தமிழமுது –240– தொல்தமிழர் இசை மரபு:100.
தமிழிசை மருத்துவம்.
பத்துப்பாட்டு.
10. மலைபடுகடாம்:
”கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்.” - 302 – 304.
தன் கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் நெடிய பிளந்து காணப்படும் சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவலெனக் கருதி அறல் (குறுங்காடு) போன்ற கூந்தலையுடைய கொடிச்சியர் (குறிஞ்சி நிலப் பெண்டிர்) பாடும் பாட்டால் எழும் ஓசையும்..
விளக்கம் : இலண்டன்பல்கலைக்கழகத் துணை வேந்தர் இசை மருத்துவம் குறித்த பல்கலைக்கழகப் பட்டத்திற்கக்குரிய பாடத் திட்டங்களை உருவாக்க முன்வந்துள்ளார். அவர் இசைஞர்களை இசை மருத்துவத்தில் ஈடுபடுத்துவதோடு, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து இசை மருத்துவர்களாக்கவும் முயன்றுள்ளார். மன அழுத்தம் , மனப்பிறழ்ச்சி, கற்றல் குறைபாடுகள், மனவளர்ச்சிக் குறைபாடு முதலியவற்றால் துன்புறும் மக்களைக் காப்பாற்ற இசை மருத்துவம் பேருதவிபுரியும் என்ற நோக்கில் இசை மருத்துவம் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று அறிவியல் வயப்பட்ட இசை மருத்துவம் தொல்தமிழரின் அரிய கண்டுபிடிப்பன்றோ..!
MUSIC THAT HEALS – Times of India; 10 – 03 – 2014. Michael Thorne, Vice Chancellor, Anglia Ruskin University, UK. The master's in music therapy is a two –year full –time course that trains skilled musicians to become music therapists......”
.........................................தொடரும்..........................................