தமிழமுது –304 – தொல்தமிழர் இசை மரபு:164 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...!
இசையரசு எம்.எம். தண்டபாணி தேசிகர்:
தமிழிசைய 20ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற சிறந்த புலவர்கள் தோன்றி வளர்த்தனர். இச்சூழலில் தண்டபாணி தேசிகர் தோன்றினார். தமிழிலே ஒரு புதுமையையும் தமிழ்நாட்டில் ஓர் புரட்சியையும் ஏற்படுத்தியவர் இசையரசு எம்.எம். தணடபாணி தேசிகர். 1908 ஆம் ஆண்டு தஞ்சைக்கு அருகில் திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் பிறந்தார்.
தேசிகர் ஓதுவார் மரபில் தோன்றியவராதலால் இளமையிலேயே தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய பல செந்தமிழ்ப் பாடல்களைக் க்ற்று பல தேவாரக் குழுக்களில் இணைந்து பாடியுள்ளார். தண்டபாணி தேசிகர், தமிழிசைக் கட்டுரைகள், தேவாரத் திவ்விய பிரபந்தத் திருப்புகழ் பாடல்கள் தமிழிசைப் பாடல்கள் 17ந் தொகுதி போன்ற நூல்களை எழுதியும் இசையமைத்தும் பதிப்பித்தும் பட்டினத்தார், நந்தனார் திரைப்படங்களில் பாடியும் நடித்தும் தமிழிசைக்குப் பெரிதும் தொண்டாற்றியுள்ளார்.
தேசிகரின் ‘இசைத்தமிழ் பாமாலை என்னும் நூலில் காணப்படும் சில பாடல்களில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பஞ்சமரபு, தேவாரம், கல்லாடம், திருப்புகழ் போன்ற பல நூல்களில் கூறப்பட்டுள்ள இசை இலக்கணம் குறித்த செய்திகளைப் புகுத்திப் பாடித் தமிழிசைக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். தண்டபாணி தேசிகரின் “தமிழிசைக் கட்டுரைகள்” எனும் நூலினை நோக்கும் போது தமிழிசைப் பாடல்கள் தமிழிசை விளக்கங்கள் தமிழிசை பற்றிய ஆய்வுகள் ஆகியவை தேசிகரின் குறிக்கோளினை வெளிப்படுத்துகின்றன. -கூ.மு. புவனேஸ்வரி.
.......................................தொடரும்......................................