தமிழமுது –243– தொல்தமிழர் இசை மரபு:103, நீட்சியும் - வீழ்ச்சியும்.
நீட்சிப் பதிவேடு - தொல்காப்பியம்.
்
் தொல்காப்பியர் பாரத காலமாகிய கி.மு. 1500க்கு முற்பட்டு வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்கள் துணிபு. தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமன்று ; மொழியியல், இலக்கியவியல், வாழ்வியல், உலகவியல், உயிரியல், உளவியல் முதலிய பல்துறைகளையும் கொண்டு ஒளிரும் தனிப்பெரும் முதல் நூலாகும்,தொல்தமிழர் இசை மரபு என்று,எங்கு, எப்பொழுது தோன்றியது என்று கணித்தற்குவியலா காலப் பழமையுடையதாகும். தொல்காப்பியம் தொல்தமிழின் ஒரு வரலாற்றுப் பதிவேடு எனக் கூறத்தகுந்ததாகும்.
தொல்காப்பியரின் “ பொருளிலக்கணம் தமிழிலன்றி வேறெம்மொழியிலுமில்லை.” மொழி ஞாயிறு பாவாணர் மேலும் தொல் தமிழர் இசைமரபின் நீட்சியானது அவர்காலத்திற்கு முன்பே செழித்திருந்தது என்பதைத் தொல்காப்பியர் விரிவாக எடுத்தியம்பியுள்ளார்.
”தமிழர் இன்னிசைக் கலையிலும் நாடகக் கலையிலும் சிறந்திருந்ததினால், மொழியொடு அவ்விரு கலைகளையும் சேர்த்து, தமிழை இயலிசை,நாடமென முத்தமிழாய் வழங்கினர். இத்தகைய மொழியமைப்பும் வேறெங்கணுமில்லை. தமிழர் இயலுமிடமெல்லாம் தம் வினைகளை இசையொடு செய்து வந்தனர் என்பது, தாலாட்டுப் பாட்டு, ஏர்மங்கலப் பாட்டு, நடவைப் பாட்டு முகவைப் பாட்டு, ஏற்றப் பாட்டு, ஏலப் பாட்டு, வள்ளைப் பாட்டு, கழியற் பாட்டு, கும்மிப் பாட்டு, கோலாட்டப் பாட்டு, ஊஞ்சற் பாட்டு, வழிநடைச் சிந்து, ஒப்புப் (ஒப்பாரி) பாட்டு முதியவற்றால் அறியப்படும். முதலிரு கழகங்களிலும் இருந்த இலக்கணமெல்லாம் முத்தமிழிலக்கணங்களே. இயற்றமிழ் இலக்கணம் பிண்டம் என்றும், முத்தமிழிலக்கணம் மாபிண்டம் என்றும் கூறப்பெறும். என்று பாவாணர் ஆய்வுரை வழங்கியுள்ளார்.”
.......................................தொடரும்...............................