தமிழமுது –283– தொல்தமிழர் இசை மரபு:143. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - திருமூலர் -திருமந்திரம் : சித்தர் மரபு.
கி,பி.5ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருமூலரின் திருமந்திரம் தான் சைவ இலக்கிய வரலாற்றில் தோன்றிய முதல் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
தமிழ்ச் சித்தர் மரபில் சடங்குகளுக்கு இடமில்லை. சடங்கு, மரபு வழிப்பட்ட வழிபாடு, சம்பிரதாயம், என்ற சொற்களுக்குள் புகுந்துகொண்டு இடைத்தரகர்கள் மிகப்பலர் பொதுமக்களின் பணத்தை, அவர்களின் நேரத்தைக் கொள்ளையடிப்பதைக் இன்று காண்கிறோம். இவர்றை அடியொற்றி இன்று சமய வழிபாடு என்ற பெயரில் நடைபெறும் மூடத்தனங்களுக்கோ, குருட்டு நம்பிக்கைக்கோ சித்தர் மரபில் இடமில்லை.
தமிழ்ச் சித்தர்மரபில் கடவுள் ஒருவரே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார் திருமூலர். ஏகன் அடிபோற்றி என மாணிக்கவாசகரும் ‘ஒன்று என் திரு தெய்வம் உண்டுஎன்றிரு’ எனப் பட்டினத்தாரும் போற்றுகின்றனர். அசைவற்ற நிலையில் பெருவெளியாய் நிராதாரமாய் (அண்ட சராசரங்கள் அனக்த்திற்கும் ஆதாரமாக இருக்கும் அம்மெய்ப்பொருளுக்கு எதுவும் ஆதாரமில்லை அது நிராதாரம்) பூரணமாய் இருக்கும் மெய்ப்பொருள் இன்று எனக் கண்டுரைத்தவர் தமிழ்ச்சித்தர்.
அண்டத்தையும் (புறநிலை) பிண்டத்தையும்(அகநிலை) ஒரே பரம்பொருள்தான் ஆட்சி செய்கிறது என்று உரௌத்தவர் தமிழ்ச்சித்தர். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாக ஒளிரும் இறைவனைப் புறத்தில் சென்று காண இயலாது. எனவே எல்லையற்ற பரம்பொருளை மனித உடம்பிற்குள் கண்டு களீத்தனர். தாமே வந்து தண்ணளி பெய்து கண்ணொளி காட்டி, கருத்தினுள் ஒளிரும் மெய்ப்பொருளைச் சிக்கெனப் பிடித்தனர் சித்தர். உடம்பென்னும் ஆலயத்திற்குள் உள்ளமாகிய கருவறையுள் இறைவன் எழுத்தருளியிருக்கிறான் என்பதனைத் தமிழ்ச்சித்தர்கள் கண்டு உரைத்தனர்
“ நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உர்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே.” (2770)
எனத்திருமூலர் கூறுவதுஹ்போல் புருவ மையமாகிய இருதயக் கமலத்தில் சிவப்பிரகாசமாகிய அருட்பெருஞ்சோது தெய்வம் அனைவரையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
.............................தொடரும்...........................