செவ்வாய், 9 ஜூன், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-4. ..பாயிரம் - திறனுரை

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-4.  

               தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - திறனுரை  

தமிழ்கூறு நல்லுலகம் என்றது, தமிழ் பேசப்படும் வழக்குமொழியாதலின்தமிழ்கூறுஎன்ற வினைச்சொல் பெய்தார். முக்காலத்தும் நிகழ்மொழியாதலின்கூறு வினைத்தொகை செய்தார், ‘என்றுமுள தென்றமிழ் என்பது கம்பர் கவிமொழி. ’சீரிளமைத் திறம்என்பது சுந்தரனார் தரவ மொழி 

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்என்றது, வழக்கடிப்படையில் எழுத்தும் சொல்லும் பொருளும், அதுபோல் செய்யுளடிப்படையில் எழுத்தும் சொல்லும் பொருளும் தேடிக் கண்டார் என இயைத்துக்கொள்ள வேண்டும். 

 எழுத்து என்பது எழுத்திலக்கணம் : பொருளொலி, ஒலிநிலைகள், புணர்ச்சிகள் என்றின்னவை இதனுள் அடங்கும்.  

       ல் என்பது சொல்லிலக்கணம்: சொற்கள், தொடர்கள், தொடர்நிலைகள் என்றின்னவை இதனுள் அடங்கும். 

 பொருள் என்பது  பொருளிலக்கணம்: மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை, இவை குறித்த நூன்முறைகள் இதனுள் அடங்கும். ஈண்டு ஒரு வினா.... எழுத்தும் சொல்லும் மொழி பற்றியன ஆதலின் , மொழியதிகாரம் என ஒன்று சொன்னாற் போதுமே. அகம் புறம் என வாழ்க்கை இரு கூறாயினும் பொருளதிகாரம் என்று ஒன்றாகக் கூறவில்லையா என்று வினவலாம். தொல்காப்பியம் வ்வாறு ஓரதிகாரமாகக் கூறியிருக்குமேயானால் அதனையும் நாம் உடன்படுபவர்கள் ஆவோம். எழுத்தோத்து, சொல்லோத்து என ஈரதிகாரமாக வைத்திருத்தலின் அதற்கும் ஒரு காரணம் இருக்கும் 

மொழி என்பது மக்களினத்துக்கே உரிய நுணுக்கமான ஆற்றலான ஆக்கமான தனி முதலும் தனிக்கருவியும் ஆகும். மொழியின்றேல் நாகரிகக் கருத்து எங்கே? வளர்ச்சி எங்கே? இத்தனிப்பெருங்கருவி நன்கு புலப்படுவதற்கு எழுத்து, சொல் என்ற இரு பாகுபாடு வேண்டியதே. வகைப்படக்கூறுங்கால் கூடுதலான இலக்கணங்கள் சொல்லமுடியும்.. ஒலி என்ற நுண்ணுடலையும் சொல் என்ற பருவுடலையும் வேறுபட இலக்கணிப்பதே மொழித்தெளிவும் மொழியாக்கமும் தரும் என்ற நோக்கால் தொல்காப்பியம் ஈரதிகாரம்பட வகுத்தது என்பது என் கருத்து. 

 ஈண்டு மற்றொரு வினா. ‘எழுத்தும் சொல்லும் பொருளும்என்று தொடரோட்டத்தால் ொருள் என்பது சொல்லுக்குரிய பொருள் என்று படாதா என்பது வினா. ஒரு சொல்லின் உண்மைப்பொருளை அத்தொடரளவில் பாராது, முன்னும் பின்னும் வருவன கண்டு பொருள் செய்ய வேண்டும். ஆசிரியன் நிறுத்திய முறைப்படி இது அகப்பொருள் புறப்பொருளெனக் கொள்ளப்படும். இவ்விளக்கம் ஒக்கும் என்றாலும் சொல் காட்டும் பொருளை எங்கு கூறினான் என்பது அடுத்த வினா.  

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்  

சொல்லின் ஆகும் என்மனார் புலவர். என்ற பெயரியல் நூற்பாவில் சொல் என்றாலே பொருளையும் கொண்டது என்ற ஒருமைப்பாட்டினை அறியலாம். எனவே இரண்டாவதான சொல்லதிகாரம் ஓராற்றால் சொற்பொருளதிகாரம் எனத்தகும்.  

  முத்தமிழ் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம். ............தொடரும்...............