புதன், 29 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -17.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -17.

களந்தை- களப்பாள்

இறைவரின் திருப்பெயர் : ஆதித்தேச்சுவரர்

இறைவியாரின் திருப்பெயர் : பிரபாநாயகி

வழிபாடாற்றியவர் : ஆதித்த சோழன், கூற்றுவநாயனார்.

 

இவ்வூரின் சிறப்பு :  கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம்  இக்களப்பாள் ஆகும். “கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூர்றுவனே” என்பது திருத்தொண்டர் திருவந்தாதி.

 

கல்வெட்டு வரலாறு ;  இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளுள் அழகியநாதசுவாமி கோயிலின்  இரு கல்வெட்டுக்களின் மூலங்கள், தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளிவந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகிறேன்…….

 

ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறுபன்மர் திரிபுவனச் சக்கரவர்த்திகள்

சிறிகுலசே (க) ர தேவற்கு யாண்டு உயங [வது] உளச-ள் பங்குனி மீ களப்பாள் உடையாற் திருவாதித்தீ [சு]ர முடையாற்கு வாகூருடையார் பிள்ளை காடு [வெ] ட்டியார் மகனார் சொக்க நாய [னா]ர் கட்டின சந்தி ஒன்று.

இவற்றால் களப்பாள் என்பது ஊரின் பெயர் என்பதும் ஆதித்தேச்சரம் என்பது கோயிலின் பெயர் என்பதும் புலப்படுகின்றன.

மேற்குறித்துள்ள செய்திகள் , 

 நூல் : “ஒன்பதாம் திருமுறையில் உள்ள தலங்களின் வரலாற்றுக் குறிப்பு”-

நூலாசிரியர்: கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர்

வித்துவான் வை. சுந்தரேச வாண்டையார்.

………………………….தொடரும் …………………….

செவ்வாய், 28 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -16

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -16

 “அந்தணீர்க் களந்தை அலைபுணற் களந்தை ”எனத் திருவிசைப்பாவில் வருவதால், இக்களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப்படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடையதால் நீர் வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக்களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும்.

பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.(A.R.E. 1927 Nos.164 – 177)

 அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண். 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர்                ‘ ஆதிபுராணீஸ்வரம் உடைய நாயனார்’ என்றே குறிக்கப் பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டுவந்துவைக்கப்பட்டதாகும். கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை – ‘Stray Stone – எனக்குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று.”

……………………..தொடரும்………………. 

வெள்ளி, 24 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -15

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -15

”குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்

     குழகரே ஒழுகுநீர்க் கங்கை

அழகரே யாகில் அவரிடங் களந்தை

     அணிதிகழ் அதித்தேச் சரமே.” எனவும்

 

( திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் திருவாய் மலர்ந்தருளிய ‘கருவூர்த்தேவர்’ இத்தலத்தில் அருளிச் செய்த திருவிசைப்பா பத்தும் களந்தை எனும் ஊர்ப்பெயர் கொண்டு விளங்குதலைக் காணலாம்)

 

திருக்களந்தை ஆதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும் இறைவரின் திருப்பெயர் அழகர் ( அழகியநாதசுவாமி ) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் “இராசேந்திர சோழவளநாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம்” என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன.ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தரிவிக்கின்றன. இறைவற்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது.”

……………………தொடரும்………………….. 

வியாழன், 23 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -14

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -14

 சோழநாட்டில் களப்பாள்

செங்கற்பட்டு ஜில்லா, செங்கற்பட்டு தாலுகாவில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒருசாராரும் தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டித் தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ர ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும்  கோயமுத்தூர் ஜில்லா, பொள்ளாச்சித் தலுகாவில் உள்ள பெரிய களந்தை என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். இவைகலின் வன்மை மென்மைகள ஆராய்வாம்.

 பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டலசதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க்கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஆதலால், இக்களத்தூர் திருவிசைப்பாப்பெற்ற கோயில் களந்தை ஆகாது.

தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டி தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204 ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திரு ஆதித்தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும்அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தைஎனவும்…..

…………………..தொடரும்……………………

புதன், 22 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -13.

 

களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -13.

இறைவனின் திருவடி

தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாகச் சூடிக்கொள்வேன்என்று எண்ணி அம்பலத்தரசனை, ‘நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும்என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.

அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார்.

உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் திருவருளை எண்ணி எண்ணி உருகினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்ததை எல்லோருக்கும் முதலவான இறைவனார் நிகழ்த்தியை எண்ணி நெகிழ்ந்து பரவினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து எதற்கும் அஞ்ச வேண்டாம்என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர்.

தில்லைவாழ் அந்தணர்களும் இறைவனார் கூற்றுவ நாயனாருக்கு திருவருள் புரிந்ததை அறிந்ததை அறிந்து அவரிடம் பேரன்பு கொண்டு தில்லை திரும்பினர்.

பின்னர் கூற்றுவ நாயனார் இறைவனார் கோவில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டு பேரின்பம் கண்டார். இறுதியில் நிலைத்த இன்பமான வீடுபேற்றினை இறையருளால் பெற்றார்.

கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட கூற்றுவ நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்என்று போற்றுகிறார்.  (இனிது

இணைய இதழ்)

செவ்வாய், 21 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -12.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -12.

சோழநாட்டில் களப்பாள் என்னும் ஊரிலிருந்து அரசாண்ட மன்னன் அச்சுதக்களப்பாளன் என்றும் களப்பாள அரசன் மற்ற அரசர்களோடு போர்புரிந்து வெற்றி பெற்றான் என்பதை,

 

‘”படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடி – வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம். எனும் தனிப்பாடல் சுட்டுகின்றது.

“கூற்றுவ நாயனார் என்பவர் சோழவள நாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களந்தையைத் தன் பெயரால் களப்பாளை ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவனென்னும் பெயர் பெற்றார்.”

 

கூற்றுவ நாயனார் இறைவனின் திருவடியை திருமுடியாக ஏற்றவர்

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர்.

திருக்களந்தை என்னும் திருத்தலத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சி செய்தனர். அதில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர்.

பகைவர்களுடன் போர்புரிகையில் கூற்றுவனைப் போல் (எமனைப் போல்) தோன்றி மிடுக்குடன் போர்புரிந்து வென்றமையால் இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார்.

சிவனார் மேல் ஆழ்ந்த அன்பும் பெரும் பக்தியும் கொண்டமையால் கூற்றுவ நாயனார் என்று ஆனார். ஆதலால் இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை.

களந்தை என்னும் ஊரில் இருந்த அம்மன்னர் பல மன்னர்களுடன் போர் செய்து வெற்றி பெற்றார். அந்த வெற்றிகளால் செருக்குறாமல் இறைவனை நினைத்த வண்ணம் இருந்தார்.

எல்லாம் அவனின் திருவருள்என்ற எண்ணத்தினைக் கொண்டவராக இருந்ததால் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதியபடியே இருப்பார்.

சிவனடியார்களைக் கண்டால் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார். மேலும் பலவகையான சிவத்தொண்டுகளிலும் ஈடுபட்டு பேரின்பம் கண்டார்.

……………………………………..தொடரும்…………………………………….

திங்கள், 20 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -11.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -11.

 

கூற்றுவ நாயனார்

 

”மல்லன் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத்

தில்லைவாழ் அந்தணர் தம்மை வேண்ட அவருஞ் செம்பியர்தந்

தொல்லை நீடுங் குலமுதலோர்க்கன்றிச் சூட்டோம் முடியென்று

நல்காராகிச் சேரலநன்தன் மலைநாடு அணைய நண்ணுவர்”  எனவும் சேக்கிழார் கூற்றுவநாயனார் குறித்துக் கூறுவார்.

 

சைவ சமய 63 நாயன்மார்களில், 'களப்பாளர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். கூற்றுவர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார்.

கூற்றுவர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார்[2]. அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.

மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணிமுடியைக் காவல் செய்யும்படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

அது கண்ட கூற்றனார் மனம் தளர்ந்து முடியாக உமது பாதம் பெற வேண்டும்என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர் கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர். “ Wikipedia)

 

களப்பிர அரசர்கள் சமணர்கள் என்றும் வைணவர்கள் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இவர்தம் கடவுள் பெயர் அச்சுதன், அச்சுதன் சமணருக்குரிய அருகக்கடவுளையும் குறிக்கும்; வைணவருக்குரிய திருமாலையும் குறிக்கும் . களப்பிர அரசர்கள் அச்சுதன் என்னும் சிறப்புப் பெயரையும் கொண்டிருந்தனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆசாரிய புத்த தத்ததேரர் (பூதமங்கலம்) சோழநாட்டுத் தமிழர் ; ஒரு பெளத்த பெரியார். இவர் வினய வினிச்சயம் எனும் பாலி  மொழி நூலைக் களம்ப அரசன் காலத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் அச்சுத விக்கந்தன் களப்ப (களப்பிர) குலத்தில் பிறந்தவன் என்று கூறியுள்ளார். இதில் களப்ப குலம் எது என்பது ஆய்வுக்குரிய  செய்தியாகும்.

…………………..தொடரும்…………………..