சனி, 13 ஜூன், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-8. .... நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-8.  

               தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - மறுப்புரை: 

               நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.  

இரு மொழிப் புலமையும் ஒருங்குடைய பெரியாராகிய சிவஞான முனிவர் தாம் இயற்றிய தொல்காப்பிய்ப் பாயிர விருத்தியில்ஐந்திரம் நோக்கித் தொகுத்தானெனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்குட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும் உயர்திணை, அஃறிணை முதலிய சொற்பாகுபாடும் அகம் புறமென்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்பட்டமையானும் என எழுதிய உரை சிந்திக்கற்பாலது. 

 தொல்காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரம் எனக் கூறிய சுப்பிரமணிய தீக்கிதர் கூற்றையே ஆசிரியர் சிவஞான முனிவர் இங்ஙனம் மறுத்துரைத்தவராவர், தமிழிலக்கணத்திற்கு வடமொழி இலக்கணம் முதனூலாதல் எவ்வாற்றானும் பொருந்தாதென்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. தேசிகர் கூற்றும் இதனானே மறுக்கப்பட்டமை ஓர்க. 

 வடமொழி, தென்மொழி ன்னும் பெயர் வழக்கே அவை வெவ்வேறு தனி மொழியாமென்பதுணர்த்தி நிற்கவும். வடக்கினின்று தெற்கு தித்ததென்பார் போல வடமொழியினின்று தென்மொழி வந்ததென்பார் ிலர் தோன்றினமை பரிவுறற்பாலதே. அதிலும் தமிழ் இலக்கணங்களைத் துறைபோகக் கற்ற  

இலக்கணக்கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகர் ந்தெழுத்தாலொருபாடைஎன்றறையநாணறி வுடையோர் என்று கூறியதுதான் பெரிதும் இரங்கற்குரியது. இனி, ஐந்தெழுத்தாலொரு மொழியெனவும் அறிவுடையோர் நாணுவர் என்னுங்கூற்றை இன்னுஞ் சிறிது ஆராயது விடுதல் தக்கதன்று. தமிழ் எழுத்துக்கள் முப்பத்து மூன்றென ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியிருப்பவும் அதனைச் சிறிதும் சிந்தியாது ஐந்தெழுத்தென்று கூறியது என் கருதி? 

 தமிழ் முதலெழுத்துக்கள் முப்பதில் இருபத்தைந்தெழுத்து வடமொழியிலிருத்தலின் அவற்றைக் கழித்து எஞ்சிய ஐந்துமே தமிழுக்குரியவாகக் கூறலாயிற்றெனின், வடமொழியெழுத்துக்கள் யாவும் பிறமொழிகளில் காணப்படுதலின் வடமொழிக்கென ஓரெழுத்தேனும் இன்றென ஏன் கூறுதல் கூடாது?. இனி அவர் எள்ளிக்கூறிய ஐந்தெழுத்தும் அத்துணை எளிமையுடையனவல்லயென்பதையும் ஓர் டுத்துக்காட்டில் வைத்து விளக்குகின்றேன்நற்றா டொழா அரெனின் 

...................................தொடரும்............................................