தமிழமுது –228– தொல்தமிழர் இசை மரபு:88.
பத்துப்பாட்டு- 5. முல்லைப்பாட்டு. வெற்றிக்கொடி- இசை முழக்கம்.
“.......... .......... ........வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு\
விசயம் வெல்கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப....- 89 –92.
பகைவரை வென்று, அவர்தம் நிலங்களைக் கவர்ந்த திரண்ட பெரிய படையோடு, வெற்றிக்கொடி உயர்த்தி, ஊது கொம்பும் சங்கும் முழங்கத் திரும்புகின்றான் தலைவன்.
( புலம் - நிலம் . ; பெருந்தானை - பெரிய படை. ; விசயம் - வெற்றி. ; வயிர் - ஊதுகொம்பு. ; வளை - சங்கு. ; ஆர்ப்பு - ஆரவாரிக்க.)
முதிரும் காயை உடைய வள்ளியங்காடு பின்னாகும்படி விரைந்து செல்லும் குதிரையை மேலும் தூண்டிச் செலுத்தி வருகின்ற, போர் வினைக்கண் திறம்மிக்கு விளங்கும் தலைவனின் நெடிதாகிய தேரில் பூட்டிய குதிரைகள் ( இன்பல் இமிழ் இசை கேட்டவளாய் ஆற்றியிருக்கும் தலைவியின் செவிகள் குளிரும்படி ஆரவாரித்தன, என்று இனிமையாக நிறைவடைகிறது முல்லைப்பாட்டு.
............................தொடரும்......................................