செவ்வாய், 24 மார்ச், 2026

தமிழமுது –244– தொல்தமிழர் இசை மரபு:104, நீட்சியும் - வீழ்ச்சியும். மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 1. ”

 தமிழமுது –244– தொல்தமிழர் இசை மரபு:104நீட்சியும் -  வீழ்ச்சியும்.  

மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 1.  

 

          குமரிக்கண்டத் தமிழர் நுண்மாண் நுழைபுலத்தராயும் தலை சிறந்த நாகரிகராயும் எஃகுச் செவியராயுமிருந்ததினால்ஏழு பேரிசையும் ஐந்து சிற்றிசையுமாகிய பன்னீரிசையை (சுரத்தையும் கண்ட ஆயப்பாலை என்னும் முறையில் எழுபாலைப் பண்களைத் திரித்ததுமன்றி அப்பன்னீரிசையயும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும் , திரிகோணப்பாலை என்னும் ுறையில் 48 ஆகவும் சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும்நுட்பமாய்ப் பகுத்து எல்லையற் இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருக்கின்றனர்ப்ன்னீரிசைக்கு மேற்பட்ட நுண்ணிசையினை எடுத்துக்கூறும் நூலே ‘இசை நுணுக்கம்’ போலும்ஏழிசையும் குரல்துத்தம்கைக்கிளைஉழைஇளிவிளரிதாரம் எனப் பெயர் பெற்றன. சிற்றிசை ஆகணம் என்றும்குரலும் இளியுமல்லாத பேரிசை அந்தரம் என்றும் ொல்லப்பட்டன 

ிரி,சதுரம் என்னும் சொற்கள் தமிழே என்பது என் வடமொழி வரலாற்றில் விளக்கப்பெறும்சதுரம் என்பது நான்கு என்னும் எண்ணுப் பொருளிலன்றிநாற்கோணம் என்னும் வடிவப் பொருளில் வடமொழியிிலில்லை.   அகநிலை மருதம்புறநிலை மருதம் , அருகியல் மருதம்பெருகியல் மருதம் என்னும் பண் வகுப்பும் கிழமை நிரைகுறை என்பனவும்தமிழரின் இசைநுணுக்கத்தைக் காட்டும் 

இக்காலத்து ஆரிய இசையறிஞர்பண்டைத் தமிழரின் றிவு நுணுக்கத்தை ஓராதுதம்போல் அவரையுங் கருதி 96 இசைகள் பாடற்கியலாதவை என்பர். 

..........................................     தொடரும்.........................................