ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

தமிழமுது –210– தொல்தமிழர் இசை மரபு:70. ....செவ்வழிப்பண் .

 தமிழமுது –210– தொல்தமிழர் இசை மரபு:70. செவ்வழிப்பண்  

6.  கலித்தொகை:-  நல்லந்துவனார்நெய்தற்கலி : 118.  

 தலைவன் பிரிந்த நிலையில்  ஆற்றாத தலைவி மாலைப் பொழுது கண்டுஅதனுடன் தனியே வருந்திக் கூறினாள்அதனைத் தோ கேடகமாலைப் பொழுதுடன் தலைவி புலந்து நின்றனள்.   

மாலை நீ தூ அறத் துரந்தாரை நினைத்தலின் கயம் பூத்த  போதுபோல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்  

 ஆய்சிறை வண்டு ஆர்ப்ப சினைபூப்போல் தளைவிட்ட 

ாதலர்ப் புணர்ந்தவர்  காரிகை கடிகல்லாய்  12. 

  1. மாலையே நம் வலிமை இல்லாமல் நீங்குமாறு நம்மைவிட்டுப் பிரிந்தாரை நினைக்கின்றாய் குளத்திலே பூத்த மலர்போது போல நின்னைக்கண்டு மனம் குவிந்த என் அழகினைக் கண்டு இகழுவாய் ;  அழகிய சிறகினை உடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படிகிளையிடத்தே மலர்ந்த கட்டவிழ்ந்த பூப்போலமனம் நெகிழ்ந்த காதலைரைக் கூடியிருக்கின்ற மகளிரின் பேரழகைப் போக்க மாட்டாய் ஆதலின் நீ மயக்கத்தை உடைய மாலையாய் இருந்தாய் என்றாள்  

  1. மாலை  நீ - தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டு ”          

பையெனற் நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்  

 செவ்வழி யாழ்நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்  

பொய்தீர்ந்த புணர்ச்சியுள் புதுநலம் கடிகள்ளாய்.” - 13 – 16. 

 மாலையே...! கோவலருடைய தனித்த குழல் தை என்னும் ஓசைப்பட ஒலித்தல் கேட்டு வருந்தும் நெஞ்சத்தவரின் பக்கமே வந்து உயிரைக்கொள்ளாதே புன்மையைக் கூறி நின்பாய் ; யாழ் நரம்பிலே எழுகின்ற செவ்வழிப்பண் போலப் பேசும் மொழியின உடையார் பாராட்டும்பொய்யற்ற நனவிற் புணர்ச்சியில் பெற்ற புதிய நலத்தைக் கடிவதில்லையேகடிய மாட்டாய்ஆதலின் நீ மயக்கத்தை உடைய மாலையாய் இருந்தாய் என்றாள் 

         

 லைப் பொழுது கண்டு வருந்தினவர்களை  மேலும் வருத்துகின்றது ; மகிழ்ந்தவர்களை மேலும் மகிழ்விக்கின்றது இதன் அருளற்றதன்மை கண்டு தலைவி  வருத்தும் மாலை என்றாள் 

     ................தொடரும் ...........