வியாழன், 23 ஏப்ரல், 2026

தமிழமுது –273 – தொல்தமிழர் இசை மரபு:133.... சுந்தரர் செந்தமிழிசை மீட்பு :

 தமிழமுது –273 – தொல்தமிழர் இசை மரபு:133. நீட்சியும -  வீழ்ச்சியும. ஆடல + பாடல = கூத்த (நாடகம) 

இசைமரபு - எழுச்சிபண்சுமந்த பாடல்கள். 

       சுந்தரர் செந்தமிழிசை மீட்பு  

தமிழின் சுவையே இவர் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதும் தமிழிலேதான் இவருக்கு எல்லை இகந்த பற்றிருந்தது 

பண்ணார் இன் தமிழாய் “ என்று திருப்புன்கூர்த் திருப்பதிகத்திலும் ; “ பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்.” என்று திருமழப்பாடித் திருப்பதிகத்திலும் ;  மற்றும் இறைவனைக்குறித்து ,  

தமிழோடு இசை இசை  கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்.”  என்று திருக்குருகாவூர் வெள்ளடைத் திருப்பதிகத்திலும் ;    

கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம்  / இடர் தீர்க்கும் கருப்பறியலூர்.” என்று திரு வீழிமிழலைத் திருப்பதிகத்திலும் ;  

 தண்டமிழ் நூல் புலவனார்க்கோர் அம்மானே.” எனத் திருக்கருப்பறியலூர் திருப்பதிகத்திலும்  

செந்தமிழ் திறம் வல்லீரோ. செங்கண் அரவம் முன்கையில் ஆட வெந்து நிற்கும் இதுஎன்கொலோ.” என்பது செந்தமிழானது அரவின் நச்சினைத் தடுக்கும் மந்திரமாம் என்பார்.” என்று திருபைஞ்ஞீலித் திருப்பதிகத்திலும்என்றெல்லாம் தமிழிசையை இங்ஙனம் பாராட்டுகின்றார் 

 மேலும் ஆளுடைய பிள்ளையார் வேதம் முதலிய அனைத்தையும் ஓதாது உணர்ந்த பெருந்தகையாயினும் அவரை “ நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன்.” “ நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று கூறிப் பரவுதலாலும் தாமும் இன்னிசையால் தமிழ பரப்பினமையும் நன்கு துணியப்படும் 

ுந்தரர் வாழ்க்கை  எவ்வளவு பெருமிதமும் இன்பமும் ிறைந்தது என்பதனை நாம் அறிவோம், 

அப்பெருமையிலோ இனிமையிலோ அவர் நெஞ்சம் தாழ்ந்திலது என்பதனை அவர் வாய்மொழிகள் நன்கு புலப்படுத்துகின்ற. “சொல்லிடில் எல்லையில்லை சுவையிலாப் பேதை வாழ்வு  ; நல்லதோ கூரைப்புக்கு நல்லமிக அறிந்தேன் அல்லேன்.” ..... நல்லதோர் கூரையிலே(உடம்பிலேபுகுந்தும் இன்பம் ஒன்றும் கண்டிலராம்இவ்வாழ்விலே சுவை ஒன்றும் இல்லையாம்..! இவ்வாறு தன் அனுபவத்தை எடுத்தியம்பும் பெருமான்.....  

தேற்றம் உண்டேல் மரணம் உண்டு துயர மனை வாழ்க்கை ; இன்பமுண்டேல்  துன்பம் உண்டு ஏழை ம்னை வாழ்க்கை ‘ மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் ; பிணம் எனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்.” என்று பொதுவாகவும்உலகியல் வைத்தும் பிறப்பின் பொல்லாங்கினை எடுத்துக்காட்டி ஆதலால் பிறவியை வேண்டேன் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். 

....................................... தொடரும் .....................