புதன், 30 செப்டம்பர், 2020

 

 தன்னேரிலாத தமிழ் - 156

452

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.


நீர் எவ்வகையான நிலத்தில் வந்து சேர்கிறதோ அந்நிலத்தின் தன்மைக்கேற்ப நீர் திரிந்து வேறுபடும். அதுபோல் மக்களும் தாம் சேர்ந்த இனத்தின் இயல்புக்கேற்பவே அறிவைப் பெறுவர்.


ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்

 மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க…..” – நன்னெறி, 22.


மக்களுள் உயர்வையும் தாழ்வையும் அவர் கொண்டிருக்கும் அறிவினால் மதிப்பிட வேண்டுமே அல்லாமல் பிறப்பால் / சாதியால் றி முற்படுதல் தவறாகும்.

 

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 155

 தன்னேரிலாத தமிழ் - 155

426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு.


உலகத்துச் சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எவ்வாறு நடந்து கொள்கிறதோ அவ்வாறே நாமும் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும்உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டேஎன்பார் தொல்காப்பியர்.


தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரைத்

தூயவர் என்று எண்ணியே துன்னற்க…”நீதிவெண்பா, 72.


 தீயவர்கள் மிகச்சிறந்த கல்வியறிவு  பெற்றவர்களாக  இருந்தாலும் அவர்களைப் பெரியோராகக் கருதி நெருங்காது விலகி இருக்கவும். 

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 154

 தன்னேரிலாத தமிழ் - 154

278

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.


மனம் முழுதும் மாசாகிய குற்றம் நிறைந்திருக்கஒழுக்கம் நிறைந்த உத்தமர்போல் நீராடி  மறைந்தொழுகும் மாந்தர்  உலகில் பலராவர்.

 உத்தமர்போல் உலாவரும் ஒழுக்கக் கேடர்கள் பலர் உளர்

      

“வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் யாவரையும்

வஞ்சித்தோம் என்று மகிழன்மின் வஞ்சித்த

எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி

அங்கம் குலைவது அறிவு.” ====நீதிநெறிவிளக்கம், 94.


பொய் வேடம் பூண்டு பிறரை வஞ்சித்து வாழும் மூடர்களே..!  அனைவரையும் ஏமாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளாதீர்கள் ; நீங்கள் வஞ்சித்தவற்றை யெல்லாம் எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான் என்பதை உணர்ந்து உங்கள் உடல் பதறுவதே உண்மையான இறை அறிவாகும்.

வியாழன், 17 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 153

 

தன்னேரிலாத தமிழ் - 153

சங்க இலக்கியங்களில் கோசர்கள்.

…. ............................. நன்னன்

நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய

ஒன்றுமொழிக் கோசர் போல

வண்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே

                                        பரணர், குறுந். 73 : 2 – 5

kōcar,
n.
An ancient caste of warriors;
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார்.
மெய்ம் மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15).

இலக்கியங்களில் புகழ்ந்துபேசப்படும் நன்னன்- கோசர் வரலாற்றை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும். மேலும் காண்க : குறுந். 292, அகநா. 205.

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 152

 

தன்னேரிலாத தமிழ் - 152

  கோசர்கள்

நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்ற வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியின்
புன் தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
மாவீசு வண்மகிழ் அஃதை போற்றி
காப்புக் கைந்நிறுத்த பல்வேல் கோசர் 

                                                -கல்லாடனார்,அகம்.113:1-5)
நண்பர்கள் ஆக்கம் இழந்து கேடுற்றபோது அவர்பால்கொண்ட நட்பில்  ஒருபொழுதும் மாறுபாடு கொள்ளாதவராய் அவர்க்குத் தாமே வலியசென்று  உதவும்  பிறழாத கோட்பாடு உடையவர்கள் கோசர்கள்.

சங்க இலக்கியங்களில் கோசர்கள் புகழ்ந்து பேசப்படுகின்றனர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 151

 

தன்னேரிலாத தமிழ் - 151

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். --குறள். 457.

 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்- என்ற  ஓர் உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை  உலகிற்கு வழங்குகிறார் திருவள்ளுவர். மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு(1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் .

மேற்சுட்டியுள்ள குறட்பாவை, அறிவியல் உலகம் திருவள்ளுவரின் அரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனநலம் என்பது மனத்துக்கண் மாசின்றி இருத்தலே. அஃதாவது..

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. --குறள். 34.

ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்- 150

 

தன்னேரிலாத தமிழ்- 150

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். --குறள். 457.

 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்- என்ற  ஓர் உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை  உலகிற்கு வழங்குகிறார் திருவள்ளுவர். மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு(1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் .

மேற்சுட்டியுள்ள குறட்பாவை, அறிவியல் உலகம் திருவள்ளுவரின் அரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனநலம் என்பது மனத்துக்கண் மாசின்றி இருத்தலே. அஃதாவது..

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. --குறள். 34.

ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

To be quite free from mental blots is all that’s righteousness

And all the rest of acts without such freedom are but fuss.

                                                                 (Tr.)  K.M.Balasubramaniam

திங்கள், 7 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்- 149

 

தன்னேரிலாத தமிழ்- 149

வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத்

தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின்

கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர்

நல்குரவு சேரப்பட்டார்.

நல்லாதனார்,      திரிகடு. 84

                    துறையின்றிக்கிடக்கும் குளம் வழிச்செல்வார் வருத்தம் தீர்க்க உதவாது பயனற்றுப் போகும்  ; வயிறு நிறையத் தாய்ப்பால் அருந்தாத குழந்தை வலிவும் பொலிவுமாகிய வளம் இழந்து வறுமையில் வீழும்; இளமையில் கல்விபயிலாத மாந்தரின் வாழ்க்கை வறுமையின் வாய்ப்படும் எனபார் .

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்- 148

 

தன்னேரிலாத தமிழ்- 148

 தாய்ப்பால்

இனிக் கருப்ப சாஸ்திரம் (1927) கூறுவதாவது:-

 1)       குழந்தை பிறந்தவுடனே அதற்குத் தாயின் முலைப்பாலைப் பருகுவித்தல் வேண்டும். இதனால் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் நன்மையுண்டு.

 2)           சிலர் குழந்தைக்குப் பால் கொடுத்தால் உடம்புகெட்டுப் பலவீனமாகும் என்று நினைத்துத் தாதியை வைத்துப் பால் கொடுப்பதும் புட்டிப் பால் கொடுத்து வளர்ப்பதும் தகுதியான காரியமன்று. சிருட்டிகர்த்தர். குழந்தைக்கென்றே உண்டாக்கியிருக்கிற பாலை அதற்குக் கொடாமல் நிறுத்திவிடுவது அவ்வளவும் புத்தியீனம்.

  3)        பால் கொடுக்கும் ஸ்திரீகள் ஆரோக்கிய பதார்த்தங்களை நன்றாய்ப் புசித்தல் வேண்டும்.

 4)            தாயும் பிள்ளையும் சுகசரீரிகளாயிருக்கின் ஒரு வருஷத்திற்குமேல் பிள்ளைக்குப் பால் கொடுத்தல் கூடாது. அப்படிக் கொடுத்தால் பிள்ளை சீக்கிரம் பேசமாட்டாது.

 5)          ஒரு ஸ்திரீயானவள் விசேஷித்த பயங்கரத்திலும் மனக்கிலேசத்திலும் இருக்கும் பொழுது அவளுடைய பால் விஷத்தையொக்கும். அப்படிப் பட்ட காலத்தில் குழந்தைக்குப் பால் கொடுத்தல் கூடாது.

6)              பால் உண்டாகாது போனால் மார்பில் சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டால் பால் உண்டாகும். மீன் கருவாடு முதலிய ஆகாரங்களை விசேஷமாய்த் தின்பதனால் பால் விசேஷமா யுண்டாகும்.

 7)         தாய்ப் பால் தாதிப்பால் இல்லாத குழந்தைகளுக்குப் பசுவின் பால் புகட்டலாம்.

  8)          ஆட்டுப்பால் முலைப்பாலுக்குச் சமானமாயிருக்கும். ஆட்டின் பாலைக் குடித்த குழந்தைகள் அநேகம் வியாதியில்லாமலிருக்கின்றன.இதில் கொஞ்சம் சர்க்கரையையும் மூன்றிலொரு பாகம் வெந்நீர் அல்லது சுண்ணாம்புத் தெளிவு நீரையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

 9)          குழந்தைக்கு ஆறு ஏழு பற்கள் முளைத்தபின்பு முலைப்பாலை மறக்க வைக்கலாம்.

சனி, 5 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்- 147

 

தன்னேரிலாத தமிழ்- 147

வற்றிய முலையில் பால் சுரத்தல்

வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி

இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய

சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி

வாடுமுலை ஊறிச் சுரந்தன

ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

ஒளவையார், புறநா. 295: 4 – 8

                      போர்க்களத்தில், படைத் திரளின் இடையில் வெட்டுண்டு உடல் சிதைந்து வேறுபட்டான் வீரன் ஒருவன். பின்னிட்டு ஓடாத கொள்கையினை உடைய அவ்வீரனுக்குத் தாயாகிய  இவள், சிறப்புக்குரிய தன் மகனின் மறமாண்பு கண்டு அன்பு மேலிட, அத்தாயின் வற்றிய முலைகளில் பால் ஊறிச் சுரந்தன.

                        இயல்பாகவே,  பிறந்த குழந்தை முதன்முதலாகத்  தாயின் முலைக் காம்பில் பால் உறிஞ்சும் போது, தாயின் உடலும் உள்ளமும்  உணர்ச்சி மேலிட பால் சுரக்கும்.

                    தாய்ப்பால் சுரப்பதற்குத் தாயின் உள்ளன்பு மிகவும் இன்றியமையாதது என்பது இப்பாடல்வழி அறியமுடிகிறது.

 

புதன், 2 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்----146

 

தன்னேரிலாத தமிழ்----146

புல்மரம்: பொதுப் பெயர்கள்

காயே பழமே தோலே செதிளே

வீழோடு என்றாங்கு அவையும் அன்ன.

-தொல். 1588.

காய். பழம். தோல். செதிள். வீழ் ( விழுது) இவை இரண்டுக்கும் பொதுவாய் வழங்குவன.

புறக் காழனவே புல் என மொழிப

அகக் காழனவே மரம் என மொழிப.

-தொல். 1585.

                      தொல்காப்பியர் மரபியலில் கூறும் உயிரியல் தொடர்பான கருத்துக்கள்அகக் காழனவே மரமெனப் படுமே. புறக் காழனவே புல்லெனப் படுமே .” போன்றவையும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளதும் ஆன்றோர்தம் அறிவியல் சிந்தனைக்குச் சான்றன்றோ..!

அறிவியல் ஆசான் தொல்காப்பியர் ஓரறிவு உயிர்களைப்(புல். மரம்.) பகுத்து ஆராய்ந்த முறை இன்றைய அறிவியலுக்கு முன்னோடியாக அமைந்துள்ளதை அறிக