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வ்ழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் எனத் தலைவி வருந்துகிறாள்.
மகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத த்ம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீ ந்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் என்வே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.

திங்கள், 5 மார்ச், 2012

மார்யம்மா


LATVIA SEEKS COMMON ROOTS IN TAMIL GODDESS MARI AMMA
The pronunciation of the name, the long black hair and the symbolic milking of a cow are unmistakable. Although the faces  and costumes do not match, there are several reasons to believe that the Tamil goddess MARIAMMA is the same as Latvian goddess MARA (Pronounced maara) say Latvian researchers studying cultural relations between Europe and India.
“ I was invited to a temple festival Tiruttani, about two hours drive from Chennai. When they called out Mariamma’s name, it stuck me. The idol and the picture convinced me later: Latvian Maara is known to be a single women and as the goddess of fertility”, said Professor Sigma Ankrava, a research fellow at the Indian council for Cultural Relations and head of literature and culture in the department of English studies at the  University of Latvia .
For more information- Times Of India 6-3-12

புதன், 29 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் -வடக்கிருத்தல்

ஆற்றின் நடுவே உள்ள தீவில் (ஆற்றிடைக்குறை, துருத்தி என்றும் கூறுவர்) உண்ணா நோன்பு மேற்கொண்டு மழை, வெயில், பனி, காற்று முதலியவற்றிற்குச் சிறிதும் நெஞ்சுடையாது நிலைபெயராதிருந்து உயிர் நீப்பது.வடக்கிருத்தலாகும்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் - அரசாள்வோர் பார்வைக்கு

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக் கூழ் அள்ளற் பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே
    தொண்டைமான் இளந்திரையன்,புறம்.185
உரை:வண்டியைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்  வழியில் ஒரு துன்பமும் இன்றி வண்டி இனிதாகச் செல்லும் திறனற்றவன் வண்டி ஓட்டினால் அது பகையாகிய செறிந்த சேற்றிலே சிக்கி மிகப் பல தீய துன்பங்களை மேலும் மேலும் உண்டாக்கும்.( அரசன் திறம்பட ஆட்சி நடத்தாவிடின் உட்பகை, புறப் பகையாகிய சேற்றில் அழுந்தித் துன்புறுவான், நாடும் சீர் கேடு அடையும்.

சங்க இலக்கியச் செய்திகள்

தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறையாக யாம் சில
அரிசி வேண்டினோமாக தான்பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே
                              ஒளவையார்,புறம்.140
உரை:செந்நாப் புலவீர், பலா மரங்கள் மிகுந்த நாஞ்சில் மலைக்கு வேந்தன் ஆகிய நாஞ்சில் வள்ளுவன் அறிவு மெல்லியன் (அறியாமை உடையன்) போலும். வளையணிந்த கையராகிய விறலியர், மனைப் பக்கத்தில் பறித்துச் சமைத்த இலையின் மேல் தூவும் பொருட்டு யாம் சில அரிசி (துவரை) வேண்டினேம். அவன் பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிந்தவன்; ஆதலால் எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கி ,சுரம் சூழ்ந்த மலை போன்றதொரு யானையை அளித்தான்; இவ்வாறு தெளியாது கொடுக்கும் கொடையும் உலகில் உளதோ? பெரியோர் தாம் செய்யும் கடனை முறையறிந்து செய்யாரோ?
விளக்கம்::ஒளவையார்,அரசனைக் குறை கூறுவதுபோல அவனது கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடியது.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

THAMIZHI


Brahmi script found at Edakkal
       Kochi: Noted historian and archaeologist M.R.Raghava Varier has confirmed the presence of Brahmi script at the the ancient Edakkal caves in a remote part of wayanad district. The latest discovery makes it plausible that the cultural diffusion of the Indus Valley civilization was more widespread then usually thought. Varier said it was the Dravidian from of Brahmi script that was seen at the Edakkal caves.
            “The Brahmi script I found can be read as sree vazhumi which is believed to be the Tamil equivalent of Lord Brahma It has been found close to the carving of a human figure with an outsized phallus. The practice of providing an inscription beneath a carving or etching is very much part of Indian tradition. This indicates that Edakkal caves were also a fertility cult site” he explained.  
For more information- The Times Of India,10-02-12

திங்கள், 6 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள்

வறுமையும் புலமையும்
பசி தினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண
              குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது, புறம்.159: 21-25
உரை:உயர்ந்த கொம்பை உடைய கொல் யானையைப் பெற்றாலும் முகம் மாறித் தரும் பரிசினை ஏற்க மாட்டேன். என் தாய், மனைவி ஆகிய இருவருடைய நெஞ்சமும் விருப்பமுறும்படி, பசி தின்பதால் வருத்தமுற்ற எனது சுற்றமும் மகிழும்படி மலர்ந்த முகத்துடன் நீ, யான் இன்புற விரைவில் பரிசில் தந்து விடுவையாயின், சிறிதாகிய குன்றி என்னும் அளவையுடைய பொருளாயினும் அதனை ஏற்றுக்கொள்வேன்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

வணக்கம்

சங்க இலக்கியச் செய்திகள் தொடர் விரைவில் தொடரும்
நன்றியுடன் - இரெ.குமரன்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் - வறுமையும் புலமையும்

அறியீரோ அருந்தமிழ்ப் புலவர் வாழ்க்கை
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்க இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
மண் ஆள் செல்வம் எய்திய
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே
                                                                                  கோவூர் கிழார்,புறம்.47
உரை: இரவலர், பழுத்த மரம் தேர்ந்து செல்லும் பறவை போலக் கொடைக்குரியவரைக் கருதிச் செல்வர். நீண்டவழி எனக் கருதாது கடத்தற்கரிய பல பகுதிகளையும் கடந்து செல்வர், குற்றமில்லாத தெளிந்த சொற்களால் தமக்கியன்றவாறு பாடிப் பரிசில் பெறுவர்: அப்பரிசிலைத் தம் சுற்றத்தினர்க்குத் தந்தும் தம்மிடம் மறைத்துக் கொள்ளாது தாமும் உண்டு தம் உள்ளம் மலரப் பிறர்க்கு வழங்கியும் வாழ்வர். தம்மை ஆதரிப்பார் தமக்குச் செய்யும் சிறப்பின் பொருட்டு வருந்தும் பரிசில் வாழ்க்கையை உடையவர், இத்தகைய வாழ்க்கை, பிறர்க்குத் தீமை புரிய அறியுமா எனில் அறியாது. பல நுட்பம் அமைந்த கல்வியின் சிறப்பால் தம்மை எதிர்ந்தோர் நாணும்படி பெருமையுடன் தலையுயர்த்திச் சென்றவிடத்தும் இனிதாக நடக்கும் இயல்புடையது, அதுவேயன்றி உயர்ந்த புகழுடைய நிலம் ஆளும் செல்வத்தை அடைந்த உம்மைப் போன்ற மன்னர்களின் தலைமையையும் உடையது.