வெள்ளி, 26 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 1

 

சான்றோர் வாய் (மை) மொழி : 1

பழமொழிகள்………………………………… அன்பிற்கினிய  நண்பர்களுக்கு இனிய வணக்கம்…! சான்றோர் வாய்(மை) மொழி என்னும் புதிய தொடருக்கு என் வலைப்பூவழங்கி உங்களை அன்புடன் அழைக்கிறேன். 26 -07 – 2024, முதல் வருக வருகவே..!

பல தலைமுறைகள் கடந்தும் காலத்தால் அழியாது வழக்கிலிருந்து வருகிறது. இக்கூற்றுக்கு உரியவர் யாரோ யார்  அறிவார்..?

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்லை எழுதி வெச்சு பழக்கமில்லை
இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லை
கவிஞர் வைரமுத்து.

இப்படியாகப் பாடுபடும் மக்களின் பட்டறிவில் தோன்றியதுதான் பழமொழி. பழமொழியின் தொன்மை வளமறிந்த தொல்காப்பியர்  இதனைமுதுசொல்என்றார்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.”

 அகத்தின் அழகு என்பது உளவியல், உடலியல் எனும் இரண்டையும்  உள்ளடக்கியதாகும். அதனால் தான் திருவள்ளுவர் அகமாகிய மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்றார்.

மனத்தின் பிறழ்வு நிலைகளை முகம் காட்டிக்கொடுக்கும். மனத்தில் குழப்பம், கவலை, விருப்பு, வெறுப்பு, சினம், வெறி  இன்னபிற  பிறழ்வு நிலைகளை முகம் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் தன்னகத்தே கொண்ட எண் சாண் உடம்புக்குத் தலையே தலைமைச் செயலகம்.  தலையும்  தன்னிலை உணர்த்தும் தலை சுற்றல், மயக்கம், வலி முதலிய குறிகள் நோய்க்குறிகளாகும் . உடலில் தோன்றும்  மாறுபாடுகளை உணர்த்தும் முதன்மை கருவி முகமேயாகும்.  உடலுக்கு ஒவ்வாத குளிர், வெம்மை முதலிய குறைபாடுகளை உணர்த்துவது மெய் ;  உணவின் ஒவ்வாமையை உணர்த்தும் உமிழ் நீர், குமட்டல், தொண்டைப்புண் முதலியவற்றை உணர்த்துவது வாய் ;  உடலின் உள்ளுறுப்புகளின் மாறுபாட்டை   கண் சிவத்தல், மஞ்சள் படர்தல், நீலநிறம் கொள்ளல் இன்னபிற நோவுகளை உணர்த்துவது கண் ;  சுற்றுச்சூழல் ஒவ்வாமையால் நீர் வடிதல், மூச்சு விடமுடியாமல் அடைப்பு ஏற்படல், காரமான தும்மல் மேலும் பல குறிகளைக் கொடுப்பது மூக்கு ;  செல்வத்துள் சிறந்த செல்வமாகிய செவி உடல் இயக்கத்தில் பெறும் பங்காவது செவிப்பறையில் அளவான நீரின்றேல் மனிதனால் நிலையாக நடக்கமுடியாது, சீழ்வடிதல், வலி ஏற்படல் இன்னபிற குறிகளை உணர்த்துவது செவியாகும்.

மேற்குறித்தவாறு அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கிற பழமொழி அரும்பொருள் பலவற்றை தன்னகத்தே கொண்டதாகும்.

வியாழன், 25 ஜூலை, 2024

 

சான்றோர் வாய் (மை) மொழி : 1

பழமொழிகள்………………………………… அன்பிற்கினிய  நண்பர்களுக்கு இனிய 

வணக்கம்…! சான்றோர் வாய்(மை) மொழி என்னும் புதிய தொடருக்கு என் ’வலைப்பூ’ 

வழங்கி உங்களை அன்புடன் அழைக்கிறேன். 26 -07 – 2024, முதல் வருக வருகவே..!

சனி, 18 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -42: உண்ணாநோன்பிருங்கள்; உடல் நலம் பேணுங்கள்.

 

தமிழாய்வுத் தடங்கள் -42: உண்ணாநோன்பிருங்கள்; உடல் நலம் பேணுங்கள்.


ஆண்டுக்கு ஒரு முறை எட்டு நாள்கள் உண்ணா நோன்பிருங்கள்உண்ணா நோன்பிருத்தலை வெறுப்பவர்களுக்கு ஒரு செய்தி. ஓர் ஆண்டுக்கு எட்டு நாள்கள் பட்டினியாக இருந்தால்  நீங்கள்  உங்களுடைய நோய் எதிப்பாற்றலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெறமுடியும்.

 உணவின்றி இருப்பதால் உடலில் ஒருவித தூண்டுதல் ஏற்பட்டுப்  பழைய, கெட்டுப்போன அணுக்களைப் புதுப்பித்தல் நிகழ்கிறது. சிறப்பாக வயது முதிர்வாலும் அல்லது புற்று நோயினாலும்  நோய் எதிர்ப்பாற்றல்  சிதைந்திருப்பினும் உண்ணா நோன்பு புதுப்பித்து விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் பட்டினியாக இருக்கும்போது இயற்கையாகவே  உடலமைப்பு ஆற்றலைச் சேமிக்க முயல்கிறது. அப்படி நிகழும் இச்செயற்பாடு ஏராளமான நோய் எதிர்ப்பாற்றல் அணுக்களை மறுசுழற்சியால்  பெறினும் அவை சிதைந்த அணுக்களுக்குத் தேவையில்லை.என்கிறார் வால்டர் லாங்கோ, ’நீண்ட நாள் வாழ்வு”  ஆய்வு வல்லுநர், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்’

இவ்வாய்வின் ஆய்வாளர்கள், பட்டினியாக  ஆறு மாதத்திற் கொருமுறை  இரண்டு முதல் நான்கு நாள்கள்  பட்டினியாக இருந்தால் உடல், உயிர் ஆக்கம் பெறுவதற்காக விசையொடு உந்தப்படுகிறது இதனால், உயிராற்றலுக்குத் தேவையான கொழுப்பு, சருக்கரை சத்துக்களைச் சேகரித்துக்கொள்வதோடு பழைய அணுக்களையும்  செயலிழக்கச் செய்துவிடுகிறது.

  உடலானது  மூலஉயிரணுவுக்கு சமிக்ஞை அனுப்பி உடல் இயக்கம் முழுவதையும் மறுகட்டமைப்புச் செய்யுமாறு சொல்கிறது.  ஒருவேளை, உடல் புற்று நோய் மருத்துவமாகிய கீமொதெரபியாலோ அல்லது  வயதானதாலோ மிக மோசமான நிலையில் இருந்தால் உண்ணாநோன்பின் செயல் சுழற்சி புதிய  நோய் எதிர்ப்பாற்றல் இயக்கத்திறனை உருவாக்கும். என்று லாங்கோ குறிப்பிடுகிறார்.

தமிழாய்வுத் தடங்கள்,

முற்றிற்று.

 

நன்றி நண்பர்களே… மீண்டும் ஒரு தொடரில் சந்திப்போம்

புதன், 15 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -41: நலவாழ்வு. மூளை வளர்ச்சியில் பூச்சிகளின் பங்களிப்பு .

 

தமிழாய்வுத் தடங்கள் -41: நலவாழ்வு.  மூளை வளர்ச்சியில் பூச்சிகளின்  பங்களிப்பு .


ஒரு புதிய ஆய்வின்படி  ஆதி மனிதன் உள்ளிட்ட விலங்கினங்களின் மூளை வளர்ச்சியிலும் உயர் அறிவுத்திறனிலும்   எறும்புகள், கூடில்லாத நத்தைகள், சிறிய பூச்சி வகைகள் ஆகியன தூண்டுகோலாக அமைந்துள்ளன.

வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அமண்டா  டி. மெலின் அவர்களின் ஆய்வுரையில்  மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின்  மூளையின் பரிணாம வளர்ச்சியிலும் அறிவுத்திறனிலும்  உணவு தலையாய இடத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார். இவ்வறிஞரின் ஆய்வுரையில்   வழக்கமான உணவு அரிதாகிப் போன காலத்தில்  பூச்சிகளைத் தோண்டியெடுத்து உண்டதால்  மனிதன் உள்ளிட்ட விலங்கினங்களும்  அறிவுத்திறனில் மேம்பட்டுப்  பூச்சிகளை இரையாக்க மனிதன் பல புதிய கருவிகளை உருவாக்கினான் என்கிறார் மெலின்.

மத்திய அமெரிக்கா நாடான கோசுடா ரிகாவில் வாழும் கம்புசின் குரங்குகளின்( இவ்வகைக் குரங்குகள் காட்டில் உணவு தேடுவதில்  மனிதர்களைப் போலவே கை,கால்களைப் பயன்படுத்தும் வல்லமை உடையவை ) வாழ்வியல் நடைமுறைகளை ஐந்து ஆண்டுகளாக ஆராய்ந்துள்ளனர். இவ்வாய்வு பரிணாம வளர்ச்சிக் கொள்கை ஒன்றைச் சார்ந்ததாகிறது . இது உணர்வுகளைக்கடத்தும் திறனை மேபடுத்தலோடு தொடர்புடையதாகிறது அஃதாவது,கைப்பாடுள்ள திறமை  மேலும் வளர்ந்து கருவிகளைக் கையாளுவதிலும் புதிய சிக்கல்களை தீர்ப்பதிலும் உணவுக்காகப் பூச்சிகளையும்  நிலத்தில் புதையுண்ட மற்ற உணவுகளையும் சேகரிக்கும்போது ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்க உதவுகிறது.

இவ்வாய்வு முதன்முதலாகப் பருவநிலை மாற்றங்களுக்கேற்ப கம்புசின் குரங்குகள் எவ்வாறு  செயல்பட்டு உணவுத்தேவையை நிறைவேற்றிக்கொள்கின்றன என்பதக்  கள ஆய்வின் வழி

  விரிவான சான்றுகளுடன் விளக்குகிறது.

இவ்வாய்வைக் கனடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கில்லாரி சி யங், கிருசுடின என் மாசுடசி, லிண்டா எம் பெடிகன்  கியோர் நிகழ்த்தியுள்ளனர். .      இதனால் மக்களினம்  பருவநிலை மாற்றங்களுக் கேற்பப் பூச்சிகள், புழுக்கள்,நண்டுகள், நத்தைகள் முதலியவற்றைத் தேடி உண்ணும் முறைகள் கம்புசின் குரங்குகள் கற்றுத்தந்த பாடங்களாகும். இவ்வாய்வு  உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில், குறிப்பாக மூளை வளர்ச்சியில் (அறிதிறன் ) சிறப்பிடம் பெறுகிறது.

எட்டுத்தொகை:

“ கோடை நீடலின் வாடுபுலத் துக்கச்

சிறுபுல்லுணவு நெறிபட மறுகி

நுண்பல் எறும்பு கொண்டலைச் செறித்த

வித்தா வல்சி வீங்குசிலை மறவர் மாறோக்கத்து..

(அகநானூறு: 377.)

 மறவர்கள், தம் உணவினை விதைத்து விளைத்தலன்றிச் சிற்றெறும்புகள் அரிதின் முயன்று அளையிற் செறித்து வைத்தவற்றை அகழ்ந்து எடுத்து உண்ணும்  இயல்பினராவர்.

“செம்புற்று ஈயலின் அளை புளித்து…” (புறநானூறு: 126.)

செம்புற்றின் ஈசலை, இனிய மோரோடு கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடையது பாரி நாடு.

 

 

 

 


ஞாயிறு, 12 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -40: நலவாழ்வு. பூண்டு உண்ணலாமா..?

 

தமிழாய்வுத் தடங்கள் -40: நலவாழ்வு. பூண்டு உண்ணலாமா..?



பூண்டு,  உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   வறுத்துப் பயன்படுத்துவது ஒரு சிறந்த சுவையூட்டியாக,  பலவகையான முறையில் சமைத்து உண்பதால் அது கூடுதலான எரியாற்றல் அளிப்பதில்லை .குறிப்பாக ஒரு கிராம்பில் (நான்கு கலோரி) உள்ளதைவிடக் குறைவாகவே பூண்டில் உள்ளது. பூண்டு வெறும் சுவையூட்டி மட்டுமன்று அது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதய நோய்களைத் தடுத்து, பாதுகாப்பளிக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் காரப்பொருள் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது . பூண்டு, தொற்றுநோய்க்  கிருமிகளை ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டு அழிக்கிறது. பூண்டு, தாழ்நிலை குருதிக் கொதிப்பையும் , பக்கவாத தாக்குதல் அறிகுறிகளையும் கட்டுப்படுத்துகிறது.

 

 நமது சித்தர் மருத்துவத்தில் பூண்டு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. அன்றாடம் நமது வீட்டு அடுமனையில் அன்னையர் கைகளில் அரிய மருந்தாகப் பயன்பட்டு வருவதையும் காணலாம்.

 

சனி, 11 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -39 : நலவாழ்வு : மரக்கறி (அ) புலால்…..?

 

தமிழாய்வுத் தடங்கள் -39 : நலவாழ்வு : மரக்கறி (அ) புலால்…..?





ஆத்திரேலியா மருத்துவப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வில் மரக்கறி உணவு உண்போர் புலால் உணவு உண்பவர்களைவிட உடல், மன நோய்களால் துன்புறுகின்றனர். மேலும் மரக்கறி உணவு உண்போர் குறைந்த அளவே மது அருந்தினால் உடல் நலத்தில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றமின்றி உடல்நலத்திலும் மனநலத்திலும் குறைந்தும் அவர்களே குறைந்த அளவே புலால் உண்டால் மருத்துவர்களைத் தேடிப்போவதில் நாட்டமின்றி நோய் தடுப்பு ஊசிகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.

 ஆய்வாளர்கள் ஆய்வின் முடிவின்படி மரக்கறி உணவை எடுதுக்கொள்ளும் ஆத்திரேலியர்கள் உடல்நலக்குறைவுடன் வருந்தி வாழ்வதனால்  அவர்களுக்கு   அதிகப்படியான மருத்துவம் தேவைப்படுகிறது என்கின்றனர்.



வியாழன், 9 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -38 : நலவாழ்வு.

 

தமிழாய்வுத் தடங்கள் -38 : நலவாழ்வு.


இலண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்களும் உலக மருத்துவ ஆய்வுக்குழுவும் இணைந்து  ஒரே ஒரு மாத்திரை பசிக்காத நிலையைத் தோற்றுவித்து உணவு உண்ணத் தேவையில்லாத  ஓர் அரிய அணுத்திரள் அஃதாவது பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு ஆகிய மாலிக்குயுல் பசி எடுக்காத  மூலக்கூறு அதற்கு   அசெடேட்  என்னும் நேர் மின்னூட்டணு ஆகும்.  நாம் உணவில் உள்ள நார்ச்சத்து உண்டு செரிக்கும் பொழுது அசெடேட் மூளைக்குச் சமிக்ஞை அனுப்பி உணவு உண்ண வேண்டாமென்று கட்டளையிடுகிறது. ஆஃதாவது அசெடேட் உடலிலிருந்து வயிறு- கல்லீரல் – இதயம் – மூளைக்குச் சென்றடைந்து பசியைக் கட்டுப்படுத்திவிடுகிறது. கற்கால மனிதர்கள் 100 கிராம் அளவு நார்ச்சத்து கொண்ட உணவை உண்டனர். ஆனால் தற்காலத்தில் மிகக் குறைந்த அளவிலான நார்ச்சத்து உண்கிறோம்.  இவ்வாய்வில் அசெடேட் நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கச் செய்வதால்  அதிகப்படியான உணவைத் தடுத்துவிடுகிறது. அளவுக்கு அதிகமான உடல் எடை கூடுவதையும் தடுக்கிறது.

நம் முன்னோர்கள் அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்டு  பலநாள்கள் உணவு உண்ணாமல் இருந்திருக்கின்றனர்.

போகர் சித்தர்:

”தலைமைச் சித்தர், அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காதுமுடி நரைக்காதுபார்வை மங்காதுஇவ்வளவு ஏன்எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்..”

தந்தை பெரியார்:

 அறிவியல் மேலைநாடுகளில் விரைந்து வளர்வதைச் சுட்டிக்காடி, இனிவருங்காலங்களில் ஆண் பெண் சேர்க்கையின்றி குழந்தை பிறக்கும் ; மணித ன் ஒரே ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டால் உணவு உண்ண வேண்டிய தேவை இல்லாமல் போகும் காலமும் வரும். என்றார்.

பெரியார் பல்லாண்டுகளுக்கு முன்னர் கூறிய இவ்விரண்டு  அறிவியல் சிந்தனைகளும் இன்று மெய்யாகின்றன.