ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-61- உ யிர்களின் தோற்றம்

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-61- ஓர் அறிவியல் அறிஞர்  

                         யிர்களின் தோற்றம்  

ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)  

                        மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே -- (கறையான், எறும்பு முதலி இவ்வினம், தொடு, சுவை, நுகர்வு உணர்வுகள் கொண்டவை 

                           நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே --- (வண்டு, தும்பி, முதலிய இவ்வினம் - தொடு, சுவை, நுகர்வு, கண்  கொண்டவை.) 

                       ஐந்தறி வதுவே  அவற்றொடு செவியே (விலங்குகள், பறவைகள் முதலிய இவ்வினம் - தொடு, சுவை, நுகர்வு, கண், செவித்திறன் ஆகிய உணர்வுகளைக் கொண்டவை.)  

                            ”ஆறறி வதுவே அவற்றொடு மனனே --- ( மக்களும் பிறவும் மேற்சுட்டிய ஐந்து உணர்வுகளோடு மனம் என்னும் உணர்வும் அமையப்பெற்றவை. என்று தொல்காப்பியர் உயிர்களை அறுவகையாகப் பகுத்துள்ளார். விலங்கியியலார் பன்னிரண்டு வகையாகப் பகுத்துள்ளனர் 

 “மக்கள் தாமே ஆறு அறிவுயிரே  

 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” தொல். பொரு.1532.)  

                             மக்களுக்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐம்புலன்  உணர்வுகளும் இருப்பதால் ஐயறிவும், ஆறாவதாக மனம் என ஒன்றும் பெற்று நன்மை தீமை அறிவதாலும், சிந்திக்கும் திறன் இருப்பதால் அவர்களை ஆறறிவு உடைய உயிரினம் என்பார். தொல்காப்பியர் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே எனக்கூறியதால் மக்களைப்போன்று  ஆறு அறிவு உடையனவாக குரங்கு, யானை, கிளி முதலியவற்றுள் மன உணர்வுடைய உளவாயின் அவையும் ஆறறிவுயிராய் அடங்கும் என்று உரை வகுத்துள்ளார் இளம்பூரணர்.  

                  தொல்காப்பியர்  உயிர்களை வகைப்படுத்தியுள்ளம வியப்பிற்குரியதாகும்.  உயிரினங்கள் குறித்து மிகப்பெரிய ஆய்வு மேற்கொண்டு இன்றைய் அறிவியலும் ஏற்றுப் போற்றும் அளவுக்கு அவர் ஓர் அறிவியல் அறிஞராகத் திகழ்கிறார்.  

                      தொல்காப்பியர் குறிப்பிட்ட இரண்டு, மூன்று, நான்கு அறிவுடையவை முதுகெலும்பற்றவை ;  ஐந்து, ஆறு அறிவுடையவை முதுகெலும்புடையவை. உயிர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிவியல் வழியாக மெய்ப்பித்துக்காட்டிய சி. ஆர். டார்வின் ஓர் அணு உயிரிலிருந்து மனிதன் படிப்படியாக் வளர்ந்துள்ள நிலையை 1858 இல் வெளியிட்டார். தொல்காப்பியரின் அறிவியல் ஆய்வும் போற்றுதற்குரியதுதானே. 

 ................தொடரும்................... ஆறறிவு......!