வியாழன், 5 மார்ச், 2026

தமிழமுது –228– தொல்தமிழர் இசை மரபு:88. ...வெற்றிக்கொடி- இசை முழக்கம்.

 தமிழமுது –228– தொல்தமிழர் இசை மரபு:88.   

  பத்துப்பாட்டு- 5.   முல்லைப்பாட்டுவெற்றிக்கொடிஇசை முழக்கம்.   

.......... .......... ........வென்று பிறர்     

வேண்டு புலம் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு\ 

விசயம் வெல்கொடி உயரி வலன் ஏர்பு    

வயிரும் வளையும் ஆர்ப்ப....- 89 –92.   

பகைவரை வென்றுஅவர்தம் நிலங்களைக் கவர்ந்த திரண்ட பெரிய படையோடுவெற்றிக்கொடி உயர்த்திஊது கொம்பும் சங்கும் முழங்கத் திரும்புகின்றான் தலைவன்.  

புலம் - நிலம் . ; பெருந்தானை - பெரிய படை. ; விசயம் - வெற்றி. ; வயிர் - ஊதுகொம்பு. ; வளை - சங்கு. ; ஆர்ப்பு - ஆரவாரிக்க.) 

       முதிரும் காயை உடைய வள்ளியங்காடு பின்னாகும்படி விரைந்து செல்லும் குதிரையை மேலும் தூண்டிச் செலுத்தி வருகின்றபோர் வினைக்கண் திறம்மிக்கு விளங்கும் தலைவனின் நெடிதாகிய தேரில் பூட்டிய குதிரைகள்  ( இன்பல் இமிழ் இசை கேட்டவளாய் ஆற்றியிருக்கும் தலைவியின் செவிகள் குளிரும்படி ஆரவாரித்தனஎன்று இனிமையாக நிறைவடைகிறது முல்லைப்பாட்டு.   

............................தொடரும்......................................