களப்பாள்----- kalappal
நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
வெள்ளி, 5 மார்ச், 2021
தன்னேரிலாத தமிழ்-248.
தன்னேரிலாத
தமிழ்-248.
“கொலை அஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார்
களவு
ஒன்றோ
ஏனையவும்
செய்வார்
பழியோடு
பாவம்
இஃது
என்னார்
பிறிதுமற்று
என்செய்யார்
காமம்
கதுவப்பட்டார்.”
–நீதிநெறிவிளக்கம், 79.
காம வேடகையால் பற்றப்பட்டவர்கள் கொலை செய்ய அஞ்சமாட்டார்கள் ; பொய்சொல்ல
வெட்கப்படமாட்டார்கள்
; மானத்தை இழக்காமல்
பாதுகாக்க
மாட்டார்கள் ; களவு மட்டுமல்லாமல்
அதற்கு மேலும் பல தீய செயல்களைச் செய்வார்கள் ; இக்காமம்
பழியோடு பாவத்தையும்
சேர்க்கும்
என்றும் கருதமாட்டார்கள்.; அப்படிப்பட்டவர்கள்
செய்யாத தீமைகளே இல்லை.
வியாழன், 4 மார்ச், 2021
தன்னேரிலாத தமிழ்-247.
தன்னேரிலாத
தமிழ்-247.
”புலை மயக்கம்
வேண்டிப் பொருட் பெண்டிர்த் தோய்தல்
கலம் மயக்கம் கள் உண்டு
வாழ்தல் சொலை முனிந்து
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இம்மூன்றும்
நன்மை இலாளர் தொழில்.”----திரிகடுகம், 39.
உடலின்பம் வேண்டி
விலைமகளைச் சேர்வதும்;
கள் குடித்தலாகிய பிறர் எச்சிலைப் பருகுதலும்; பொய்
சூழும் இடமாகிய
சூதாடு களத்திற்குச் சென்றடைதலும் ஆகியன,
சான்றோர் சொல்
மறுத்த, அறநெறி
அறியா அற்பர்களின் தொழில்களாம்.
புதன், 3 மார்ச், 2021
தன்னேரிலாத தமிழ்-246.
தன்னேரிலாத
தமிழ்-246.
” கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண்
போற்றான்
உழவும்
இளையனாய்க்
கள்
உண்டு
வாழ்வான்
குடிமையும்
– இம்மூன்றும்
உள்ளன போலக் கெடும்.”
---திரிகடுகம், 59.
சுற்றத்தார்க்கு உதவாதவன் செல்வமும் ; பசுமைப்பயிர்போற்றித் தனக்குப் பயன் கொடுக்கும் காலத்துப் பாதுகாக்காதவன் உழவுத் தொழிலும் ; இளமைக் காலந்தொட்டே கள் உண்டு வாழ்பவன் குடிப்பிறப்பும் ஆகிய இம்மூன்றும்
நிலைப்பன போலத் தோன்றிக் கெட்டழியும்.
செவ்வாய், 2 மார்ச், 2021
தன்னேரிலாத தமிழ்-245.
தன்னேரிலாத
தமிழ்-245.
“காந்தளம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செங்கோட்டு
ஆமான்
ஊனொடு
காட்ட
மதனுடை
வேழத்து
வெண்கோடு
கொண்டு
பொன்னுடை
நியமத்துப்
பிழி
நொடை
கொடுக்கும்.”
–பதிற்றுப்பத்து, 30.
காந்தள் பூவினால்
செய்த கண்ணியையும் கொலை செய்யும்
வில்லினையும் உடைய
வேட்டுவர், சிவந்த
கொம்பையுடைய காட்டுப்
பசுவின் இறைச்சியோடு, வலிமையான
காட்டுயானையின் கொம்புகளையும் எடுத்துக்கொண்டு, செல்வம்
பொருந்திய கடைத்தெருவிற்குச் செல்வர்,
அங்குத் தாம் வாங்கும் கள்ளுக்கு விலையாகக்
காட்டுப் பசுவின்
இறைச்சியையும் யானையின்
தந்தத்தையும் கொடுப்பர்.
திங்கள், 1 மார்ச், 2021
தன்னேரிலாத தமிழ்-244.
தன்னேரிலாத
தமிழ்-244.
“ கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல்
ஓம்புமின் அறிவுடையீர்..”
–நற்றிணை, 243.
அறிவுடையீர்..! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல, நிலையில்லாத
வாழ்க்கையின்
பொருட்டுப்
பொருளைத்தேடி, அருமையான
நுங்கள் காதலியரை
விட்டுப்
பிரியாது
கலந்தே இருங்கள்.
செவ்வாய், 23 பிப்ரவரி, 2021
தன்னேரிலாத தமிழ்-243.
தன்னேரிலாத
தமிழ்-243.
“ அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும்
அழகும் வெற்றியும் தத்தம்
குடியும் மானமும் செல்வமும் பெருமையும்
குலமும் இன்பமும் தேசும்
படியு மாமறை ஒழுக்கமும் புகழுமுன்
பயின்றகல்வியுஞ் சேர
மடியு மால்மதி யுணர்ந்தவர் சூதின்மேல்
வைப்பாரோ மனம் வையார்.” –வில்லிபாரதம்,
11: 64.
அறிவுடையோர்
சூதாடுவதை
விரும்புவாரோ..? தலைமையும்
ஆண்மையும்
படையும் அழகும் வெற்றியும்
குடிப்பெருமையும்
மானமும் செல்வமும்
பெருமையும்
குலமும் இன்பமும்
புகழும் நான்மறை ஒழுக்கமும்
கற்றகல்வியும்
இன்ன பிற நற்பயன்கள் யாவும்
சூதினால்
அழியும்.