சனி, 6 ஜூன், 2026

”ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்.” --1.

  ”ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்.” --1.  

                                               ைவற்ற நிறைந்த நிலையான பெருமைக்குரியவர் தொல்காப்பியனார்.என்று பாராட்டுகிறார் மயிலைநாதர். 

      ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய முனிஇலக்கணக் கொத்து சிறப்புப் பாயிரம்.             

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:  

       கால மாறுபாடுகளுக்கும் கடல் சுழற்சிகளுக்கும் தப்பி இப்போது நமக்குக்கிடைப்பன, இடைச்சங்க நூல் தொல்காப்பியமும் கடைச்சங்க நூல்களாகிய  பத்துப்பாட்டும் ட்டுத்தொகையும் ; திருக்குறளும்  சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்க மருவிய கால நூல்களாகிய பதிணெண்கீழ்க்கணக்குமாகும் தொல்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் முழுமையான இலக்க நூலாகும். இந்நூல் ஓர் இலக்கண நூல் மட்டுமன்று மொழியியல், இலக்கியவியல், வாழ்வியல், நிலவியல், உயிரியல், உளவியல் அறிவியல் முதலா பல்துறைகளும் கொண்டொளிரும் தனிப்பெரும் நூலாகும் தொல்காப்பியனாரின் ஆணைவழியே பின்வந்தவர்கள் நூலியற்றினர் என்று பல்காப்பியனார் பாராட்டுவார்  

கூறிய குன்றினும் முதனூல் கூட்டித்  

தோமின் றுணர்தல் தொல்காப் பியன்தன்  

ஆணையிற் றமிழறிந் தோர்க்குக்குக் கடனே.” என்பார் 

          தொல்காப்பியம், ழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் .  

எழுத்ததிகாரம் -  9 இயல்கள். நூன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப்புணரியல். 

 சொல்லதிகாரம் : 9 இயல்கள். கிளவியாக்கம் வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல்.  

 பொருளதிகாரம் :9 இயல்கள். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்.   

       தொல்காப்பிய நூற்பாக்கள் 

       மூன்று பழைய வெண்பாக்கள், எழுத்ததிகாரம் - 483 ; சொல்லதிகாரம் - 464 ; பொருளதிகாரம் 665. நூற்பாக்களையும் கொண்டுள்ளன என்று கூறுகின்றன. இக்கணக்குப்படி நூலின் கூடுதல் நூற்பாக்கள் 1612 ஆகும். ஆயினும் மூன்றாவது வெண்பா நூற்பாக்களின் தொகையாக 1610 என்றே கூறுகிறது. நூற்பாக்களின் எண்ணிக்கை உரையாசிரியர்களிடம் வேறுபடுகின்றது. இளம்பூரணர் கூடுதல் நூற்பாக்கள் 1595 என்றும் நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் 1611 நூற்பாக்கள் என்றும் கொண்டனர். தொல்காப்பியம் எழுத்ததிகாரம்:........... 

..................................தொடரும்......................................................