திங்கள், 20 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-42. உரையாசிரியர்- பேராசிரியர்:

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-42.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- பேராசிரியர் மு.வை.அரவிந்தன். 

ஆராய்ச்சித்திறன் : 

                              பேராசிரியர் தம் ஆராய்ச்சித் திறன் தோன்ற நம்மை வியக்கச் செய்கின்றார். பேராசிரியர் உவம இயலில் வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடியாக உவமைகள் பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார்(உவம. -1) வடிவமும் நிறமும் பண்பினுள் அடங்கும் அவ்வாறு அவர் கூறாது, வேறு வேறாகக் கூறியதற்குக் ாரணம் கூறுகின்றார். 

                                 இரவுக் குறிக்கண் கூற்று நிகழ்த்தும் தலைவன் கண்ணால் காணும் நிறம்பற்றிய உவமை கூறமுடியாது, கையாலும் மெய்யாலும் தொட்டு அறிந்து வடிவம் பற்றிய உவமை மட்டுமே கூற முடியும். பகல் வேளையில் நிகழும் கூற்றுகளில் நிறம் பற்றிய  உவமைகள் இடம் பெறுவது இயல்பே. நுட்பமாக இதனை உணர்ந்த தொல்காப்பியர், மெய் உரு என்ற இரண்டினையும் பண்பு என்ற ஒன்றினுள் அடக்கிவிடாமல் வேறுபடுத்திக் ூறினார் என்பது பேராசிரியர் கருத்தாகும். இக்கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது. 

                           இதனைத் தொடர்ந்து,”இந்நான்கு பகுதியேயன்றி அளவும் சுவையும் தண்மையும் வெம்மையும் தீமையும் சிறுமையும் பெருமையும் முதலாயின பற்றியும் உவமப்பகுதி கூறாரோ எனின் அவை எல்லாம் இந்நான்கினுள் அடங்கும்என்று எழுதுகின்றார்.உவம உருபுகளைப்பற்றி இவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். தொல்காப்பியர் கூறிய முப்பத்தாறு உருபுகளேயன்றி வேறு சில உவம உருபுகள் வரும் என்று குறிப்பிடுகின்றார். “பிறிவும் என்பதனான் எடுத்து ஓதினவே அன்றி நேர ,நோக்க, துணைப்ப, மலைய ,ஆா ,அமர, அனைய ,ஏர, ஏர்ப்ப, செத்து, அற்று, கெழுவ என்றல் தொடக்கத்  பலவும். ஐந்தாம் வேற்றுமைப் பொருள் பற்றி வருவனவும், என எச்சங்கள் பற்றி வருவனவும். பிறவும் எல்லாம் கொள்கஎன்று தம் ஆராய்ச்சித் திறன் வெளிப்படும் வகையில் கூறுகின்றார் (உவம்-11). 

................................தொடரும்..........................................