வியாழன், 2 ஏப்ரல், 2026

 தமிழமுது –253– தொல்தமிழர் இசை மரபு:113 நீட்சியும் -  வீழ்ச்சியும்ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

கூத்து (நாடகம்எழுச்சியும் வீழ்சியும். :  

 தொல்தமிழர் இசைமரபோடு இயைந்து வளர்ந்த கூத்துக்கலை 64 கலைகளுள் ஒன்றெனக் கொள்வர் 

நாடகத் தமிழ் _ கதைமாந்தர்களின் வடிவம் பூண்டு ஒரு கதையை நடந்ததுபோல் நடித்துக்காட்டுவது 

 தொல்தமிழகத்தில் நாடகக் கலை இரண்டுநிலைகளில் நிகழ்த்தப்பட்டனவேத்தியல்பொதுவியல் எனும் இரண்டுமாம்.  வேத்தியல் என்பதுஅரசர்க்குமுன்  அவையில் ஆடும் கூத்துமன்னரின் வீரம் செறிந்த புகழைப் போற்றி நிகழ்த்தப்படுவதாகும்.  பொதுவியல் என்பது அம்பலத்தில் பொதுமக்கள் கண்டு மகிழ்வதற்குரிய கூத்தாகும்.  கூத்து - பதினொரு வகை என்பதை முன்னரே சுட்டியுள்ளேன். 

கூத்தர் - நாடகம் நடிப்போர் 

கூத்தர் சாக்கையன் - கூத்து நிகழ்த்தும் சாக்கையர் குலத்தான்கூத்தப்பள்ளி - அரண்மனையைச் சார்ந்த நாடக  அரங்கு 

 கூத்தன் - நாடகன். க 

ூத்தாடி - கழைக் கூத்தன், க 

ூத்தாடிச்சி - கூத்து நடிப்பவல் 

கூத்தம்பலம் - கூத்தாடுவதற்குரிய கோயில் அரங்கு 

    கூத்துக் களரி - நடன சாலை 

கூத்துப் பாடுவோன் - ஆடல் ஆசிரியன் 

குரவைக்கூத்து - எழுவரேனும்ஒன்பதின்மரேனும் கைகோத்து ஆடும் கூத்து 

ஓரை - மாதர் கூட்டம் ; மகளிர் விளையாட்டு. 

 ஓரை அயர்தல் - நீர்த்துறைகளில் ஓரைப்பாவையை  வைத்துக்கொண்டு மகளிர் விளையாடும் விளையாட்டுதமிழர்தம் ஐவகை நிலங்களிலும் மண் மணம்கமழும் கூத்துகள் நிழ்ந்துள்ளன.   

தமிழரின் தொன்மை மிகு இசைக்கருவியாகக் குழலும் யாழும் விளங்குகின்றன.  பழந்தமிழ் மக்கள் கொன்றையந் தீங்குழல்ஆஅம்பலந் தீங்குழல்முல்லையந் தீங்குழல்  என்கிற மூவகை குழல்களை இசைத்தமையைச் சிலப்பதிகாரம் ுறிப்பிடுகின்றது. - செகற்பகம்ஆய்வாளர் 

சங்க கால இசைக்கருவிகளாக விளங்கிய கின்னரம்கொடுகொட்டிதக்கைதமருகம்கிணைபேரிமுழவுகொட்டுதுடிமுரசு போன்ற சைக்கருவிகள் உருவிலும் இசைப்பிலும் காலந்தோறும் மாற்றங்களைப் பெற்று வந்துள்ளன..” - த. கனகசபைஆய்வாளர்/. ...........................................தொடரும்...............................................