சனி, 18 ஏப்ரல், 2026

தமிழமுது –268– தொல்தமிழர் இசை மரபு:128...இசைமரபு - எழுச்சி: பண்சுமந்த பாடல்கள்.

 தமிழமுது –268– தொல்தமிழர் இசை மரபு:128. நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - எழுச்சிபண்சுமந்த பாடல்கள். 

 

பக்தி இலக்கியங்கள் 

          திருநாவுக்கரசர்.அப்பரே’ என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பட்ட  திருநாவுக்கரசரின் பதிகங்கள் எளிமையும் இனிமையும் அடக்கமும் அனுபவமும் முதிர்ச்சியும் உருக்கமும் கொண்டு கண்ணீர்மல்கச் செய்வன. “தமிழோடு இசைப்பாடல் மறந்தறியாத இசைப்பனுவல்கள், ‘தங்கடன் அடியேனையும் தாங்குதல்ன்கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் தொண்டு மனத்தின் வெளிப்பாடுகள். 

 நாவூக்கரசரது திருத்தொண்டோ மும்மைக் கரணமும் ஒன்றிய செம்மை வாய்ந்ததுஅவரது உள்ளம் இறைவனை நெக்கு நெக்கு நினைந்து நினைந்துருகும் மென்னீர்மையுடன் மலை கலங்கினும் நிலைகலங்காத வன்னீர்மையும் உடையதுஅவரது உரை ‘ பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி ; எத்தினாற் பத்திசெய்கோன் என்னை நீ இகழ வேண்டா’ எனக் குறைந்த குரலில் இரந்து கூறும் மென்தன்மைையுடன்  “வானந் துளங்கிலென் மண் கம்பமாகிலென் மால்வரையும்,தானந்துளங்கித் தலை தடுமாறிலென்’ என்று இங்ஙனம் செம்மாந்துரைக்கும் வன்றன்மையும் உடையதுஅவரது உடல் தளர்ந்து அசையும் மெல்லியல்புடன் காடு மலையெல்லாம் நடந்து கால்,கல் தேயினும் ஓய்வின்றி நிலமிசைப் புரண்டு செல்லும் வல்லி்யல்பும் உடையது.  

 நாவுக்கரசர் வரலாற்றுப் பகுதிகள் பலவற்றுக்கு அவர் பாடல்களில் உறுதியுடைய சான்றுகள் பல்வுள்ளனதாம் சமண சமயம் சார்ந்து உழன்றதனையும்இறைவன் பணியை நல்கப் பின்பு அது தீர்த்து ஆட்கொண்டதனையும் பலவிடத்துப் பகர்கின்றார் சொல்லரசர்பெருகுவித்தேன் பாவத்தைப் பண்டெலாங்   

            குண்டர்கள் தஞ் சொல்லே கேட்டு   

உருவித் தென்னுள்ளத்தி னுள்ளிருந்த   

              கள்ளத்தைத் தள்ளிப் போக்கி   

அருகுவித்துப் பிணிகாட்டி யாட்கொண்டு   

              பிணிதீர்த்த வாரர்தம்   

அருகிருக்கும் விதியின்றி யறமிருக்க   

              மறம் விலைக்குக் கொண்டவாறே.” என்பது காண்க 

உள்ளம் தூமையுற்று மெய்யுணர்வு பெறுதற்கேதுவாகிய நன்னெறிகள் பலப்பல நாவரசர் பாடல்களில் ஆண்டாண்டுக் காணப்படுகின்றன. 

 விரதமெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்    பொய்யனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை  

கரும்பமருங் குழன் மடவார் கடைக்கண் நோக்கில் 

துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப் பெரும் பயனை   துறந்தார்க்குத் தூயநெறியாய் நின்றான் தன்னை. என்று , இறைவன்பால் உண்மையின்றி எத்துணை நோன்புகளை மேற்கொள்ளினும் எவ்வெவற்றைச் செய்யினும் அவற்றால் எல்லாம் பயன் இன்றென்பது அவர் கருத்தாம். ..............................தொடரும்...............