வெள்ளி, 5 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19. ஒலி அளவு – மாத்திரை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 19.

ஒலி அளவு – மாத்திரை

மாத்திரை என்பது குறியீடு, இது ஒலியளவுக்கு வரும்.

“கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.”-7.

இயல்பாகக் கண் இமைத்தலும் விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெலிவாக அறிந்தோர் கண்ட வழி.

”கண்ணிமை இயற்கை தொழிற்காலம்; நொடி செயற்கை ஓசைக்காலம் இரண்டுமே கால அளவைக்குறிக்கும்.  இமைப் பொழுது, நொடிப்பொழுது என்பது வழக்கு. ஈண்டுக் கூறும் ஒரு மாத்திரைக்குரியது.” அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

“மெய்யின் அளபே அரை என மொழிப.” -11.

இது மெய்க்கு மாத்திரை அரை என மொழியும்.

”அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.”-12.

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் மூன்றும் மெய் எழுத்துப் போல அரை மாத்திரை பெற்று நிற்கும்.

“ அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே

இசை இடன் அருகும் தெரியும் காலை” -13.

மகரம்:

அரை மாத்திரையாக இருக்கும் மகர மெய்க்கும் கால் மாத்திரையாக ஒலிக்கும் மகரக்குறுக்கத்திற்கும் வரி வடிவில் ஒரே ஒரு வேறுபாடு உண்டு; இயல்பான மகரமெய்க்கு உரிய வடிவின் மேல் ஒரு புள்ளி இருக்கும் (ம்). குறுகிய மகர மெய்க்கோ உரிய வடிவின் உள்ளே அப்புள்ளி இருக்கவேண்டும்.

தொல்காப்பியர் எழுத்துக்களின் வரி வடிவகள் குறித்துப் பின்வருமாறு  கூறுவார்.

“ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன”

” மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.”-15

“ எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.”-16.

புள்ளி இல்லா எல்லா மெய்யும்

வேற்றுமை வழியே மெய் புணர் நிலையே”.

என்பார்.

மூவளபு இசைத்தல் ஓர் எழுத்தின்றே”-5

ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையாக இசைத்தல் இல்லை. எனவே பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்றவாறு.

“நீட்டம் வேண்டின்  அவ்வளபு உடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.”.-6.

தாம் கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக்கூட்டி மாத்திரைகளை எழுப்புக என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக