ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-54.- ஓர் அறிவியல் அறிஞர்.
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)
”தொல்காப்பியம் புள்ளி: நுண்ணளவு பின்னங்கள் : தமிழர்கள் தொன்மைக் காலத்திலிருந்தே நுண்ணிய அளவு முறைகளைக் கொண்டிருந்தனர். அளவில் மிக நுண்ணியதாக அவர்கள் கண்டது ‘அணு’. அணு முதல் சாண் வரை நுண்ணளவைகள் குறிக்கப்படுகின்றன. “ அணு என்பது கோடியிலோர் செண்டிமீட்டர் என்கிறார் நெல்லை சு. முத்து. கீழ்வாய்ச் சிற்றிலக்க வாய்பாட்டில் 6.5 தேர்த்துகள் = 1 நுண்மணல் தொடங்கி 320 மேல் முந்திரி ஒன்று அஃதாவது 1 என்னும் முழு எண் 1/320 இதில் அணுவின் நுண்பகுதி குணம். 9 குணம் = 1 அணு. கீழ்வாய் இலக்கணம் என்பது முந்திரி (1/320) தொடங்கி ¾ வரை.
நீட்டலளவை:
இவ்வாய்பாடு 8 அணு = 1 தேர்த்துகள் எனத் தொடங்கி, 4 கூப்பிடு = 1 காதம் என்பது வரை.
சதுர வாய்பாடு : தமிழரின் தொன்மை அளவுகளில் இதுவும் ஒன்று. இதனைக் குழிக்கணக்கு என்பர். 1குழி = 12*12 = 144 ச. அடி.
முகத்தலளவைகள்: 360 நெல் = 1செவிடு (37.6 மிலி.) தொடங்கி 20 = 1பொதி (1560லிட்.) வரை வாய்பாடு உள்ளது.
நிறுத்தலளவைகள்: இவ்வாய்பாடானது 1 உளுந்து = 65மி.கி.; 2 தூக்கு = 1துலா = 12.5 சேர்.= 3.4. கி.கி. கேற்கூறியுள்ள அளவுகளுக்குக் குறியீடுகளும் குறிக்கப்பட்டுள்ளன.
தொல்காப்பியர் காலத்தில் இவ்வளவைகள் பயன்பாட்டில் இருந்தன என்பதை “வண்ணத்தின் வடிவினளவிற் சுவையினென்று அன்ன பிறவும் அதன் குணம் நுதலி ( சொல். 416)இந்நூற்பாவின் பொருள், வடிவு என்பது வட்டம், சதுரம், கோணம் முதலியனவாம். அளவு என்பது நீளம். அகலம், உயரம், பரப்பு என்பவற்றைக்குறிக்கும்.
செயற்குறியீடுகள்: கணக்குச் செய்முறைக்கான குறியீடுகள் கூட்டல் +. கழித்தல் ---, பெருக்கல் * வகுத்தல்.-. இன்னவாறு விரியும்.
தொன்மைத் தமிழர்கள் இக்குறியீடுகளை எவ்வாறு குறித்து விடைகண்டனர் என்பதற்குத் தொல்காப்பியம் சான்றாகிறது . தொல்காப்பியச் சொல்லதிகார இறுதியில் நச்சினார்க்கினியர் குறிப்பிடும் இயல் தொகுப்பு.அறுபானிரண்டு ----62. இருபஃதிரண்டேழைந்து ----22,35, நாற்பதின் மூன்று ----43அறுபானின்மேலேழு --67..... இவ்வாறு செயற்குறியீடுகல் எழுத்திலிருக்க வழக்கில் குறியீடுகள் இருந்திருக்க வேண்டும்.
....... புள்ளி........................தொடரும்.....................