வெள்ளி, 5 டிசம்பர், 2014

vaNakkam

அன்புடையீர் , நலம் அல்லித் தீவு  புனைகதையைப்  படிக்க விரும்புவோர்  அருள் கூ ர்ந்து  தொடர்பு கொள்ளவும் - நன்றியுடன்  - களப்பாள் குமரன்

வியாழன், 4 செப்டம்பர், 2014

நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது ..
இந்தியாவை இனி ஆளப்போவது யார்..
அமெரிக்காவா .. ஜப்பானா ... கொரியாவா.... ஜெர்மனியா ... சீனாவா.... ? ஒன்றும் புரியவில்லையே .. இந்தியாவில் ஊழலைத் தவிர வே று எதயுமே  உற்பத்தி செய்ய முடியாதா ?..

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

Novel

அன்புடையீர் , வணக்கம்  விரைவில் வெளிவருகிறது  அல்லித் தீவு -புனைகதை --ஆண்கள் , பெண்களாக வும் ; பெண்கள் ஆண்களாகவும் - வாழும் நிலம்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

157 IAS----- Corruption

ஐ. ஏ . எஸ் ., ஐ பி எஸ் . ஐ எப் எஸ்  மற்றும் பல பட்டங்கள்  யாவும் கேள்வி - பதில் பட்டங்களே . ஏதோ  இவர்கள் இந்தியாவின் அதிமேதாவிகள் என்று கண்டுபிடித்து அரசின் உயர் பதவிகளில்  அமர்த்தப்படுகின்றனர் . இவர்களின் அடிப்படை கல்வி  ஏதேனும்  ஒரு பட்டப்படிப்பு மட்டுமே .

சனி, 19 ஜூலை, 2014

vaNakkam

அன்புடையீர்  வணக்கம்
 ஸ்ரீமான் பூண்டி அய்யா அவர்களைப்பற்றி  " சத்திய ஜீவன் " என்னும் தலைப்பிலான நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டுள்ளேன் . . நூல் தேவைக்குத் தொடர்பு கொள்ளவும் - நன்றி 9443340426.

ஞாயிறு, 22 ஜூன், 2014

kalvi ukkap parisu

வணக்கம்,  கள ப்பாள்  வீ. ரெங்கசாமி தொண்டைமான் - செகதம்பாள் , நினைவு  அறக்கட்டளை  வழங்கும் கல்வி ஊக்கப்பரிசுகள் . களப்பாள் இரெ. குமரன் குடும்பத்தினர் , களப்பாள் அரசு மேல் நிலைப்பள்ளி  +2 இறுதித் தேர்வில்  முதல் மூன்று  இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ப்  பரிசுகள் வழங்கினர் 
இடம்- களப்பாள் - நாள் 20-06-14. முதல் பரிசு உரூ 5000/- இரண்டாம் பரிசு- உரூ 3000/-, மூன்றாம் பரிசு உரூ . 2000/-

வெள்ளி, 13 ஜூன், 2014

சல்லிக்கட்டு -

சல்லிக்கட்டு  -  பொற்காசுகளைத்   துணியில் முடிந்து காளையின் கொம்பில் கட்டி விடுவார்கள் -
 ஜல்லிக்கட்டு என்பது தவறு .
 இது தமிழர்களின் வாழ்வியலோடு பண்பாட்டோடு  கலந்த ஒரு கலை / விளையாட்டு.
 முல்லை நிலமக்கள் ஆடு, மாடுகளோடு அச்சமின்றிப பழக   ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் சார்ந்த தொழிற் கலை
. உயிரியல் பூங்காக்களில் அடைத்து வதைக்கப்படும்  கொடுமைகளைத் தட்டிக்கேட்க  ஏன் முயற்சி  செய்யவில்லை .
ஏறு தழுவுதல் என்பது  காளையை  அடக்குதல் இல்லை . அச்சமின்றி  காளையை எதிர்கொள்ளுதல் , தழுவுதல் அவ்வளவே .
தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியா?

செவ்வாய், 10 ஜூன், 2014

thirukkuRaL

திருக்குறளில் இடம்பெற்றுள்ள ...
இரு மலர்கள் - அனிச்சம் , குவளை 
ஒரே  பழம் - நெருஞ்சி 
ஒரே விதை - குன்றிமணி 
இரண்டு மரங்கள் - பனை, மூங்கில் 
இடம் பெறாத......
  இரண்டு (சிறப்பான)  சொற்கள் - தமிழ், கடவுள்.

வெள்ளி, 6 ஜூன், 2014

makuli - pakuthi 2

...அந்நெறியில் பொருளொடும் போ கும் வழிப்போக்கர்க்கு,  " குத்திப் புதை , " சுட்டுக்குவி " என்னும்  பொருள்பட இசைத்தலும் வினைவயிற் செல்வோர் க்
குத்  தீ  நிமித்தமாகவாதல்  நன்னிமித்தமாகவாதல் அவர் மேற்கொண்ட வினை   முற்றுமென்றாதல் முற்றாதென்றாதல் எதிர்காலப் பொருள் தெரிய  இசைத்தலும்  பிறவுமாம். ஆறலை கள்வர்க்கு அஞ்சிப் போவார்தம் அச்சத்தை இக்குரல் மிகுவித்துக் கேள்விக்கின்னாதாதல்  பற்றிக் கடுங்குரல் என்றார்  - பெருமழைப் புலவர்

செவ்வாய், 3 ஜூன், 2014

Ankilaththil peesinaal

ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளி என்று சொல்கிறார்களே ! இந்திய மொழிகளின் நிலை என்ன என்பதை விளக்குவார்களா ? ஆங்கிலம் வயிற்றுக்கு ; தாய்மொழி வாழ்க்கைக்கு - புரிந்துகொள்ளுங்கள் .

thodaruvom

அன்புடையீர் வணக்கம்,
மகுளி பற்றிய செய்தியைத்  தொடரமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன்  - மீண்டும் இணைவோம் . நன்றியுடன் - குமரன்

வியாழன், 29 மே, 2014

makuli- sanga ilakkia seythi

அன்புடையீர்,  வணக்கம்
அகம் -19, பொருந்தில்  இளங்கீரனார்
 மகுளி  = இழுகு பறை  = சிறு பறை .
உருள் துடி மகுளியின்  பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங் குரல் குடிஞ்கை  .......... (4,5)
கடிப்பினால் உராய்தலால்  உண்டாகும்  மகுளியின் ஓசை ஈண்டுக் குடிஞ்சை யின் ஓசைக்கு உவமையென்க . கேட்போர் தம் இயல்பிற்கேற்ப  பொருள் தெரியும்படி இசைக்கும் என்க . அதாவது ஆறலை கள்வர் கரநது உறையும்   அன்.......

செவ்வாய், 27 மே, 2014

அ கர முதல எழுத்தெல்லாம்  ஆதி
பகலன்  முதற்றே  உலகு
 இக் குறட் பாவில் பகலன் என்று இருப்பதே பொருத்தமாம்
 . பகலன் =கதிரவன், ஆதி  ( சங்க இலக்கியச் சொல் = ஆதி = செலவு .