வியாழன், 11 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 25. குமரிக்கண்டம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 25.

குமரிக்கண்டம்

”உலக வரளாற்று ஆய்வின்படி தென் இந்தியா 1 ½ இலட்சம் அல்லது 2 இலட்சம் ஆண்டுகளாக நிலப்பகுதியாக இருந்து வந்திருக்கிறது.

ஆரியர் இந்தியா வந்தது கி.மு. 1500 / 2000/ 3000- இருக்கலாம். இதன் பின்னரே இருக்கு வேதம் தோன்றியது. அதற்கு முன்பே தமிழர் நாகரிகம்கொண்டிருந்தனர்.  உயிரின வகைகளை வைத்து ஆராய்ந்தால் ஆப்பிரிக்கா கண்டம் இந்தியாவுடன் ஒத்திருக்கிறது. இலெமூரியா ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திரிருக்க வேண்டும் . இந்தியாவுடன் கிழக்கிந்திய தீவுகளும் ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதால் இலெமூரியா ஆஸ்திரேலியா வரை நீண்டிருக்க வேண்டும். பசிபிக் தீவுகள் வட அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியுடன் ஒத்திருப்பதால் இலெமூரியா அதனை ஒருவகையில் உள்ளடக்கியிருந்தது.

ஆல்பிரட் வால்ஸ் இலெமூரியா கண்டம் பிற்றை நாட்களில் இருபிளவாகப் பிளந்து இரு கண்டங்களாகிவிட்டது.

இலெமூரிய நாகரிகம் 20,000  - 50,000 ஆண்டுகளாக இருக்கலாம்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக