வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-59.-உலகத் தோற்றம்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-59.- ஓர் அறிவியல் அறிஞர்  

                         உலகத் தோற்றம்.  

ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)  

                            வானியலில் வல்லுநர்களாக விளங்கிய தமிழர்கள் உலகத்தோற்றம் குறித்தும் சிந்தித்துள்ளனர்  கிரகணம் தோன்றுவதை முன்கூட்டியே தெரிவித்தவர் மை லீட்டஸ் திவில் பிறந்த தேலிஸ்.கி.மு. 624 – 548, இவரே உலகம் எதனால் ஆனது என்ற கேள்வியைக் கேட்டு இந்த உலகம் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூலகாரணம் என்றும் கூறினார். நீரின்றி அமையாது உலகு ன்று திருவள்ளுவரும் கூறினாரே. தேலிசுக்குப் பின் இந்த உலகம் நெருப்பால் ஆனது என்றார் , கெராக்லிடஸ் கி.மு. 535 – 475. ; சிலர் காற்றால் ஆனது என்றும் கூறினர் 

                ஆனால் தொல்காப்பியர் என்ற அறிவியல் அறிஞர் தான் இவ்வுலகம் ஐம்பூதங்களின் சேர்க்கை என்று மிகச் சரியாகக் கூறியவர்.  

உலகம் - சொற்பொருள்:   

                            உல் - முன்மை, தோன்றுதல், வளைதல், சுற்றுதல், உலாவுதல் எனப் பல பொருள் குறித்த ஒரு சொல்.  உலகு - உருண்டையானது, சுற்றிவருவது, உலகு- உலகம் (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், பேரகரமுதலி 

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்   

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்   

இருதிணை ஐம்பால் இயல் நெறி வழாஅமைத்    

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.” (தொல். மர.1589.)  

                       ன் எனின், இதுவுமொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று.  

 உலகு நிலமுதலாகிய ஐம்பெரும் பூதங் கலந்த மயக்கமாதலான் மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழாமல் திரிபுபடாத சொல்லோடே தழுவுதல் வேண்டும் 

 கலத்தலாவது, முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற்போறல் 

மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதல் போறல். 

                          உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் ொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப் படாது நிற்கும். வ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலிற் கலந்த மயக்கம் என்றார். 

                         இப்பொருள் எல்லா உலகத்தையும் விட்டு நீங்காமையின் இவற்றை ஒரு முகத்தான் நோக்க வேறுபாடிலவாம் ஆதலான் மேற்கூறிப் போந்த முறையினான் வேறுபடுத்து இரு திணையாகவும் ஐம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிபுபடாத சொல்லோடு புணர்க்க என்றவாறாம். - இளம்பூரணர் உரை.  

                          இதனால் இந்த உலகத்தை எந்தக் கடவுளும் படைக்கவில்லை என்பதும் இயற்கையின் படைப்பு என்பதும் விளங்குமன்றோ..!,.. 

............உயிர்களின் தோற்றம் .......தொடரும்........