வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -68

தொடர்ச்சி…
மெய்ப்பொருள் காண்பது அறிவு -68
சோதிடம் உண்மையா..?
சோதிடம் எண்ணத்தில் பிறந்து, எழுத்தாணியிலும் எழுதுகோலிலும் வளர்ந்து, இன்று கணினி மயமாகிவிட்டது. சோதிடம் செல்வந்தர்களின் செல்லப்பிள்ளை. இந்தச் செல்லப்பிள்ளையின் சொல்லை யாரும் தட்டிக் கழிப்பதில்லை. நாளும் கோளும் இவர்களுக்காகவே நகர்ந்துகொண்டு இருக்கின்றன போலும். ‘நாளும் கோளும் நலிந்தவர்க்கு இல்லை,’ நாள் என் செய்யும் கோள் என் செய்யும்- நாளும் உழைத்தால்தான் உணவு என்றால் சகுனம் என் செய்யும்..?
உழைப்பின் மேன்மையாலே பல நாடுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. உழைக்க நேரமில்லை என்று வருந்தும் மக்களிடையே இன்றும் பலர் உளர்.உண்டு, உறங்கி, உற்றார், கெட்டார், உதவாக்கரைகளின் கதைகளைப் பேசிக் காலத்தை வீணே கழிப்பது போதாதென்று இராகு காலம், எமகண்டம், சூலம், குளிகை, அமாவாசை, பாட்டிமுகம் என்று காலத்தை விரயம் செய்கிறார்கள். இன்னும் சிலர் அட்டமி, நவமி என்று சில நாட்களையே விழுங்கி விடுகின்றனர்.
அருள் வாக்கு
சோதிடத்திற்காவது கூட்டல், கழித்தல் தெரிந்திருக்க வேண்டும். அருள்வாக்கிற்கு அதுவும் தேவையில்லை; ஞானப்பார்வை ஒன்றே போதும். அருள்வாக்கின் பெருமை அதன் பொருளைப் புரிந்து கொள்பவர் மனத்தைப் பொறுத்தது. சோதிடத்திற்குச் ‘சொல் சாதுரியம்’ அடிப்படை ; அருள்வாக்கிற்கு ‘அற்புதங்கள்’ அவசியம். வெறுங்கையில் விபூதி கொட்டும் ; சோறு கொட்டாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ‘சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.’ –இரெ. குமரன். …..தொடரும்…. 

திருக்குறள் -சிறப்புரை :981


திருக்குறள் -சிறப்புரை :981
99.சான்றாண்மை
கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. --- ௯௮௧
சான்றாண்மை என்னும் நல்லொழுக்கம் நிறைந்தார், தாம்  ஆற்ற வேண்டிய கடமைகள் இவை என அறிந்து மன்னுயிர்க்கு நன்மை தருவனவற்றைச் செய்வதைத் தம் கடமையாகவே மேற்கொள்வர்.
” பிறர் நோயும் தம்நோய் போல் போற்றி அறன் அறிதல்
 சான்றவர்க்கு எல்லாம் கடன்….” –கலித்தொகை.
பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் போற்றி ஒழுகுதல் சான்றோர்க்கெல்லாம் கடமை ஆகும்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -67

மெய்ப்பொருள் காண்பது அறிவு -67
சோதிடம் உண்மையா..?
இன்ப விழைவு உயிர்களின் இயல்பாகும் எனினும் துன்பம் தொடர்கதையாகின்றது. ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்றாலும் சூழலும் துன்பச் சுழலாக மாறுகின்றது. நிகழ்காலம் கொடியதென்றாலும் எதிர்காலம் இனிமையாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்துகொண்டே இருக்கின்றது. அந்த அடிப்படையில்தான் வாழ்க்கை வண்டியும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
 ஒளிமயமான எதிர்காலத்தை அறிந்துகொள்ள மனிதனுக்குத்தான் எத்தனை ஆவல்? கடவுள் வழிபாடும்  காணிக்கையும் சமயத்தத்துவமும் சந்நியாசிகளின் அருள்வாக்கும் சோதிடமும் ஆருடமும் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றைச் சொல்கின்றனவோ இல்லையோ நிகழ்காலத்திற்கு ஆறுதல் அளிக்கின்றன என்பது உண்மையே! இந்த அற்பச் சுகத்திற்கு அறிவு அடிமையாகின்றது… விலை போகின்றது. கிரகங்கள் மனிதர்கள்மீது ஆட்சி செய்கின்றன என்று கூறி, சோதிடர்கள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றனர்.—இரெ. குமரன்.

திருக்குறள் -சிறப்புரை :980


திருக்குறள் -சிறப்புரை :980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். ---  ௯௮0
பெருமை என்னும் பெருந்தன்மை உடையோர் பிறருடைய குற்றைத்தை மறைத்துக் குணத்தை மட்டுமே கூறுவர் ; சிறுமைக் குணம் உடையோர் பிறருடைய குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறுவர்..
“ செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை
வைததை உள்ளி விடும். “ ---நாலடியார்.
 சான்றோர்கள் பிறர் செய்த நன்மையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள் ; கயவர்கள் பிறர் தம்மை வைததை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.


புதன், 29 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -66

மெய்ப்பொருள் காண்பது அறிவு -66
பாலியல் கல்வி
சங்க இலக்கிய அகப்பாடல்கள் பாலியல் பற்றிய செய்திகளை அறிவியல் முறையில் விளக்குகின்றன. காதல் ஒழுக்கங்கள் நெறிகளுக்கு உட்பட்டவை. மனம் போன போக்கில் இவ்வொழுக்கங்கள் நிகழுமாயின் அவை மனித சமுதாயத்திற்குப் பெருங்கேடாய் முடியும். பாலியல் முறையாக அறிந்து ஒழுகவேண்டிய ஓர் அறிவியல் பாடமாகும் என்பதை அகப்பாடல்கள் உணர்த்துகின்றன.
 “ அகத்திணை ஓர் பாலிலக்கியம் பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காம நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறோம். காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும் இயற்கை, செயற்கை, திரிபு ஆகிய மனக் கூறுகளையும் கரவின்றிப் பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண நூல்.”
அறிஞர் வ.சுப. மாணிக்கம்.
“சங்க இலக்கியத்திற்குப் பிறிதொரு பெயர் சூட்டுக என்று கேட்டால் தயங்காமல் உளவியல் இலக்கியம் எனக் குறிப்பிடலாம். அகத்திணைப்பாடல்கள் நூற்றுக்கு நூறும் புறத்திணைப்பாடல்கள் நூற்றுக்கு எழுபத்தைந்தும் ‘உளவியல்’ பற்றியனவே ஆகும்.” –------------அறிஞர் தமிழண்ணல். 

திருக்குறள் -சிறப்புரை :979


திருக்குறள் -சிறப்புரை :979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். --- ௯௭௯
பெருமை என்னும் பெருங்குணமாவது  அக்குணத்தைக் கொண்டிருந்தாலும் வெளிப்படுத்திச் செருக்குக் கொள்ளாதிருத்தலாம். சிறுமைக் குணமாவது  பெருமைப்படத்தக்க குணம் ஒரு சிறிதும் இல்லாதிருந்தும் தன்னை முன்னிறுத்தித் தானே செருக்கித் திரிதலாம்.
“ கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும் தான் உரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன் என்று எள்ளப் படும்.” –நாலடியார்.
தாம் கற்ற கல்வியும் மிகுதியான மேன்மையும் நற்குடிப் பிறப்பும்  அயலார் பாராட்ட ப் பெருமை அடையும் ; அந்நற்குணங்களை உடையவன்  தன்னைத் தானே  வியந்து கூறினால், அவன்  மருந்தினாலும் தீராத பித்தன் என்று பிறரால் இகழப்படுவான்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -65

மெய்ப்பொருள் காண்பது அறிவு -65
“ இன்றைய கல்விமுறை நம் மக்களுக்கு மனிதத்தன்மை அளிக்கக்கூடிய கல்வியாக இல்லை. அது முற்றிலும் எதிர்மறைத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எதிர்மறைக் கல்வியைவிடச் சாவே மேலானது. உடன்பாட்டு முறையில் போதிக்க ஆரம்பித்தாலன்றிக் கல்வியால் நாம் யாதொரு பயனும் அடைய முடியாது. வெறும் விஷயங்களை ஒருவனுடைய மூளையில் திணிப்பதால் அவன் எவ்வித அறிவும் பெற்றவனாக மாட்டான். கற்கும் விஷயங்கள்    உயிர் ஊட்டுவனவாய் ; ஊக்கம் அளிப்பனவாய் ; மனிதத் தன்மை தருவனவாய் ; ஒழுக்கம் அளிப்பனவாய் இருக்க வேண்டும்.  அந்நிய ஆதிக்கமின்றி நம் சொந்த அறிவுத்துறைகள் எல்லாவற்றையும் நாம் ஆராய்ச்சி செய்தல்  அவசியம். அதனோடு ஆங்கில மொழியையும் 

மேல்நாட்டு நூல்களையும் கற்க வேண்டும். ” --- சுவாமி விவேகானந்தர்

திருக்குறள் -சிறப்புரை :978


திருக்குறள் -சிறப்புரை :978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.--- ௯௭
பெருமை மிக்க குணங்களைக் கொண்டோர் என்றும் மாற்றாரை மதித்துப் பணிவுடன் நடந்து கொள்வர் ; சிறுமைக் குணம் கொண்டோர் வெட்கமின்றித் தன்னைதானே   வியந்து  புகழ்ந்துரைப்பர்.
” தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச.” –கலித்தொகை.
தம்மைப்பற்றிப் புகழ்ந்து பேசும் புகழுரைகளைக்கேட்டு நாணிய சான்றோர் போல, மரங்கள் தலை சாய்த்து உறங்கின.


திங்கள், 27 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -64

மெய்ப்பொருள் காண்பது அறிவு -64
திருக்குறள் – வாழும் வள்ளுவம்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. –570.
கடுங்கோல் அரசன் நல்லவர்களை நீக்கிவிட்டுக் கல்லாத  அறிவிலிகளைத் தனக்குத் துணையாகக் கூட்டிக்கொள்வான்; அந்தக் கூட்டத்தைத் தவிர நிலத்திற்குச் சுமையாக இருப்பது வேறு ஒன்றும் இல்லை.
 –பேரா. ப.முருகன்.

இந்தோனேசியாவில்…….
ஒரு பல்கலைக்கழக விவுரையாளர் சால்டி  என்பார் 11/2 இலட்சம் ரூபாய் ( 
இந்திய ரூபாய் கணக்கில்) மாத ஊதியம் பெறுகிறார். மேற்கு சுமத்ரா எனும் 
அந்த மாநிலத்தில் ஒரு சட்டசபை உறுப்பினர் அம்மாநிலச் சட்டசபை முடிவு 

செய்தபடி 31/2 இலட்சம் ரூபாய் சிறப்பு ஊதியம் பெறுகிறார். இது அவரது 
வழக்கமான ஊதியம் மற்றும் இதர படிகளை விட அதிகப்படியாகக் கொடுக்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தை அம்மாநிலத்தின் 55 உறுப்பினர்கள் இப்படிச் சொந்தமாக்கிக் கொண்டு செலவு செய்யப்படுவதை எதிர்த்து விரிவுரையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார், எதிர்பார்த்த பலன் ஒன்றும் கிட்டவில்லை. அங்கு சட்டசபையின் அதிகாரம் வானளாவியது. பேராசிரியர் சால்டியும் விடவில்லை. ஒரு பெரிய ஊர்வலத்தைக்கூட்டிச் சட்டசபைக் கட்டிடத்துக்கே சென்று கட்டிடத்தின் உச்சியில் “ இது திருடர்களின் குகை” என்று பெரிய எழுத்தில் அறிவிப்புப் பலகை ஒன்றைக்கட்டிவிட்டு வந்தனர். 

திருக்குறள் -சிறப்புரை :977


திருக்குறள் -சிறப்புரை :977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.--- ௯௭
( தொழிற்று ஆம் ; சிறப்பும் தான் ; சீர் அல்லவர் கண்.)
தகுதி இல்லாதவரிடத்துச் சிறப்புகள் சேருமாயின்  அவை எல்லை கடந்த செயல்களைச் செய்யும்.
“ பொற்கலத்து ஊட்டிப் புறந் தரினும் நாய் பிறர்
 எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் -  அச்சீர்
பெருமை உடைத்தாக் கொளினும் கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும். ---நாலடியார்.
 நல்ல உணவுகளைக் கொடுத்து மேன்மைப் படுத்தினாலும் இழிவான எச்சில் சோற்றுக்குக் கண் இமைக்காமல் காத்திருக்கும் நாயைப் போலவே,  தகுதி இல்லாரைச் சிறப்புள்ளவர்களாக ஏற்றுக்கொண்டாலும் கீழோர்  இழிந்த செயல்களையே செய்வர்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -63

மெய்ப்பொருள் காண்பது அறிவு -63
புலவர் குழந்தை….
”தமிழர் கொள்கையல்லாத வடவர் கொள்கையையே பரிமேலழகர் தம் இயல்புப்படி வலிந்து புகுத்தியுள்ளாரென்க. ‘ அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன்’ என்பதையே வடமொழிக்கு அடிமையான பிற்காலத் தமிழர்கள், ‘ அறம் பொருளின்பம் வீடடைதல் நூற்பயன்’ என்று திரித்துவிட்டனர். வீடும் உறுதிப் பொருளில் ஒன்றென்பது பழந்தமிழர் கொள்கையெனில், வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா? ‘ குன்றக் கூறல்’ என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன? ஆசிரியர் முப்பால் கூறியிருக்க, நாற்பால் எனக் கூறுவது ஆசிரியர் கருத்தறியாமையோடு, ஆசிரியர் கருத்தைத் திரித்துக் கூறித் தமிழரை மயங்க வைத்தலுமாகும்.”
 “அறமாவது மனு முதலிய நூல்களில் வித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்” என்னும் (பரிமேலழகரின்) கூற்றே பொருந்தாப் போலிக்கூற்றாகும். ஆரியக் கொள்கைகளை எப்படியாவது தமிழர் நம்பும்படி செய்துவிட வேண்டும் என்னும் உட்கருத்துடன் கூறப்பட்டதேயாகும் இவ்வுரைப்பாயிரம். மனுவறம் தமிழர்க்கு எவ்வகையினும் பொருந்தாது. இக்கருத்துடன் உரையிற் புகுத்தப்படும் மனுவறங்களைக் களைந்து குறட் கருத்தைக் கொள்ளுதல் வேண்டும்.” 

திருக்குறள் -சிறப்புரை :976


திருக்குறள் -சிறப்புரை :976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. --- ௯௭
(பேணிக் கொள்வோம் என்னும்)
சான்றோராகிய பெரியோர்களைத் தமக்குத் துணையாக்கிக் கொள்வோம் என்னும் எண்ணம் சிறுமைக் குணங்கள்  கொண்டவர்களிடத்தே தோன்றுவதில்லை.
” பெரியார் பெருமை பெரிதே..” –திணைமாலை நூற்றைம்பது.
சான்றோர்தம் பெருமைக்குணம் உண்மையில் கொண்டாடத் தக்கதே.


சனி, 25 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -62

மெய்ப்பொருள் காண்பது அறிவு -62
“Dravidian languages may offer insights into Eurasian prehistory
Study Says They Originated 4500 Years Ago
Chennai: A study on the Dravidian language family by scientists at the Max Planck Institute for the Science of Human History in Germany indicates that it is approximately 4500 years old. A finding that corresponds with earlier linguistic and archaeological studies. A day after the result was published in the journal Royal Society Open Science. The authors of the paper . simon Greenhill and Annemarie Verkerk told TOI that the history of these languages was crucial for understanding the prehistory of Eruasia.”
“Scholars say Dravidians were natives of the Indian sub-continent who had been scattered throughout the country by the time the Aryans entered India around 1500BC.”
  For more information Pl. Read. Times of India. 23/03/18.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்தியா முழுமையும் திராவிடர்கள் (தமிழர்) பரவியிருந்தனர். திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றாலும் திராவிடமொழிகளின் தாயாகிய தமிழ், கால எல்லை வரையறுக்க முடியாத அளவு  தொன்மை வாய்ந்தது என்பதும் உறுதியாயிற்று.---

திருக்குறள் -சிறப்புரை :975


திருக்குறள் -சிறப்புரை :975
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் . --- ௯௭௫
போற்றத்தக்க நற்குணங்களெல்லாம் ஒருங்கே வாய்க்கப்பெற்ற பெருமை உடையவர், செய்தற்கு அரிய செயலையும் எளிதாகச் செய்து முடிப்பர்.
”நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே..” –பதிற்றுப்பத்து.
நிலத்தின் பரப்பு, நீரின் ஆழம், காற்றின் வேகம், வானத்தின் உயர்ச்சி ஆகியன அளத்தற்கு இயலா. அதுபோல அப்பண்புகள் அனைத்தும் கொண்ட உன் (இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்.) பெருமையையும் எவராலும் அளப்பதற்கு அரிது.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -61

மெய்ப்பொருள் காண்பது அறிவு -61
When Chola ships of war anchored on the east coast
 Coast Was A Strategic Gateway For Powerful Navy Of Later Cholas For Trade & Invasion Of Southeast Asian Countries 
WATERWAYS OF ANCIENT TAMILS
Ø The eastern coast of India was a strategic location during the period  of the later Cholas (850 – 1279 AD )
Ø Nagapattinam was an important port that was used for commercial and defence purposes due to  its proximity to Thanjavur and Gangaikondacholapuram, capitals of the Cholas.
Ø List of countries conquered by the Cholas during the period : Cambodia, Indonesia, Myanmar, Malaysia, Sri Lanka, Singapore, Vietnam and Thailand.
Ø Popular kings in the Chola dynasty, who took expeditions overseas to conquer Southeast Asian countries: Raja Raja Chola, Rajendra Chola, and Kulothunga Chola.
Ø Inscriptions engraved  on the walls of Brihadeeswarar Temple, (Big Temple) in Thanjavur enumerate the list of 16 countries conquered by the Cholas.
Ø Ahead of this, Tamils had trade links with rest of the world since the ancient times ; references are available in Sangam-era works like Pattinappalai and Purananuru which are more than 2,000 years ago. 
TOI- 12/03/18 .      

திருக்குறள் -சிறப்புரை :974


திருக்குறள் -சிறப்புரை :974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.--- ௯௭௪
(கொண்டு ஒழுகின்)
கற்பு நெறி வழுவாது தன்னைக் காத்துப் பெருமை பெறும் மகளிரைப்போல, ஒருவன் தன்னுடைய தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவானாயின் அவனும் பெருமை பெறுவான்.
“ முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே.” ---அகநானூறு.
நறுமணம் மிக்க முல்லை மலரை ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத் தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. –தலைவன்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -60

மெய்ப்பொருள் காண்பது அறிவு -60
சில…..சொல்…!
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.—திருக்குறள்.
மாசற்ற சில சொல்லல் தேற்றாதவர்; பல சொல்லக் காமுறுவர்.

கண்ணகியைச் ‘சின்மொழி அரிவை’ என்றார் இளங்கோவடிகள். ‘யார் கொலோ இச் சொல்லின் செல்வன்’ என்று அனுமனை வியந்து போற்றுவார் கம்பர்.

‘சில மொழிகளுள் பல அறிவு நலங்கள் தெளிவாக ஒளி வீசி எவ்வழியும் செவ்வையாய் மிளிர்கின்றன. ‘ Man of few words are the best men’ – சில சொல்வோரே சிறந்த மனிதர் என்கிறார் சேக்சுபியர்.’

‘சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலத்தாற்
சொல்லுக செவ்வி யறிந்து.’

‘படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத்தவர்.’ –ஆசாரக்கோவை.
( படிறு- வஞ்சனை சொல்; பட்டி உரை – நாவடக்கம் இல்லாத சொல் ; வசை – பழிச்சொல் ; புறம் – புறங்கூறல்.)

” உயர்ந்த குறிக்கோள், உறுதியான திடச் சித்தம், தடுத்து நிறுத்த முடியாத மன வேகம் – நாவினால் பேசப்படுகிறது; கண்களின் வழி ஒளிர்கின்றது ; ஒவ்வொரு விவரத்தின் மீதும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி வேகத்துடன் முன்னேற உந்துகிறது ; குறிக்கோளை நோக்கி நேராக முன்னோக்கித் தள்ளுகிறது…இது இதுதான் வாய்மை; சரளம் . இதுவே செயல்; மாவீரம் நிறைந்த புடம் போட்ட தெய்வத்தன்மை வாய்ந்த செயல்.” – டேல் கார்னகி. 

திருக்குறள் -சிறப்புரை :973


திருக்குறள் -சிறப்புரை :973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். – ௯௭௩
(மேல் அல்லார்; மேல் அல்லர் ; கீழ் அல்லார் ; கீழ் அல்லவர்.)
பிறப்பொக்கும் மேன்மை அறியாதார் உயர்குடியில் பிறந்திருந்தாலும் அவர்கள் உயர்ந்தவர்கள் அல்லர் ; எவ்வுயிரையும் தம் உயிர்போல் கருதும் மனம் உடையோர் தாழ்த்தப்பட்டவராயினும் அவர்கள் தாழ்ந்தோர் அல்லர்.
“ நல்லறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனிபெரிதே” –புறநானூறு.
நல்லறிவு உடையவர் மிக்க வறுமையுற்றார் ஆயினும் அவ்வறுமை பெருமைக்குரியது ; அதனை யாம் மிகவும் மகிழ்ந்து போற்றுவோம்.

புதன், 22 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -59


மெய்ப்பொருள் காண்பது அறிவு -59

இசை

தமிழர்தம் தொன்மையான கலைகளுள் இசை சிறப்பிடம் பெறுகிற்து. தொல்காப்பியம் தொடங்கிப் பல இலக்கியங்களிலும் இசை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

“அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணர் …” –மலைபடுகடாம்.

 யாழ் நூலில் கூறியுள்ள இலக்கண மரபுக்கேற்ப, இசைப்பதற்கு ஏற்றவகையில் பேரியாழினை ஆயத்தம் செய்து, இசையை எக்காலத்தும் கேட்டு இன்புறும் செல்வச் சிறப்புடைய அரசர்களின் அவைக்களத்தில், அவர்தம் செவி குளிர இசைக்கும் பல்துறை அறிவுசான்ற பாணர்கள்.

“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பி யாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்” ---புறநானூறு.

போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர், மனையைத் தூய்மை செய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப் பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு.

“ சிற்பம், ஓவியம், நடனம் முதலிய மூன்றும் மற்ற கலைகளுக்கு முந்தியவை. இசை பொருளற்ற குரல் ஒலியாகவும் கருவி ஒலியாகவும் நடனத்துக்குப் பின்னணியாக மட்டுமே இருந்தது,” –நா. வானமாமலை.

” இசை நினைவாற்றலை வலுப்படுத்தும் என்பது அறிவியல் கண்ட உண்மை.” – Nat Geo.

அந்தக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமியர்  இசையோடு வாய்பாடு ஒப்புவித்தல்  நிகழ்த்தியதை ஒப்பு நோக்குக. 23/8/.

திருக்குறள் -சிறப்புரை :972


திருக்குறள் -சிறப்புரை :972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.---- ௯௭௨
( பிறப்பு ஒக்கும் ; சிறப்பு ஒவ்வா)
இந்நிலவுலகில் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் ஒரே தன்மை உடையனவே, எனினும் சிறப்பினால் அஃதாவது, பெருமை, சிறுமை இயல்புகளினால் ஒத்திருப்பதில்லை ஏனெனில், அவை செய்யும் தொழில்களால் வேறுபட்டு விளங்குவதே காரணமாம்.
“ எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.” ---தொல்காப்பியம்.
இன்ப விழைவு என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் மனம் பொருந்திவரும் விருப்பமுடைமை ஆகும்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -58

மெய்ப்பொருள் காண்பது அறிவு -58
 பாண்டியன் மீன் கொடி
”நீரின் மிகத் தொன்மையான உயிரினம்; பெருங் கூட்டமாக வாழும். இயங்கிக் கொண்டே இருக்கும். பிறை வடிவில் அமைந்துள்ள வால் கொண்ட சூறை மீன் ( Sail Fish ) மணிக்கு 80 கி.மீ. வேகத்தில்  நீந்திச் செல்லும் ஆற்றல் உடையது.  காற்றைவிட 800 மடங்கு அடர்த்தி உடையது நீர்; நீரில் உயிர் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. ஆழ்கடலில் எதுவும் உறங்குவதில்லை.” –டிஃச்கவரி-தமிழ்.

“ மீனைப்போல் தங்கள் குலம் பெருக வேண்டும் என்பதற்காக மீனைக் குலக்குறியாகக் கொண்டார்கள். பொதுவாக ஒரு விலங்கு ஏதாவது ஓர் ஆற்றலைக் கொண்டிருந்தால் அந்த ஆற்றல் தங்களுக்கு வேண்டும் என்ற ஆசையால் அதனைக் குலக்குறியாகக் கொண்டார்கள். ஆற்றல் விருப்பம்,  குலக் குறி நம்பிக்கையின் ஓர் அம்சம். மற்றோர் தன்மை குலத்தினுள் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது.
உலகம் முழுவதிலும் இக் குலக்குறி நம்பிக்கை இனக்குழு மக்களிடையே உள்ளது. இந்த நம்பிக்கை வேட்டை வாழ்க்கையிலிருந்தும் பண்டைய பயிர்த்தொழிலிலிருந்தும் தோன்றியது . ”–நா. வானமாமலை. 

திருக்குறள் -சிறப்புரை :971


98. பெருமை
திருக்குறள் -சிறப்புரை :971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். --- ௯௭௧
(அஃது இறந்து)
ஒருவனுக்குப் புகழாவது செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கும் ஆற்றலே ஆகும் . ஒருவனுக்கு இழிவாவது செயலாற்றல் இன்றி வாழலாம் என்று  எண்ணும் எண்ணமாகும்.
“ கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும்….” ---நாலடியார்.
“ கற்ற கல்விபற்றியும் சிறந்த ஒழுக்கம்பற்றியும் குடிப்பிறப்பின் பெருமைபற்றியும் மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதே பெருமை உடையதாம்.


திங்கள், 20 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -57

மெய்ப்பொருள் காண்பது அறிவு -57

“மக்கள்தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” தொல்காப்பியம்.

முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்கள் எனப்படும். அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப்பிறப்பினுள் சேர்த்திக் கொள்ளவைத்தான் என்பது அவை ஊமும் செவிடும் குருடும் போல்வன. கிளையெனப்படுவார் தேவரும் தானவரும் முதலாயினார், பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மன உணர்வு உடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆற்றிவுயிராய் அடங்கும் என்பது தாமே எனப்பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையாரென்றற்குச் சிறந்தார் என்பதும் கொள்க.—பேராசிரியர்.

“ ஒருசார் விலங்கும் உளவென மொழிப.”—தொல்காப்பியம்.
விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு. அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின.”—இளம்பூரணர்.

உயிர்

அணு முதல் மனிதன் வரையுள்ள உடல் வளர்ச்சியையும் உயிரியல் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கமுடியும். மூளையின் செயற்பாட்டை அறியாத காரணத்தால் சீவன், புத்தி, மனம், நினைவு முதலிய கற்பனைகளை நமது பண்டைய தத்துவவாதிகள் படைத்தனர்.

இன்று உயிர் என்றால் ஏதோ புரியாத ஒன்றாக இருக்கவில்லை. இது உடல் என்ற மிகச்சிக்கலான பொருளமைப்பின் ஒரு பண்பு. இது உடலினுள் நடைபெறும் உயிரியல் இரசாயன மற்றங்களின் ஒரு தொகுப்பு (Totality) . இம்மாறுதல் வரிசைத்தொடர் மாறி, திசைமாறிச் சென்றுவிட்டால் மாறுதல்  நின்றுபோய்விடும் போய்விட்டால்  அணுக்கள் (செல்கள்) வாழமாட்டா. அவை பிரிந்து வேறு எளிய பொருள்கள் தோன்றத் தொடங்கும் இதுதான் சாவு.
 செல்லிலிருந்து மனிதன்வரை ஏற்பட்ட வளர்ச்சியை டார்வின் முதல் ஃகால்டேன் வரை விளக்கியுள்ளார்கள். இம்மாறுதல்களின் அடிப்படைப் பொதுவிதிகளை டார்வின் நிறுவியுள்ளார்.” எங்கெல்சு. 

திருக்குறள் -சிறப்புரை :970


திருக்குறள் -சிறப்புரை :970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.---- ௯௭0
தன்மானத்திற்கு ஒருசிறிது இழுக்கு நேரினும் உயிரை நீத்துவிடும் இயல்புடையாரின் பெருமையைப் போற்றிப் புகழ்வர் இவ்வுலகோர்.
” கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.” –புறநானூறு.
நல்வினை ஆற்றி, இமயமலையின் ஓங்கிய சிகரம் போன்று தம் புகழை நிலைநிறுத்திப் பழியற்ற உடலோடு சாதல் நன்று.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -56

மெய்ப்பொருள் காண்பது அறிவு -56

மெய்யறிவு  (தத்துவ ஞானம்)

”உன்னை அறிந்துகொள்” – என்பது சாக்ரடீசு தத்துவ ஞானத்தின் முதற் கோட்பாடாகும்.

“ தத்துவ ஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே.”- மார்க்சு

 எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்துச் சாதிக்க விரும்புகிறமோ அவற்றைப்பற்றி நாம் பெற்றிருக்கும்  ஞானம்தான் தத்துவம் எனப்படுவது.

” தத்துவ ஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது.
 தத்துவ ஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே.” –  மார்க்ஸ்.
ஜோஃபிஃச்தே : (  Fichte, 1762-1814) செர்மன் தத்துவ ஞானி.

“தத்துவ ஞானம், “ மனித அறிவின் எல்லா அடிப்படை அம்சங்களையும் முடிவாகத் தருகிறது….. ஒரு பிரச்சனையைப் பற்றிச் செய்யப்படுகிற ஒவ்வொரு ஆராய்ச்சியும் அப்பிரச்சனைக்கு இறுதியான தீர்வு கண்டுவிடுகிறது.”

“ இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவ ஞானம். இந்த விஞ்ஞானம் மனித இனம் சேமித்து வைத்துள்ள அறிவு அனைத்திலிருந்தும் பெறப்பட்ட முடிவு ஆகும்.” –மார்க்ஸ்.

 ஜே.பி.எஸ். ஹால்டேன் ( Haldane ) ஆங்கில உடலியல் விஞ்ஞானி.

“இயக்கவியல் பொருள்முதல் வாதத்தில் படிப்படியாக அதிகரித்துவந்த எனது அறிவு, நான் அண்மையில் பிரசுரித்துள்ள விஞ்ஞான ஆய்வுகளில் பெரும்பகுதியை நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்தது. விஞ்ஞான ஆராய்ச்சிப் பணிபுரிவதற்கு இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு பயனுள்ள சாதனம் என்பதை நான் காண்கிறேன்.” 

திருக்குறள் -சிறப்புரை :969


திருக்குறள் -சிறப்புரை :969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.--- ௯௬௯
கடுங்குளிர் நிலத்தில் வாழும் கவரிமா என்னும் விலங்கு, உறைபனியில் உறைந்துபோகாமல் உடல்முழுதும் நிறைந்த மயிர், உயிர் காக்கும். அவ்விலங்கின் மயிர் நீங்குமேயானால் பனியில் உறைந்து உயிர் போகும் அதுபோல் மானத்தை உயிராகப் போற்றி வாழ்பவர்கள் மானம்கெடும் நிலைவந்தால்  உயிரை மாய்த்துக்கொள்வர்.
(கவரி மா--- ”யாக்” என்னும் எருமை இனத்தைச் சார்ந்த ஒருவகை விலங்கு)
“ கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.” ---நாலடியார்.
காட்டில் இருக்கின்ற புலியானது தான் வேட்டையாடிய காட்டுப் பசு இடப்பக்கம் வீழ்ந்தால் அதனை உண்ணாது இறந்துவிடும். அதுபோல் மானமுள்ளவர்கள் அகன்ற இடத்தையுடைய  வானுலகமே (சுவர்க்கம்) கைவரப்பெறினும் மானம் கெடும் நிலைவந்தால் அந்த உயர்ந்தோர் உலகத்தையும் விரும்பமாட்டார்கள்.

சனி, 18 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -55

மெய்ப்பொருள் காண்பது அறிவு -55
கடவுள்
”ஹெகலைப் பொறுத்தமட்டில் ‘கடவுள் இருப்பதைப்பற்றிய நிரூபணங்கள்’ தொடர்பாக மார்க்ஸ் அவரையும் விமர்சனம் செய்கிறார். இந்த ‘நிரூபணங்களை’ காண்ட் ஏற்கெனவே மறுத்துவிட்டார். ஆனால் ஹெகல் அவற்றைத் தலைகீழாக நிறுத்திவிட்டார். ‘ அதாவது அவற்றை நியாயப்படுத்துவதற்காக நிராகரித்துவிட்டார.’ ‘ ஆதரித்து வாதாடுகின்ற வழக்குரைஞர் தம்முடைய  கட்சிக்காரர்களைத் தாமே கொலை செய்வதன் மூலமாகவே அவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியுமென்றால் அந்த நபர்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்…?’ என்று மார்க்ஸ் கிண்டலாகக் கேட்கிறார்.

‘கடவுள் இருப்பதைப்பற்றிய நிரூபணங்கள்’, உண்மையில் தலைமையான மனித உணர்வு இருப்பதைப்பற்றிய நிரூபணங்களே என்று எடுத்துக்காட்டுகிறார். இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் என்று ‘நிரூபணங்களில்’ ஒன்று கூறுகிறது. ஆனால் இயற்கை அமைப்பின் ‘பகுத்தறிவுத்  தன்மை’ கடவுள் மிகையானவர், கடவுள் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது.

‘கடவுள் இருக்கிறார்’ என்பதற்கு மெய்யான நிரூபணங்கள் பின்வருமாறு கூறவேண்டும்., ‘ இயற்கை மோசமாக அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார்’, ’உலகத்தில் பகுத்தறிவு இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்.’ ‘சிந்தனை இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்..’
“உலகம் பகுத்தறிவுடன் தோன்றவில்லை என்பவருக்கு…. அவருக்குக் கடவுள் இருக்கிறார். அல்லது பகுத்தறிவு இல்லாததனால் கடவுள் இருக்கிறார்.’”

இந்த முடிவு அக்காலத்துக்கு முற்றிலும் துணிவானதாகும்.
 மனித சுய உணர்வே ‘ உயர்ந்த கடவுள்’  ‘ அதைத்தவிர வேறு எதுவும் கிடையாது.” என்று மார்க்ஸ் உறுதியாகப் பிரகடனம் செய்தார். ‘ உன்மையைச் சொல்வதென்றால்  நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்,’ என்று புரோமித்தியஸ் துணிச்சலாகக் கூறுயதை. ‘ வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் எதிரானதாக’ அவர் திரும்பினார். இந்தத் துணிவான கருத்து மத எதிர்ப்பு மட்டுமல்லாமல் அரசியல் தன்மையும் கொண்டிருந்தது.’”  ---நூல் : மார்க்ஸ் பிறந்தார்.