ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-62- ஓர் அறிவியல் அறிஞர்.
உ யிர்களின் தோற்றம் ஆறறிவு - மனம்:
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)
ஆறறிவு - மனம்:
ஆறாவது அறிவாகிய மனத்தைப் பெற்ற மனிதன் சிந்திக்கும் திறனை பெற்றிருக்கின்றான். மனத்தின் தெளிவு நடத்தையின் வழி வெளிப்படுகிறது. தொல்காப்பியரின் உளவியல் ஆய்வு, சிக்மண்ட் பிராய்டு -(1856 – 1939) உளவியல் ஆய்வுக்கு முன்னோடியாக விளங்குகிறது. “ஆறறிவதுவே அவற்றொடு மனனே “ எனும் கூற்று பிராய்டின் கண்டுபிடிப்பாக போற்றப்படுகிறது. அவற்றொடு -என்னும் ஒரு சொல்லால் தொல்காப்பியர் உளவியல் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி ஆகிறார். அதாவது விலங்குணர்ச்சியை உள்ளடக்கிய ஆறாவது அறிவைப் பெற்றது மனித இனம் என்பது பிராய்டின் கண்டுபிடிப்பு.
தொல்காப்பியர் மனம் என்பது அறிவு என்று அதாவது பகுத்தறிவு ஆகும். சிந்திக்கும் அறிவு மனித உயிர்க்கு மட்டுமே உண்டு. மனம் வேறு அறிவு வேறல்ல. என்பது தெளிவு. மூளையின் ஒருங்கிணந்த செயற்பாடு மனம் என்று அறிவியலார் கூறுவர். அறிவு செயல்படும் பொழுது முரண்பாடுகள் நிகழுமேயானால் மிருகநிலைக்குக் கீழே மனிதனின் செயல்பாடுகள் அமைந்து விடுகின்றன. ஆறாவது அறிவை மனம் என்றது அறிவியல் பூர்வமான சிந்தனை அதாவது அறிவியல் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
திருவள்ளுவரும் மனம் குறித்து மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். “மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் ; எல்லாப்புகழும் தரும்.”457. மனத்தெளிவு எண்ணத்தூய்மை அது உயிர்க்கு ஆக்கமாக விளங்கும் மனத்தூய்மை காக்கும் வண்ணம் நமக்குச் சூழல் ஏற்படுமானால் அது புகழைத்தரும். மனம் நலமுடன் இருக்க எளிமையும் நேர்மையும் தேவை. மனத்தூய்மை நோய்களை அண்டவிடாது. என்பதைக் குறித்தே மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்றார், வள்ளுவர்.
டேவிட் ஹியூம் ( !711 - 1776) என்பவர் பகுத்தறிவியல் பட்டறிவியல் எனும் இரண்டையும் ஆய்வு செய்கிறார் புலக்காட்சி, மனப்பதிவு, எண்ணம் என்ற மூன்று கூறுகளை ஆய்வு செய்கிறார், புலக்காட்சி, மனப்பதிவு, எண்ணம் ஆகிய மூன்றும் மனத்தின்கண்ணே நிகழ்வதுதானே, இறுதியில் தீர்மானிப்பதும் மனம் தானே. என்றார். மனத்தூய்மை என்பது அறிவுத்தூய்மை ; அறிவுத்தூய்மை என்பது சிந்தனைத் தெளிவு. இதனைத் தொல்காப்பியரும், திருவள்ளுவரும் இன்றைய அறிவியல் ஏற்றுக்கொள்ளும்படி ஆராய்ந்து உளவியல் ஆய்வில் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர்.
...........................தொடரும்...................