செவ்வாய், 8 ஜூலை, 2025

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆசிவகம் :

 

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆசிவகம் :

கி.மு. 6 இறுதியில் இந்தியச் சிந்தனை மரபில் வேத, வைதிக எதிர்ப்பு நிலவியது.புத்தர், மகாவீரர், பக்குடுகை நண்கணியார், பூரணர், நரிவெரூத்தலையார் முதலியோர் தோற்றிய ஒரு புதிய கோட்பாடு ஊழியியல்ஆசிவகம் = வாழ்க்கை முறை.  கணிநந்தவாசான், பூதப் பாண்டியன்நண்பன், - ஆசிவகத்தைச் சார்ந்தவன் என்பர். பூதப்பாண்டியன் இவரை  ‘ வெஞ்சின இயக்கன்’ எனக் குறிப்பார். சங்க காலத் தமிழில் நல்வெள்ளையார், இவரைப் பாலிமொழி ‘பரமச்சுக்க நிலை’ என்கும். இவர் படைத்தலைவர், ஆசிவகர் இவருக்காக எடுக்கப்படுவதுதான் குதிரை எடுப்பு (புரவி எடுப்பு) நிகழ்கிறது.

 

ஐயனாரின் மூன்று நிலைகள் – போர்க்கோலம், பூரணம் பொற்கலை (இரு மனைவியருடன்) மணமாகாத ஐயனார் ஆகியனவாகும். பூரணர், மற்கலி, கணிநந்தவாசான் இம்மூன்று அறிஞர்களும்  ஐயனார்களாகப் போற்றப்படுகின்றனர்.

சித்தன்ன வாசல் ஓவியம் ஐயனார் வரலாற்றின் மூல ஊற்று என்றும் அவ்வோவியங்கள் சமணர்க்கு உரியவையல்ல என்பர்.

ஐயனார் – சாத்தன் – குதிரை வாகனன். ஐயனார்  ஆசிவகத்தில் துறவி எனப் போற்றப்டுகின்றார், அறிவு, வளமை, வீரம்  என மூன்றின் கூறுகளாக்க் கொண்டு வழிபடுவர்.

சாத்தானாகிய ஐயனார் 96 வகையான தருக்க சாத்திரங்களில் வல்லவர் என்பர்.

ஆசிவகர் உணவு – கஞ்சி

ஐயனார் படையல் – பொங்கல்.

 ஐயனார் சிலையைத் துணியால் மூடிவிட்டு,  கடா வெட்டு நடைபெறும். இந்நடைமுறை கருப்புகளுக்கு உரியது (பெரியண்ண சாமி, ஒண்டிக்கருப்பு, பாலடிக் கருப்பு).

.………………………தொடரும் ------------------------------

திங்கள், 7 ஜூலை, 2025

 

தமிழமுது –.67 . தமிழர் இயற்கை வழிபாடு.

அறிவு வழிபாடு:

சூரியனைக் கொண்டு தொடங்கும் ஆண்டைப்போல வியாழனை அடிப்படையாகக் கொண்ட ஆண்டும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. கி.பி. 12 வரை சேர பாண்டிய நாடுகளில் அக்கணக்கு முறையே இருந்தது. சூரியனை ஒரு சுற்று, சுற்றிவர தோராயமாக 12 ஆண்டுகள் (11.86) ஆகும் எனக் கணக்கிட்டு அதனால் ஆண்டுக் கணக்கை 5 சுற்றுகளாக நெறிப்படுத்தி 60 ஆண்டுகளை வரையறை செய்தனர். இவ்வாண்டுக் கணக்கு மறைந்தது. அதன் எச்சமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடந்தையில் கொண்டாடப்படும் மகாமகம்.

தமிழிசை :

 தமிழ் இசை வானியலோடு தொடர்புடையது.

 ஓம் பிரணவ மந்திரம்அறிவியல் குறியீடு. இப்பேரண்டம் பெருவெடிப்பில் பிறந்தது என்பர்.

பெரு வெடிப்பில் காற்று உருவானதுவளி.

வெப்பச்சுழலில் காற்று மோத  உருவானதுதீ

 நெருப்பு குளிர்ந்துமழை / பனி  -- நீர்.

 நீரை அடுத்து  இருந்ததுநிலம்.

இந்நான்கும் செழிக்க நின்றதுவான்.

 

 சங்க இலக்கியத்தில் கடவுள்துறவி / அறிஞர்கள்வாழ்வியல் நெறிகளைப் போதித்தனர்.

 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின். “ –தொல்காப்பியம்.

 கடவுள் நண்ணிய பாலோர் போலஎன்பர்.

திருக்குறள் கடவுள் வாழ்த்து மா மனிதர்களைப் பற்றியது.

சிவன் பூ, எருக்கம். – மணமாகாத ஆண் இரந்தால் எருக்கம் பூ மாலையிடுவர்.  சிவன் -  ஆலமரம்துறவி வடிவம்.

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆசிவகம் :

சனி, 5 ஜூலை, 2025

தமிழமுது –.66 . தமிழர் இயற்கை வழிபாடு. அறிவு வழிபாடு:

 

தமிழமுது –.66 . தமிழர் இயற்கை வழிபாடு.

அறிவு வழிபாடு:

பாலியல் உறவு குறிக்கும் சடங்குகள் தந்திர வழிபாடு.

 மூல தந்திரம் ..(original Tantras) மனித உடல் குறித்த ஆய்வுதேகவாதம்எனப்பட்டது. தேகவாதம்மருத்துவ அறிவியல் தோற்றம்.

உடலியல் ஓகம் (யோகம்)

எண்ணூல் சாங்கியம். இவை இரண்டும்உலகாய்தம் / பூதவாதம்.

எண்ணிய யோகம்உலகாய்தம்வேத /  வேள்விச் சடங்குகளை எதிர்த்தது.

என்ணியம் (சாங்கியம் ஓகம், உலகாய்தம் > வேதங்களை விட உயர்ந்தது.

எண், எழுத்து > எண் எண்ணியம் (சாங்கியம்) ; எழுத்துதருக்கவியல்.

எண்ணியம், ஓகம், உலகாய்தம்ஒரு மரத்தின் கிளைகள்தமிழர்கள் இதனைஐந்திரம்என்று அழைத்தனர்.

கி.மு. 6க்கு முன்னே தமிழர் ஐந்திரம்  புகழ் பெற்றனர். இந்திய மெய்யியல்தருக்கவியலின் மூல ஊற்றுகள்.  தொல்காப்பியம், திருக்குறள் இன்னபிற வேறு எம்மொழியிலும் நூல்கள் இல்லை.

இவர்களே முனைவர்கள்கடவுளர்இக்காலக்கட்டத்தில்தான் கடவுள் வழிபாடு தோன்றியது.

வளமை, வீர வழிபாட்டுடன்அறிவு வழிபாடு தோன்றியது. அறிவு வழிபாடுதான் சிவன், திருமால் வழிபாடு. முனைவர்கள் (கடவுளர்) மிகச்சிறந்த வானியல் அறிஞர்கள்.

 

நாள் மீன் தொகுப்பு – 12 இல்லம் (ராசி.)

ஒவ்வொரு திங்களிலும் கதிரவன்  ஒவ்வொரு இல்லத்தில் தங்கிப் பெயர்வதாகவும் கதிரவன் இயக்கம் அறிந்தனர். ஆண்டுக்கு 365 நாள்கள். ஆண்டு மேழ இல்லத்தி (ராசி) (சித்திரைத் திங்கள்) தொடங்குவதாகக் கண்டனர்.

கிரேக்க வரலாற்று அறிஞர்  மெகஸ்தனிஸ் இண்டிகா நூலில் பாண்டிய நாட்டை ஓர் அரசி ஆண்டு வந்தாள்; அவள் தன் நாட்டை 365 கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி அரசுக்குத் திரை செலுத்த வேண்டும் என ஆணையிட்டிருந்தாள். அதனால் ஆண்டு முழுவதும் அவளின் அரசு கருவூலம் நிறைந்தபடி இருந்ததுஎன்று குறித்துள்ளார்.

………………………………………தொடரும்……………..

வெள்ளி, 4 ஜூலை, 2025

தமிழமுது –.65 . தமிழர் இயற்கை வழிபாடு. தந்திர வழிபாடு:

 

தமிழமுது –.65 . தமிழர் இயற்கை வழிபாடு. 

தந்திர வழிபாடு:

தமிழரின் அறிவியல் வளர்ச்சிக்கான வித்தாகவும் அடி நிலமாகவும் அமைந்திருப்பது இந்தத்தந்திர வழிபாடு’. சிந்து சமவெளி நாகரிகம்  தமிழர்க்குரியது என் ஔறுதி செய்த  அலெக்சாந்தர்  கோந்த ரவோத் சிந்துவெளி நாகரிகத்தின் திறவுகோல் தமிழர்களின்  சித்தர் இலக்கியங்களிலேயே புதையுண்டு கிடக்கிறது என்றார்.

 

 தமிழர்களின் தாய்த் தெய்வங்கள் யாவும் போரோடு தொடர்புகொண்டவையாக இருக்க, வைதிகர்களின் பெண் தெய்வங்களோ போரோடு தொடர்பற்றவையாக உள்ளன. வேதப் பெண் தெய்வங்கள் யாவும் அவற்றின் கணவர்கள் தெய்வங்கள் என்பதால் மட்டுமே பெருமை பெற்றனவே அன்றித் தமக்கென எந்த உயர்வும் சிறப்பும்  பெற்றவையல்ல..

தமிழரின் வழிபாடாகத் தொடங்கிக் கொற்றவை என்னும் வீர வழிபாடால வளர்ச்சியடைந்ததாகும்.

 முருக வழிபாடு:

முருகன், சேயோன், மகன், சேய், என்று கூறும் திருமுருகாற்றுப்படை  கொற்றவை மகனே முருகன். இதுவும் வீர வழிபாடே.  பெண் தலைமைச் சமுதாயம்ஆண் தலைமைக்கு , “வெறியாடும் கந்தனும் தொல் தமிழர் வீர வழிபாட்டைக் குறிக்கும்.

முருகனுக்கு  ஆடு வெட்டிப் படைக்கும் மரபு  என்பதை நற்றிணை

அணங்கறி கழங்கிற் கோட்டங்காட்டி

வெறியென உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து

அன்னை அயரும் முருகு.” என்கிறது.

முருகனின் செங்காந்தள் பூவளமைக்குறி.

முருகனை ஆண்டியாக வணங்குவதும் விரதம் இருப்பதும் புலவுப்படையலைத் தவிர்ப்பதும்  ஆரிய நடைமுறைகள்.

அறிவு வழிபாடு:

 

………………………………………தொடரும்……………..

வியாழன், 3 ஜூலை, 2025

தமிழமுது –.64 . தமிழர் இயற்கை வழிபாடு. வளமை வழிபாடு.

 

தமிழமுது –.64 . தமிழர் இயற்கை வழிபாடு.  

வளமை வழிபாடு.

உலகிலேயே குறைவான மூடநம்பிக்கைகளைக் கொண்டவர் தமிழர்கள் .” அறிஞர் கால்டுவெல்.

எத்தியோபியா மொழியில் தமிழ் = அறிவு / பகுத்தறிவு.

 

 தமிழரின் தொன்மை வழிபாடு:

1.  வளமை வழிபாடு

2.  வீர வழிபாடு

3.  அறிவு வழிபாடு.

வளமை வழிபாடு ( Fertility Cult) – தாய்த் தெய்வ வழிபாடு ; கொற்றவை.

 பயிர்கள் செழிப்பு வளம்பெண்ணக உருவகப்படுத்தல் . நிலமகள், நிலநங்கை.

 

இனக்குழு அடையாளத்தில் வளத்தின் குறியீடாகமரம்.

சேரன்பனை

சோழன்ஆத்தி

பாண்டியன்வேம்பு.

மன்னர்களின் காவல் மரங்கள் (போரில் பகைமன்னர் தோற்கடிக்கப்பட்டபின் வென்ற மன்னன் பகைமன்னனி காவல் மரத்தை வெட்டி வீழ்த்தித் தன் வெற்றியைக் கொண்டாடுவான்.)

காவல் மரங்கள், பின்னாளில் கோயில் (தல விருட்சங்கள்) மரங்களாயின..

மரம் காய்,கனிகள் தருவதுபோல்  பெண், பிள்ளைகளைத் தருதல்வளக்குறியீடு.

 

மர வழிபாடு மனிதகுலம் முழுமையும் உண்டு.

பெளத்தம்அரச மரம்

சமணம்அசோசக மரம்.

சைவம்ஆலமரம்.

 

மழை வளம் -  பெண்தெய்வம்மாரிகுறியீடு.

 மாரியம்மன்அம்மன் வழிபாடு. வானமிழ்தம்விளைவு.

 

அறுவடைத் திருநாள்;

 அறுவடை செல்வச் செழிப்புக்கு அடையாளம்.

ஊர் விளைந்தால் ஓட்டிற்குப் பிச்சை.” –பழமொழி.

 

குமரிவளமை வழிபாடு.

குறியீடுகரகம்.ஒளவை நோன்புவளமை வழிபாடு.

பெண் தலைமை : தொல்காலம்:

 வளமை வழிபாடுபெண் தெய்வ வழிபாடு.

தமிழில் தாய்த் தெய்வ வழிபாடு போரோடு தொடர்புடையது. கொற்றவை வழிபாடுகரந்தைத் திணை.

மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே.” –தொல்காப்பியம்.

போருக்கு முன் வேந்தன் கொற்றவை வழிபாடு நிகழ்த்துவான்.

கொற்றவை வழிபாடோடு இணைந்த்தே பேய் வழிபாடு.

பேச்சியம்மன் , இயக்கியம்மன். (இசக்கியம்மன்.)

…………………………..தொடரும்……………………

புதன், 2 ஜூலை, 2025

தமிழமுது – 63 .திருக்குறள் பரிமேலழகர் உரைத்திறன்: சான்றோர் சிந்தனை:

 

தமிழமுது – 63 .திருக்குறள் பரிமேலழகர் உரைத்திறன்: சான்றோர் சிந்தனை:

உயர்ந்த இலக்கியங்கள் உரையாசிரியர்களால் நுட்பமான உரைகளும் நயமான விளக்கங்களும் பெற்றுச் சிறப்படைந்தன. உரைகளும் விளக்கங்களும் எழுதியவர்கள் இலக்கிய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் நல்ல தொண்டு புரிந்தார்கள். எட்டாம் நூற்றாண்டில் களவியல் என்னும் நூலுக்கு நக்கீரர் என்னும்  உரையாசிரியர் எழுதிய உரையே அவ்வகையில்  பழமையானது.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பத்து அறிஞர்கள் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள், திருமலையர், மல்லர், பரிமேலழகர்.

 

 வடமொழியறிவும் தமிழ்மொழிப் புலமையும் உடைய இவரது உரையைப் பாராட்டிபரித்த உரையெல்லாம் பரிமேலழகர் தெரித்த உரையாமோ தெளிஎன்று புலவர் போற்றுவர். இவரது காலம்…….. இவர் காஞ்சிபுரம் அர்ச்சகர் மரபில் வந்தவர் என்பர்.

 வடமொழி நூல்களின் கருத்துகளைத் தழுவியும் ஒப்பிட்டும் உரை எழுதும் போக்குடையவர். அதனால் சில இடங்களில் நூலாசிரியரின்  உண்மைக்கருத்தை  உணரமுடியாமற் போயினும் பல இடங்களில் திருக்குறளின் பொருள் ஆழத்தையும் நயத்தையும் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

 ஓரிடத்தில் கூறியதை மறுபடியும் கூறாத செறிவும் உணர்த்தும் பொருளுக்கு ஏற்றபடி சொற்களை வரையறுத்து  நிறுத்து எழுதும் திறனும் இவருடைய உரையின் சிறப்பியல்புகள்.

 பால்பகுப்பு முறை,, அதிகார வைப்பு முறை ஆகியவற்றைத் தொடர்புபடுத்திக்காட்டும் உரைப் போக்கினை இவரிடத்தில் காண்கிறோம். மேலும் ஓர் அதிகாரத்திற்குள்ளேயே குறள் வைப்பு முறையின் பொருத்தத்தைக்காட்டி ஆங்காங்கே அவற்றை வகைப்படுத்தி முடிவுகட்டும் திறனையும் இவரிடத்தில் காணலாம்.”

………………………….தொடரும்……………………………

 

செவ்வாய், 1 ஜூலை, 2025

தமிழமுது – 62 . திருக்குறள்- கடவுள் வாழ்த்து

 

தமிழமுது  62 . திருக்குறள்- கடவுள் வாழ்த்து ;

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.” தொல்.புறத்.85.

மாற்றாரை வென்று உயர்த்திய கொடியின் சிறப்பினைப் பாடுவதுகொடிநிலை.

மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக்க் குறிப்பதுகந்தழி.

வள்ளல் தன்மையைக்குறிப்பதுவள்ளி.

பாட்டுடைத் தலைவனைப் பாடும்போது கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் என்பர்.

கொடிநிலை மின்னலுக்கு நிலையாகிய மேகம்வான் சிறப்பு.

கந்தழிகந்து அழி ; பற்றுக்கோட்டை அழித்தல்நீத்தார் பெருமை.

வள்ளிவள்ளன்மை ; அறத்தன்மைஅறன் வலியுறுத்தல்.

 என்றும் பொருள்கூறிப் பொருத்திக்காட்டுவர்.

திருக்குறள் பதிப்புகள் ;

முதல் பதிப்பு – 1811 ஆம் ஆண்டு அம்பலவாணக் கவிராயர், பரிமேலழகர் உரைப்பதிப்பு. 1840 ஆம் ஆண்டு, இராமானுசக் கவிராயர் 24 அதிகாரங்கள் மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்புடன்.

ஒப்பிட்டு உண்மை அறிதல்  முதல் பதிப்பு 1812  என்றும் கூறுவர்.