ஞாயிறு, 28 ஜூன், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-21. ...நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-21.  

               தொல்காப்பியர் வரலாறு 

                     தொல்காப்பியர்-காலம் : 

               நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 

           

 தொல்காப்பியம் பாரத நிகழ்ச்சிக்குப் பின்பே இந்நூல் இயற்றப்பெற்றதாதல் ஒருதலை. பாரத காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் பலர். பாரதப்போர் நடந்தது கி.மு. 1000 ஆம் ஆண்டில் என்று ஒருவரும், கி.மு. 1100 ஆம் ஆண்டில் என்று மற்றொருவரும் கூறுகின்றனர். கி.மு. 1194 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததென்று சித்தூர் கோபாலையர் ஆராய்ந்துரைக்கின்றார். ஆர்.சி. தத்தர் கூறுங்காலம் இன்னுஞ் சிறிது முன்னர்ச் செல்கின்றது. சி.வி. வைத்தியர் என்பவர் கி.மு. 3100 தான் பாரதப்போரின் காலமென்று பல சான்றுகளால் ிறுவுகின்றார். துவாபர கலியுக சக்தியில் பாரதம் நிகழ்ந்ததென்னும் பரம்பரைக் கொள்ளை வைத்தியர் அவர்களால் வேறு சான்றுகள் கொண்டும் நிறுவப்படுதலின் அதுவே பாரதப்போரின் காலமாகுமென யாமும் கொள்ளற்பாலம். இனி மகாபாரதப்போரின் பின்பு தொல்காப்பியம் எப்பொழுது தோன்றியதென்பது ஆராய்தற்குரியது. 

 கி.பி. எட்டாம் நூற்றாண்டுகுமுன் தமிழ் மொழி திருந்திய நிலையையடைந்தது என்னும் கருத்துடைய ஒருவர் தொல்காப்பியம் அந்நூற்றாண்டை அடுத்துத் தோன்றியதாகும் என்பர்.  கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைநேந்திரமே தொல்காப்பியப் பாயிரத்தில்ஐந்திரம்எனக் குறிக்கப்பட்டதென்னும் கருத்துடைய ஒரு சாரார் அஃத கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடையில் உதுத்ததாகும் என்பர்.சாதவாகனன் என்னும் அந்திர மன்னனுக்கு அமைச்சராயிருந்த சார்வவர்மனால் இயற்றப்பட்டகாதந்திரம்என்பதே திராவிட இலக்கணங்களுக்கு வழிகாட்டிற்று எனக்கொண்ட மற்றொரு சாரார் இந்நூல் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பின்பு எழுந்ததாகுமென்பர். 

            இங்ஙனம் ஐரோப்பிய ஆசிரியர் சிலராலும் இந்திய ஆசிரியர் சிலராலும் பலவாறாகக் கூறப்பட்டன வெல்லாம் பழங்கதையாய்ப் போனமையின் இனி அவற்றின் பொருந்தா இயல்புகளை எடுத்து  விளக்குதல் வேண்டா. கடைச்சங்கத்தின் இறுதிக்காலமானது கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பிற்பட்டதன்று என்பது வரலாற்றறிவுடைய தமிழ் வல்லோர் பலராலும் இப்பொழுது நன்கு துணியப்பட்டுள்ளது. கடைச்சங்கப் புலவருள்ளே பெரும் பகுதியினர் கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் இருந்தோராவர். அவர்களால் இயற்ற்ப்பெற்ற செய்யுட்களில் சகடம், சமம், சமழ்ப்பு, ஞமலி, ஞமன், யவனர் முதலிய சொற்கள் பயின்று வந்திருப்பவும்  தொல்காப்பியனார் 

சரக் கிளவியும் அவற்றோ்றே’ ;  

அ ஐ ஒள, வெனும் மூன்றலங் கடையே’  ‘ 

எ.ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய’ : 

ஆவோ டல்லது யகரம் முதலாது.’  

என்னும் சூத்திரங்களால் ச, ஞ, ய, முதலிய எழுத்துக்கள் மொழிக்கு முதலாக என விளக்கியுள்ளார் ற்றும் அவர் .......”நாற்சீர் கொண்டது அடியெனப்படுமே”  என்று கூறிவைத்து. ........... ...............................தொடரும்.................................