ஞாயிறு, 22 ஜூன், 2014

kalvi ukkap parisu

வணக்கம்,  கள ப்பாள்  வீ. ரெங்கசாமி தொண்டைமான் - செகதம்பாள் , நினைவு  அறக்கட்டளை  வழங்கும் கல்வி ஊக்கப்பரிசுகள் . களப்பாள் இரெ. குமரன் குடும்பத்தினர் , களப்பாள் அரசு மேல் நிலைப்பள்ளி  +2 இறுதித் தேர்வில்  முதல் மூன்று  இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ப்  பரிசுகள் வழங்கினர் 
இடம்- களப்பாள் - நாள் 20-06-14. முதல் பரிசு உரூ 5000/- இரண்டாம் பரிசு- உரூ 3000/-, மூன்றாம் பரிசு உரூ . 2000/-

வெள்ளி, 13 ஜூன், 2014

சல்லிக்கட்டு -

சல்லிக்கட்டு  -  பொற்காசுகளைத்   துணியில் முடிந்து காளையின் கொம்பில் கட்டி விடுவார்கள் -
 ஜல்லிக்கட்டு என்பது தவறு .
 இது தமிழர்களின் வாழ்வியலோடு பண்பாட்டோடு  கலந்த ஒரு கலை / விளையாட்டு.
 முல்லை நிலமக்கள் ஆடு, மாடுகளோடு அச்சமின்றிப பழக   ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் சார்ந்த தொழிற் கலை
. உயிரியல் பூங்காக்களில் அடைத்து வதைக்கப்படும்  கொடுமைகளைத் தட்டிக்கேட்க  ஏன் முயற்சி  செய்யவில்லை .
ஏறு தழுவுதல் என்பது  காளையை  அடக்குதல் இல்லை . அச்சமின்றி  காளையை எதிர்கொள்ளுதல் , தழுவுதல் அவ்வளவே .
தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியா?

செவ்வாய், 10 ஜூன், 2014

thirukkuRaL

திருக்குறளில் இடம்பெற்றுள்ள ...
இரு மலர்கள் - அனிச்சம் , குவளை 
ஒரே  பழம் - நெருஞ்சி 
ஒரே விதை - குன்றிமணி 
இரண்டு மரங்கள் - பனை, மூங்கில் 
இடம் பெறாத......
  இரண்டு (சிறப்பான)  சொற்கள் - தமிழ், கடவுள்.

வெள்ளி, 6 ஜூன், 2014

makuli - pakuthi 2

...அந்நெறியில் பொருளொடும் போ கும் வழிப்போக்கர்க்கு,  " குத்திப் புதை , " சுட்டுக்குவி " என்னும்  பொருள்பட இசைத்தலும் வினைவயிற் செல்வோர் க்
குத்  தீ  நிமித்தமாகவாதல்  நன்னிமித்தமாகவாதல் அவர் மேற்கொண்ட வினை   முற்றுமென்றாதல் முற்றாதென்றாதல் எதிர்காலப் பொருள் தெரிய  இசைத்தலும்  பிறவுமாம். ஆறலை கள்வர்க்கு அஞ்சிப் போவார்தம் அச்சத்தை இக்குரல் மிகுவித்துக் கேள்விக்கின்னாதாதல்  பற்றிக் கடுங்குரல் என்றார்  - பெருமழைப் புலவர்

செவ்வாய், 3 ஜூன், 2014

Ankilaththil peesinaal

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளி என்று சொல்கிறார்களே ! இந்திய மொழிகளின் நிலை என்ன என்பதை விளக்குவார்களா ? ஆங்கிலம் வயிற்றுக்கு ; தாய்மொழி வாழ்க்கைக்கு - புரிந்துகொள்ளுங்கள் .

thodaruvom

அன்புடையீர் வணக்கம்,
மகுளி பற்றிய செய்தியைத்  தொடரமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன்  - மீண்டும் இணைவோம் . நன்றியுடன் - குமரன்