தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -16.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - விழா: ஓணம் பண்டிகை :விழா.
மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி :
“ கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள ்
கோணம் தின்ற வடுஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறாது உற்ற வடுப்படு நெற்றி
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்”
- மாங்குடி மருதனார், மதுரைக், 590 – 596.
திரட்சி கொண்ட அவுணரை வென்ற பொன்னால் செய்த மாலையை உடைய, கருநிறம் உடைய திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரில் உள்ளார் விழா எடுப்பர். இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி மறத்தைக் கொண்டிருக்கும் தெருக்களில், தம்மில் தாம் மாறுபட்டுப் போர் செய்யும் போரில் மாறாமல் தம்மீதுபட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும் சுரும்புகள் மொய்க்கும் போர்ப் பூவினையும் ஆர்வமான விருப்பத்தினையும் உடைய மறவர், திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப்பெற்றது. அவ்விழாவில் மறவர்கள் சேரிப் போர் நிகழ்த்துதல் வழக்கமாகும்.
(கோணம் - தோட்டி (அங்குசம்) ; சாணம் - தழும்பு ; சமம் - போர்.)
.......................................தொடரும்................................................