சனி, 30 மே, 2026

தமிழமுது –306 – தொல்தமிழர் இசை மரபு:166.. தொல்தமிழர் இசைமரபு - நிறைவுற்றது .

 தமிழமுது –306 தொல்தமிழர் இசை மரபு:166 - நீட்சியும் - 

  வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

                          தொல்தமிழர் இசைமரபு - நிறைவுற்றது .  

               தொல் தமிழர் இசை மரபு குறித்து இன்றுவரை 166 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உலகத்தமிழ் ஆர்வலர்கள் மிகப்பெரிய அளவில் பங்குகொண்டு இத்தொடர் சிறப்புறச் செய்தனர். உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் ன்றியும் உரித்தாக்கி மகிழ்கின்றேன். முதுமையில் தமிழோடு வாழ்ந்து ருகிறேன்.             

நிறைவுரை : சரசுவதி இராமநாதன் அவர்களின் கட்டுரைச்சுருக்கத்தை ஈண்டு வழங்குகிறேன்.  

பிறப்பு முதல் இறப்புவரை இசையோடு (புகழ்) வாழ்பவன் தமிழன். தாலாட்டு கேட்டவாறு உலகைக் காணும் தமிழன் ஒப்பாரி கேட்டவாறு நீத்தலடைகிறான் 

   இசைத்தமிழ் நூல்கள் : பரிபாடல், பஞ்சபாரதீயம், இசைநுணுக்கம், பஞ்சமரபு, பதினாறு படலம், வாய்ப்பியம், இந்திரகாளியம், குலோத்துங்கன இசை நூல் முதலியவை பழந்தமிழ் இசை நூல்கள். நாரதரும், நிசங்கசார்ங்கதேவரம் தமிழிசை அறிந்தவர்கள். புரந்தரதாசர், ”            கர்நாடக இசைத்தந்தை. என்கிறார்கள். பண்ணும், திறமும் திறத்திறமும், ஏழுசுரங்களும் (குரல், துத்தம், கைக்கிளை முதலியன.) தமிழனின் தனி இசைக்குரியன 

    ுரந்தரதாசருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் சிறந்திருந்தது தமிழிசை. பக்திக்கு இசை துணை நிற்பதைப் பெரிய புராணம் காட்டுகிறது. குறளிலிலேயே இசைக்குறித்த செய்திகள் உள்ளன. ஆற்றுப்படை நூல்கள் இசைக்கருவிகள் குறித்துப் பெரிதும் பேசுகின்றன. சங்க காலத்தில் பாணர் புகழ் பெற்றிருந்தமையும் இடையில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டமையும் அறிய முடிகிறது. 

         தமிழிசை வாணர் பலரும் தமிழிசைப் பாடல்கள் யாத்துத் தமிழன்னை மகிழும் வண்ணமும் தமிழர் காதுகள் குளிரும் வண்ணமும் தந்துள்ளனர். பள்ளு, சிந்து, கும்மி, ஆனந்தக்களிப்பு, வில்லுப்பாட்டு, என்று புது வரவுகள் வந்தன. சொற்பொழிவுகளில் தமிழிசைப் பாடல்கள் பாடப்பட்டன. தமிழிசை வாணர் பலரால் தமிழிசை மாநாடுகள் , இசை நிகழ்ச்சிகள், தமிழிசைச் சங்கங்கள் வளர்ந்துள்ளன.”   

 கற்றவையாவும் மற்றையோர்க்கே. எனும் என் குறிக்கோள் வழியில், 

 உலகத்தமிழன்பர்களே மீண்டும் ஒரு தொடரில் சந்திப்போம்.  
...................................தொடரும்..........................