செவ்வாய், 30 மே, 2023

செம்மொழித் தமிழ்

 

செம்மொழித் தமிழ்

1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் அரிய ஆய்வு நூலை வெளியிட்ட அறிஞர் கால்டுவெல் “ திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும்” என்று எழுதியுள்ளார்.

திங்கள், 22 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 33. தொல் தமிழர் வாழ்வியல்.

 


 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 33.

தொல் தமிழர் வாழ்வியல்.

 

இலெமூரிய மக்கள் பல கலைகளில் தேர்ச்சியுற்றிருந்தனர். உடல் நோகாமல் உயிரைவிடும் ஆற்றல், இது தற்கொலையன்று; வடக்கிருத்தல் போன்றது. இறந்தவர் உடலை கெடாது பல்லாண்டு பாதுகாத்தக்கும் முறைகளைக் கற்றுக்  கொண்டிருந்தனர்.

தற்காப்புக்கலையில் உலகை மயக்கிய புரூஸ்லீ 32 வயதில் மரணம் அடைந்தார் அவர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று இன்றுவரை மர்மாகவே நீடிக்கிறது. புரூஸ்லீ தன்னுடைய குறிப்பேட்டில்  தற்காப்புக்கலை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் மரபை மாற்றித் தான் பல புதுமைகளைப் புகுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார் .

 

சனி, 20 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 32. தொல் தமிழர் வாழ்வியல்.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 32.

தொல் தமிழர் வாழ்வியல்.

 

திருமணம்

பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் திருமணத்தின் போது மணமகளின் முகத்தைத் திரைபோட்டு மறைக்கும் வழக்கம் இருந்தது. அந்நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. அதுபோல் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மீது அரிசி தூவும் வழக்கமும் இன்றுவரை தொடர்கிறது. வளமாக வாழவேண்டும் என்பதற்கான அடையாளம் இது.

 

 

வியாழன், 18 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 31. பதின்ம எண்முறை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 31.

பதின்ம எண்முறை

இன்று புழக்கத்திலிருக்கும் பதின்ம எண்முறை (  Decimal Number 

System ) இந்தியாவில்தான் தோன்றியது. பின்னர் அது அரபு வழியாக 

ஐரோப்பாவுக்குப் பரவியது. கி.பி. 7 இல் சிரியன் பாதிரியார் செவரஸ் 

 செபோக் ( Syrian bishep Serverus Sebokht   ) இந்தியர்கள் ஒன்பது 

எண்களுக்குக் குறியீடுகளையும் கொண்டிருந்தனர் என்று 

குறிப்பிடுகிறார். எனினும் பதின்ம எண் மதிப்பு முறை யாரால் 

கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிய முடியவில்லை என்கிறார்கள்.

( பதின்ம எண் மதிப்பு முறை தொல்காப்பியர் உலகுக்கு வழங்கிய 

கொடை என்பதை “ புள்ளி” என்னும்  ஆய்வுக்கட்டுரையை  என் 

‘உயிருக்குநேர்’ நூலில் விளக்கியுள்ளேன்.)

 

செவ்வாய், 16 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 30. உழவன் கணக்கு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 30.

உழவன் கணக்கு

360- நெல் ---1 செவிடு

4-செவிடு – 1 –ஆழாக்கு

2—ஆழாக்கு ----1-உழக்கு

2. உழக்கு ----1.---உரி

2.-உரி-----1. நாழி

4- உழக்கு – 1-நாழி

8-நாழி--- 1. மரக்கால்

4.படி ---1. மரக்கால்

12- மரக்கால் ---1,கலம்

24- மரக்கால் ---1. மூட்டை

2 ½ - மூட்டை --- 60.- மரக்கால்- 1.- உறை

18. மரக்கால் ----1.- கோட்டை

6. மரக்கால் ----1- பறை

2. பறை -  1. கலம்

 

 

திங்கள், 15 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 29. இன்றைய எழுத்து வடிவம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 29.

இன்றைய எழுத்து வடிவம்

“ சோழர்கள் காலத்தில் இன்றைய

தமிழ் எழுத்தின் வடிவம் செப்பமுறத் தொடங்கியது. தொல்காப்பியர் காலத்துக்கும் முந்தைய கி.மு. 1800 அளவில் தோன்றிய 12, உயிரும் 18, மெய்யும் மூன்று சார்பெழுத்துக்களும் கொண்ட எழுத்தமைப்பு கடந்த 3800 ஆண்டுகளாகத் திரிபின்றிக் காக்கப்பட்டிருப்பது உயர்தனிச் செம்மொழியாய்த் தமிழ் வளர்ந்து வந்ததைக் காட்டுகிறது.” பேரா. இரா. மதிவாணன்.

 

ஞாயிறு, 14 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 28. மாத்திரை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 28.

மாத்திரை

“தமிழில் எழுத்துவடிவுக்கும் எண் வடிவுக்கும் இசைவடிவுக்கும் நெருங்கிய தொடர்பு தொன்றுதொட்டு உண்டு.

‘ககரங் கொட்டெ எகரம் அசையே

ஏகாரம் தூக்கே  அளவே ஆய்தம்’

என்பது அடியார்க்குநல்லார் மேற்கோள். இவை மாத்திரைப் பெயர்கள், கொட்டு அரை மாத்திரை அதற்கு வடிவு – க ; அசை ஒரு மத்திரை , அதற்கு வடிவு – எ; தூக்கு இரண்டு மாத்திரை அதற்கு வடிவு – உ, அளவு மூன்று மாத்திரை அதற்கு வடிவு – ஃ எனகொள்க’ என்பது நல்லாரின் விளக்கம். – அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

சனி, 13 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 27. சிந்துவெளி

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 27.

சிந்துவெளி

“ தெற்காசிய பகுதியில் தோன்றிய மிகப்பெரிய நகரிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகமாகும். சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 2600 – 1900 இக்காலப்பகுதியில் செழித்து சிறந்து விளங்கியது  அரப்பன் நாகரிகம் .

1) சிந்துவெளி எழுத்துக்களை எழுபது வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர். எனினும் அவ்வெழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. ஏனெனில்  சிந்துவெளி எழுத்துக்கள் – குறியீடுகள்.

அவை: மிகச்சிறியவை, சுருங்கக்கூறும் தன்மையுடையவை; ஐந்துமுதல் 26 வரையிலான குறியீடுகள்.

2.) இவை எம்மொழிக்குரியவை என்பது தெரியவில்லை.

3) இரு மொழி தன்மையற்றவை. இதன் மொழி வேறு எந்த மொழியுடனும் தொடர்பற்றதாக இருக்கிறது ; பொருள், தனித்த தன்மை உடையது.

 எனினும் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட மொழிக்குக் குறிப்பாகத் தமிழுக்கு  நெருக்குமானவையாக (இலக்கண அடிப்படையில்) இருக்கின்றன. எண்கள் செங்குத்துக் கோடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கம் தமிழர்களீடம் இருந்ததை சங்க இலக்கியம் (அகநானூறு ) வழி அறியலாம்.”

 

வெள்ளி, 12 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 26. குமரிக்கண்டம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 26.

குமரிக்கண்டம்

“iஇலெமூரியா, ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி, இந்துமாக்கடல், தெற்கு ஆசியா, பசிபிக் கடலின் தென்பகுதி, ஆஸ்திரேலியா ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

அந்நாளில் நீர்மட்டத்திற்கு மேல் உயர்ந்த பகுதி இலெமூரியா ஒன்றே, எஞ்சியவை நீருள் / சதுப்பு நிலத்தில் இருந்தன.

மனித வாழ்க்கை, உயிர் வாழ்க்கைக்கும் முதல் பிறப்பிடம் இலெமூரியா. மடகாஸ்கர் தீவும் தென் இந்தியாவும் பசிபிக்தீவுகளில் பலவும் இலெமூரியாவின் மீந்த பகுதிகள்.”

வியாழன், 11 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 25. குமரிக்கண்டம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 25.

குமரிக்கண்டம்

”உலக வரளாற்று ஆய்வின்படி தென் இந்தியா 1 ½ இலட்சம் அல்லது 2 இலட்சம் ஆண்டுகளாக நிலப்பகுதியாக இருந்து வந்திருக்கிறது.

ஆரியர் இந்தியா வந்தது கி.மு. 1500 / 2000/ 3000- இருக்கலாம். இதன் பின்னரே இருக்கு வேதம் தோன்றியது. அதற்கு முன்பே தமிழர் நாகரிகம்கொண்டிருந்தனர்.  உயிரின வகைகளை வைத்து ஆராய்ந்தால் ஆப்பிரிக்கா கண்டம் இந்தியாவுடன் ஒத்திருக்கிறது. இலெமூரியா ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திரிருக்க வேண்டும் . இந்தியாவுடன் கிழக்கிந்திய தீவுகளும் ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதால் இலெமூரியா ஆஸ்திரேலியா வரை நீண்டிருக்க வேண்டும். பசிபிக் தீவுகள் வட அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியுடன் ஒத்திருப்பதால் இலெமூரியா அதனை ஒருவகையில் உள்ளடக்கியிருந்தது.

ஆல்பிரட் வால்ஸ் இலெமூரியா கண்டம் பிற்றை நாட்களில் இருபிளவாகப் பிளந்து இரு கண்டங்களாகிவிட்டது.

இலெமூரிய நாகரிகம் 20,000  - 50,000 ஆண்டுகளாக இருக்கலாம்.”

புதன், 10 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 24. குமரிக்கண்டம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 24.

குமரிக்கண்டம்

யூப்ரடீஸ்- டைகிரீஸ் நதிப்பள்ளத்தாக்கு நிலப்பகுதி மெசபடோமியா. 

இது 

சுமேரிய நாகரிகத்தின் தொட்டில். இந்நாகரிகம் கி.மு. 4000- 

ஆண்டுகட்கும் முற்பட்டது. இந்நாகரிக நாட்டின் தலைநகர் ‘ஊர்’ –

தமிழ்ச்சொல். குமரிக்கண்டத்திலிருந்து சென்றதால்தான் குமரிய – 

சுமேரியா என்றாகியது.

 (V.R. Ramachandra Dekshider, The Origin and Spread Of Tamils.)

 

செவ்வாய், 9 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 23. சுழி வடிவம்.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 23.

சுழி வடிவம்.

“பதின்ம எண்முரை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்த பிராமி எண்முறையிலிருந்து தோன்றியது. இதற்கான சான்றுகள் குகைக் கல்வெட்டுக்களிலும் காசுகளிலும் கிடைத்துள்ளன. கி.பி. 4 – 6  குப்தர் காலத்தில் பிராமி எண்முறை பரவலாக்கப்பட்டது.

கி.மு முதல் நூற்றாண்டிலியே இந்தியர்கள் சுழியைக் குறிப்பிட ஒரு புள்ளி இட்டுள்ளனர். கி.மு. 3இல் பக்‌ஷாலி, சூன்ய, ஸ்தான என இதைக் குறிப்பிட்டுள்ளனர் என்று கருதுகின்றனர்.

சுழிக்குப் பதிலாக ஆரியப்பட்டர் ‘க’ என்ற எழுத்தைப் பயன்படுத்தியுள்ளார். கி.பி. 876 விக்ரம நாட்காட்டியில் சுழி   

(0) இவ் வடிவில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.”

திங்கள், 8 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 22. புள்ளி வடிவம்.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 22.

புள்ளி வடிவம்.

“ தொல்காப்பியர், உயிரெழுத்துக்களை உயிர் என்று குறியீட்டுச் சொல்லாலேயே குறிப்பிடுகிறார். மெய்யெழுத்துக்களைப் புள்ளி, மெய், ஒற்று என்று மூன்று குறியீடுகளால் வழங்குகிறார். மெய்யெழுத்துக்களை வரிவடிவத்தில் எழுதும்பொழுது புள்ளியை இடுவதால் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி என்று பெயர் அமைக்கப்பெற்றது என விளக்கங்கூறி ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’  என்றார். உயிர் மயங்கியல் என்று கூறியவர்  மெய் மயங்கியல் என வைக்காமல் ‘புள்ளி மயங்கியல் என்னும் புதுக்குறியீடு வைத்துள்ளார்.”

 

சனி, 6 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 20. புள்ளி வடிவம்.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 20.

புள்ளி வடிவம்.

புள் – புள்ளி . புள் = சிறு கட்டை. (கிட்டிப்புள் விளையாட்டில் இடம்பெறும் சிறு கட்டை)

“பழைய கல்வெட்டுக்களில் தோன்றுகின்ற புள்ளி ஈண்டு நாம் பார்க்கும் தலை விரிந்து அடிகுறுகிய வடிவினது.ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நந்தி விக்ரவர்மன் காலத்தில் எழுந்த கல்வெட்டுக்கள் இதற்குச் சான்றாகும். எனினும் இதன் பிறகு எட்டு நூற்றாண்டளவு புள்ளி என்பது மறைந்து போய்  இக்காலத்தில் வட்டவடிவினதாய்த் தோன்றியுளது.ஆதலின் பழந்தமிழர் மெய்யெழுத்திற்கு இட்ட புள்ளி நீண்ட இலிங்க உருவானதே என்று காணக் கிடக்கின்றது. – பா.வே. மாணிக்க நாயக்கர்.

வெள்ளி, 5 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19. ஒலி அளவு – மாத்திரை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19.

ஒலி அளவு – மாத்திரை

மாத்திரை என்பது குறியீடு, இது ஒலியளவுக்கு வரும்.

“கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.”-7.

இயல்பாகக் கண் இமைத்தலும் விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெலிவாக அறிந்தோர் கண்ட வழி.

”கண்ணிமை இயற்கை தொழிற்காலம்; நொடி செயற்கை ஓசைக்காலம் இரண்டுமே கால அளவைக்குறிக்கும்.  இமைப் பொழுது, நொடிப்பொழுது என்பது வழக்கு. ஈண்டுக் கூறும் ஒரு மாத்திரைக்குரியது.” அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

“மெய்யின் அளபே அரை என மொழிப.” -11.

இது மெய்க்கு மாத்திரை அரை என மொழியும்.

”அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.”-12.

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் மூன்றும் மெய் எழுத்துப் போல அரை மாத்திரை பெற்று நிற்கும்.

“ அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே

இசை இடன் அருகும் தெரியும் காலை” -13.

மகரம்:

அரை மாத்திரையாக இருக்கும் மகர மெய்க்கும் கால் மாத்திரையாக ஒலிக்கும் மகரக்குறுக்கத்திற்கும் வரி வடிவில் ஒரே ஒரு வேறுபாடு உண்டு; இயல்பான மகரமெய்க்கு உரிய வடிவின் மேல் ஒரு புள்ளி இருக்கும் (ம்). குறுகிய மகர மெய்க்கோ உரிய வடிவின் உள்ளே அப்புள்ளி இருக்கவேண்டும்.

தொல்காப்பியர் எழுத்துக்களின் வரி வடிவகள் குறித்துப் பின்வருமாறு  கூறுவார்.

“ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன”

” மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.”-15

“ எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.”-16.

புள்ளி இல்லா எல்லா மெய்யும்

வேற்றுமை வழியே மெய் புணர் நிலையே”.

என்பார்.

மூவளபு இசைத்தல் ஓர் எழுத்தின்றே”-5

ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையாக இசைத்தல் இல்லை. எனவே பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்றவாறு.

“நீட்டம் வேண்டின்  அவ்வளபு உடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.”.-6.

தாம் கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக்கூட்டி மாத்திரைகளை எழுப்புக என்று கூறுவர்.

வியாழன், 4 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19. ஒலியன்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19.

ஒலியன்

ஒலியனாவது தனக்கென்று பொருண்மையும் இன்னொன்றினை வேறுபடுத்திக்காட்டும் முரண்மையும் உடையது.

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் ”-15.

இஃது உயிர் மெய்யொடு தனி மெய்யிடை வடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று. (தனி மெய்யினது இயல்பு புள்ளியொடு நிற்றல்; உயிர் மெய்யினது இயல்பு புள்ளியின்றி நிற்றல்.)

மகரத்தின் வடிவம்.

“உட்பெறு புள்ளி உருவா கும்மே” -14.

இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது. புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம்.

 

புதன், 3 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 18. சிந்துவெளி எழுத்துகள் - ஒலி அளவு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 18.

      சிந்துவெளி எழுத்துகள் - ஒலி அளவு

“இரண்டு குறில் எழுத்துகளைச் சேர்த்து நெடில் எழுத்து உருவாக்கினார்கள். சான்றாக, இரண்டு அகரங்களை எழுதினால் ஆகார நெடிலாகும். இந்த வழக்கம் சிந்துவெளி முத்திரைகளில் இருப்பதை எடுத்துக்காட்டலாம்.

அரை மாத்திரையைக் குறிக்க  ஒரு பக்கக்கோடும் ஒரு மாத்திரையைக் குறிக்க இரு பக்கக்கோடும் ஆளப்பட்டுள்ளன.

 இசையை முதன்மைப் படுத்தியவர்கள்தான் எழுத்துகளுக்கு மாத்திரை அளவாகிய நேரத்தை வகுக்கமுடியும்.

உலகில் வேறு எந்த மொழியினரும் எழுத்துகளை ஒலிப்பதற்கு உரிய காலத்தை மாத்திரை என்னும் அளவாகக் குறிப்பிட்டுக் காட்டவில்லை.” பேராசிரியர், இரா. மதிவாணன்.

 

செவ்வாய், 2 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 17.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 17.

”சிந்துவெளி நாகரிகம், நகர நாகரிகமாக இருந்தாலும் மக்களின் இன்றியமையாத்தொழில் உழவுத் தொழிலே. உழவுத் தொழிலின் அடிப்படையிலேயே அம்மக்களின் வானியல் அறிவும் வளர்ந்து வந்துள்ளதாக வால்டர் எஃபேர் செவ்விஸ் கூறுகிறார்.” 

– முனைவர் பெ.துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள்,(2005).