வியாழன், 20 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-72-.பேராசிரியர் க. முருகையன்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-72- ஓர் அறிவியல் அறிஞர்  

      தொல்காப்பியர். எழுத்தொலிகளின் பிறப்பினை ஆராய்ந்து அஃது இன்றைய அறிவியலோடு பொருந்தி அமைந்துள்ளது வியப்பன்றோ..! 

 நிலையும் வளியும் முயற்சியும் மூன்றும் இயல நடப்பது எழுத்தெனப்படுமே.” என்றார். 

                                   தொல்காப்பியரின் எழுத்தொலிப் பிறப்பினை ிக விரிவாக ஆராய்ந்த பேராசியர் அவர்களின்  ஆய்வுரையைக் காண்போம்.  

தொல்காப்பியரின் ஒலியியல் கொள்கை ; பேராசிரியர் க. முருகையன்.  

                   முடிவுரை:  

                                     “ தற்கால ஒலியியல் அறிஞர் யாவரும் கண்டு வியக்கும் வண்ணம் தொல்காப்பியர் மொழிகள் அனைத்திற்கும் பொதுவான ஒலியியல் கோட்பாடு (general phonetic theory) களைத் தமிழ்மொழியின் ஒலிகளை விளக்குமுகத்தான் ெளிவுபடக் கூறியுள்ளார். ஒலியியலோடு தொடர்புடைய உடற்கூற்றியல் (physiology.) ஒலியிக்கவியல் (acoustics.) ஆகியவைபற்றியும் ஒலிகள் பிறக்கும் முறைபற்றியும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். ஒலிகளை உண்டாக்கும்போது ஒலியெழுப்பிகள் ஏற்கும் அணர்தல் (apical.) பரத்தல் (.lminal.) விளிம்பு வீங்கல் (having become thick at the sides so as to leave space laterally.) போன்ற வடிவமைப்பும் அவை தம்முள் இயையும்போது உண்டாகும் ஒற்றல் (lax) மெய்யுற ஒற்றல் (.tense.) வருடல் (flapped or rolled ) அடைதல் (frictionai release.) போன்ற முயற்சியும் அளபெட(lengthening.) இச(pitch.) போன்றவற்றின் அளபு மாத்திர(measurement.) முறையும் ஆகியவற்றைப் பற்றிய அவரது நுண்ணிய கருத்துக்களைப் பார்க்கும்போது அவருடைய அறிவாற்றலும் ஆய்வு முறையும் விளக்கும் பான்மையும் விவரிக்கமுடியாத நிலையில் உயர்ந்து விளங்குகின்றன.  

 ....................ஆய்வுரை....................தொடரும்...................