திங்கள், 13 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-35. உரையாசிரியர்- சேனாவரையர்:

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-35.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- சேனாவரையர்: மு.வை.அரவிந்தன்.

சூத்திரங்களின் அமைப்பு 

                         இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின்..... என்னும் சூத்திரத்தின் பின் வைக்க எனின்எம்று சேனாவரையர் தாமே வினா எழுப்பிக்கொண்டு விடை கூறுவதும் உண்டு.(67 

                         அவைதாம் தத்தம் பொருள்வயின்” (115) என்னும் சூத்திரத்தின் இறுதியடியாகியவேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்என்பதைப் பிரித்து, ஒரு சூத்திரமாக உரையாசிரியர் உரைத்ததை எடுத்துக்கூறி, அவ்வாறு பிரித்தது சிறந்தது அன்று என்று விளக்குகின்றார் 

                            அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே “- (எச்ச. 407) என்னும் சூத்திரத்தையும் அதற்கடுத்த சூத்திரத்தின் (408) குறளடியாகிய பொருள்தெரி மருங்கின் என்பதையும் சேர்த்து,    

அடி மறிச் செய்தி   

 அடிநிலை  திரிந்து சீர்நிலை திரியாது   

தடுமா றும்மே பொருள்தெரி மருங்கின்  

என்று சூத்திரம் அறுப்பாரும் உளர் என்று சேனாவரையர் சுட்டுகின்றார். 

                                வேற்றுமைப் பொருளை (83) என்னும் சூத்திரத்தின் முதல் இரண்டடியை ஒரு சூத்திரமாகவும், பின் இரண்டடிகளை மற்றொரு சூத்திரமாக உரைப்பாரும் உளர் என உரையாசிரியர் கூறியதாகச் சேனாவரையர் உரைக்கின்றார்.மேலும் பல  உள 

.உரைத் திறன் 

                                    தொல்காப்பியர் வகுத்துள்ள இலக்கண விதிகளையும் சூத்திரங்களையும் சேனாவரையர் தம் நுண்மாண் நுழைபுலம் கொண்டு நுணுகி நோக்கி நூலாசிரியர் ஒவ்வொரு சொல்லையும் பொருளாழத்துடன் அளந்து அமைத்திருக்கின்றார் என்ற கருத்தைப் பல இடங்களில் வற்புறுத்திக் கூறுகின்றார் 

வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது    

நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.” (198) 

 என்ற சூத்திரத்திற்குச் சேனாவரையர் எழுதியுள்ள விளக்கம் பலமுறை கற்று மகிழும் கையில் உள்ளது.  

                              வேற்றுமை கொள்ளாது ன்னாது காலமொடு தோன்றும் எனின், தொழில் நிலையொட்டும் தொழிற் பெயரும் வினைச் சொல்லாவான் செல்லும் ஆகலானும் காலமொடு தோன்றும் என்னாது  வேற்றுமை கொள்ளாது எனின், இடைச்சொல்லும் உரிச்சொல்லும், வினைச்சொல்லெனப்படும் ஆகலானும் அவ்விரு திறமும் நீக்குதற்குவேற்றுமை கொள்ளாது , காலமொடு தோன்றும்என்றார். வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் விளங்காதனவும் உள. அவையாவும் ஆராயுங்கால் காலம் டைய  என்றற்குநினையுங்காலைஎன்றார்.” என்று சேனாவரையர் எழுதியுள்ள ிளக்கம் புலமைக்கு விருந்தளிக்கிறது 

                              இவ்வாறேபெண்மைசுட்டிய” (4) என்னும் சூத்திரத்திற்கு இவர், சொல்லுக்குச் சொல் நுண்பொருள் கண்டு ; உரை எழுதும் திறன் வியந்து போற்றுதற்கு உரியதாகும்.  ...............................................தொடரும்........................................