ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-66- ஓர் அறிவியல் அறிஞர்.
எழுத்துக்களது பிறப்பு :
ஆய்வுரை. பேராசிரியர் க. முருகையன்.
” உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யான.” -தொல்.பிறப். 83.
உந்தியிலிருந்து காற்றுத் தோன்றி, மேலே வந்து தலை, கழுத்து, நெஞ்சு, இவ்ற்றில் நின்று, பல், உதடு, (இதழ்) நாக்கு, மூக்கு அண்ணம் ஆகிய (3 +5) எட்டு உறுப்புகளிலும் தொடர்புற்று, எல்லா வகை எழுத்துகளும் தோன்றும். ஒவ்வொரு வகை எழுத்துகளும் வெவ்வேறு தன்மையில் தோன்றும் ; அவை தெளிவாக அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளன.
தொல்காப்பியர் உந்தியின் செயலை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் மூச்சுக் காற்று ஒலி எழுப்பிகளால் மாற்றம் அடைந்து பேச்சொலிகளைப் பிறப்பிக்கின்றன என்றார்.
பேச்சொலிகளின் பிறப்பு பற்றி நல்ல தெளிவான கருத்து உடையவராகக் காணப்படுகின்றார் என்பது அவர்தம் நூற்பாக்களை நோக்குவோருக்கும் புலனாகும். ஒலிகளை எழுப்ப உதவும் மூச்சோட்டப் பொறி நுட்பத்தையும் மூச்சோட்டத்தையும் தொல்காப்பியர் ஆய்ந்துணர்ந்து கூறியுள்ளார். பேச்சொலி உறுப்புகள் மூச்சுக்காற்று செல்லும் வழியில் அமைந்துள்ளன என்றும் அவை மூச்சுக்காற்றின் போக்கில் ்மாற்றங்களை விளைவிக்கின்றன என்றும் இதனாலேயே பேச்சொலிகள் உண்டாகின்றன என்றும் அவர் கருதுகின்றார். இதனையே “ வளி..... பல்லும் இதழும் நாவும் அண்ணமும்..... உறுப்புற்றமைய....... எல்லா எழுத்தும்....இயல” என்று கூறுகின்றார். ....................தொடரும்.......................................................................