திங்கள், 9 மார்ச், 2026

தமிழமுது –231– தொல்தமிழர் இசை மரபு:91. ..மகளிரை வருத்தும் சீறியாழ்ப் பண்.

 தமிழமுது –231– தொல்தமிழர் இசை மரபு:91.   

  பத்துப்பாட்டு- 7.நெடுநல் வாடை :  

மகளிரை  வருத்தும் சீறியாழ்ப் பண். 

தமிழ் மக்களின் சமயம்பண்பாடுஅரசியல்பொருளாதாரம்சமுதாயம் ஆகியவற்றின் வரலாற்றுக் கருவூலமாய்த் திகழ்வது பத்துப்பாட்டாகும்.    

         நெடுநல்வாடை , மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இயற்றியதுதிருமுருகாற்றுப்படை ஆசிரியரும் இவரே.

  பகை முடிக்கப் போர் புரியச் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் துயரை நீக்கச் செவிலித்தாய் கொற்றவையை வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளதுதலைவனைப் பிரிந்த தலைவிக்கு நெடுவாடை ; பாசறைக்கண் இருந்த தலைவனுக்கு நல்வாடை என இரு நிலைகளை உணர்த்துவதால் இது நெடுநல்வாடை என்று அழைக்கப்படுகிறது 

  அகப்பொருள் செய்திகளை மிகுதியாகக் கூறும் இந்நூலை அலப்பாடல் என்னாது “வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம்” என்று பாண்டியனின் அடையாளப் பூவான வேம்பு பேசப்படுவதால்  இதனைப் புறப்பாடல் என்று நச்சினார்க்கினியர் கருதுகிறார்தலைவன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமையால் இதனை அகப்பாடல் என்று அழைப்பதே பொருத்தமுடையதாம். 

 

தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்  
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர 
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் 
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை 
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ 
 
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப  
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து 
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் ---65 – 72.  

கல் என்கிற ஓசையினையுடை சிறு துவலையை வாடைக்காற்று எங்கும் பரப்புவதானால் இளையோரும் முதியோரும் குடத்தில் உள்ள தண்ணீரை குடியாராய் பகுத்தாற்போன்ற வாயையுடைய  கரகத்தில் தீபமூட்டி  சிவந்த நெருப்பின் வெம்மையை நுகரஆடல் தொழிலை உடைய மகளிர் தாம் பாடுகின்ற பாட்டினை யாழ் தன்னிடத்தே கொள்ளும்படி நரம்பைக் ூட்டுதற்குகுளிர்ச்சியாலே தன் நிலை குலைந்த இனிய குரலாகிய நரம்பைப் பெரிய முலையின் வெப்பத்தே தடவிக் கரிய தண்டினை உடைய சிறிய யாழைப் பண் நிற்கும் முறையிலே ிறுத்த , கணவரைப் பிரிந்த மகளிர் வருந்த  பருவ மழை செறிந்து கூதிர்க்காலமாய் நிலை பெற்றது. 

......................................தொடரும்..........................................