வெள்ளி, 24 ஏப்ரல், 2026

தமிழமுது –274 – தொல்தமிழர் இசை மரபு:134....சுந்தரர் அருளிய செந்தமிழமுதம்:

 தமிழமுது –274 – தொல்தமிழர் இசை மரபு:134. நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - எழுச்சிபண்சுமந்த பாடல்கள். 

       சுந்தரர் அருளிய செந்தமிழமுதம் 

சுந்தரர் அடியார் திறத்தும் எவ்வளவு எளிமையுடையார் என்பதற்குத் திருத்தொண்டத் தொகை ஒன்றே சான்றாகும்அவர், தம் முன்னோரைப் போற்றியதை   நாவுக்கரசிடத்தும் ஞானக் கன்றின்பாலும்் அவர்கள் பாடிய தமிழ் மறையகத்தும் நாவலூர் வித்தகர்க்கு இருந்த பெருமதிப்பு எத்தகையது என்பதனை...... “ நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்குுஅரையரும்   பாடிய நற்றமிழ் மாலை   சொல்லியவே சொல்லி எத்துக்ப்பானை.”  என்று திருவலிவலத் திப்பதிகத்தில் கூறியுள்ளார் 

நம் சுந்தரர் இறைவனை மறவாமனத்தால் இறுகப் பற்றியதனையும் அதனாற் பெற்ற பேற்றினையும்   

மழைகரும்பும் மலர்க்கொன்றையினானை   

வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன்    

பிழைத்தொருகால் இனி போய்ப் பிறவாமைப்    

பெருமை பெற்றேன் பெற்றதா பெறுகிற்பார்.” என்று திருவொற்றியூர்த் திருப்பதிகத்தில் கூறுவார்அவர் பாட்டுக்களில் அணிநலஞ் சான்ற இன்பகுதியும் அமைந்துள்ளன. சான்றுக்கு ஒன்று... “அரும்பருகே சுரும்பருவ அரும்பதபண் பாட    அணிமயிகள் நடமாடும் அணிபொழில் சூழ்வயலின்   கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்   கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே”  என்றம் மேலும் பல பாடல்களில் எதுகைமோனைத் தொடை வளங்களும் உருவகம் முரண் முதலிய அணீநலங்களும் மருட்கைஉவகை என்னும் மெய்ப்பாடுகளும் தோன்ற இயற்கை வனப்புக்கள் எழில் பெற்றுள்ளன  

ேலும் கற்பார் கேட்போரின் நெஞ்சினைத் திறைகொள்ளும் திறத்தினை “குறைவிலா நிறைவேகுணக்குன்றேகூத்தனே கோதிலா அமுதே, வானநாடனே வழித்துணை மருந்தேமாசிலாமணியே நீயன்றி எனக்கு உறவாவர் யாவர்நின்னை மறந்து வேறு எதனை நினைப்பேன்என்று கூறிஇவர் இறைவனைப் போற்றித்துதித்..... 

 “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் ......எனும்பாடலை விரும்பி ஏற்ற வள்ளலார்,  

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய   

தோழனுமாய் என்று முன்னீர் சொன்ன சொற்பொருளை  ஆழநினைந்திடில் அடியேன் அருங்கரணம் கரைந்து கரைந்து ஊழுயிலொன்றாவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே .” என்று போற்றிப் புகழ்ந்துள்ளார் 

................................தொடரும் .................................