ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-68-.... எழுத்துக்களது பிறப்பு :

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-68- ஓர் அறிவியல் அறிஞர்  

                        எழுத்துக்களது பிறப்பு 

ஆய்வுரை. பேராசிரியர்  க. முருகையன். 

                                எழுத்துக்கள் அனைத்தையும் உச்சரிக்கும்போது (எல்லா எழுத்தும் சொல்லுங்காலை) அவற்றின் பிறப்பிற்கான வழிமுறையை நன்க உணர்ந்து (நெறிப்பட நாடி) ஒருவன் செயலாற்றுவதன் மூலம் வாயறையில் உள்ள இயங்கு உறுப்புக்கள் அவற்றோடு ஒத்த இயங்கா உறுப்புக்களோடு இணைய (உறுப்புற்றமைய) ஒலிகள் பிறப்பதற்கான முயற்சி (ஆக்கம்) வெவ்வேறாக அமையும். இதன்மூலம் ஒலிகள் இயல்பாகப் பிறக்கும் (இயல) என்று தொல்காப்பியர் கூறுகின்றார். 

                               இயங்குறுப்பு இயங்கா உறுப்பை அணுகும் முயற்சியில் பலவகையுண்டு இவ்வுறுப்புக்கள் இணைந்து மூச்சுக்காற்று வரும் வழியை ஏதேனும் ஓரிடத்தில் முழுமையாக அடைப்பதனால் டைப்பொலி (..stop.) பிறக்கின்றது. இவை நெருங்கிச் சிறு இடைவெளி விட்டு அமையும் போது உரசொலி (.firicative.) உண்டாகின்றது. நா இருபக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்து வாய்வழியை டுவில் அடைப்பதன் மூலம் மூச்சுக்காற்று வாயின் மருங்குகளின் வழியே வெளியேறி மருங்கொலி (.Lateral..) யை உண்டாக்குகின்றது. வாயறையின் வழியே விரைந்து செல்லும் மூச்சுகாற்று நாநுனி, உதடு, உள்நாக்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அதிரச் செய்கின்றது. இவ்வகை அதிர்வு ஒரே ஒரு முறை மட்டும் நிகழ்ந்தால் தட்டொலி (.flap..) யும் பல முறை நிகழ்ந்தால் ஆடொலி (trill..) யும் பிறக்கின்றன. இவ்வாறின்றி வாயறையின் உறுப்புக்கள் (நா, இதழ்) ஓரளவுக்கு நெருங்கி (open approximation..) மூச்சுக்காற்று தடையின்றி வெளியேறும் வகையில் அமைவதன்மூலம் உயிரொலி ( vowel.) யும் உயிர்ப்போலி (approximant.) யும் பிறக்கின்றன. இவ்வாறு பல ஒலிகளையும் பிறப்பிக்கும் இயங்கு உறுப்புக்கள், இயங்கா உறுப்புக்களை அணுகும் விதத்தைத்தான் தொல்காப்பியர்பிறப்பின் ஆக்கம் வேறு வேற என்று கூறுகின்றார். .........................................தொடரும்................................