செவ்வாய், 7 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-30. ..இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-30.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன். 

                                 உரையாசிரியர் சில சொற்களின் பொருளை நன்கு விளக்கிச் சொல்லுகின்றார். அத்தகைய விளக்கம் ஆராய்ச்சி உலகிற்குப் புதிய ஒளி தரவல்லவை. அவற்றுள் சிலவற்றைக் காண்போம் 

                         ம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவர் முகக் குறிப்பினால் தோற்றுவித்தல். அலராவது சொல்லுதல் (களவியல் - 49) 

       புலவி அண்மைக்காலத்தது ; ஊடல் அதனின் மிக்கது (கற்பியல்- 15,) 

         மடம் என்பதற்கும் பேதமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின், மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல் ; பேதமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல். (மெய்ப்பாட் - 4.)  

              மாணாமை என்ற சொல்லிற்கு மிகாமை என்ற பொருள் உரைப்பது இவரது புலமைச் சிறப்பைக் காட்டுவதாகும்.மாண மறந்து உள்ளா நாணிலி”  -(கலித்- 89.) என்றாற் போல மாணாமை என்பது மிகாமை என உரைப்பினும் அமையும்.” (மெய்ப்பாட் - 24.)  

             ப்பும் உருவும்என்று தொடங்கும் சூத்திரத்தின் கீழ் (பொருளியல் - 42.) ஒப்பு , உரு,, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், முதலிய சொற்களுக்குக் கூறும் பொருள் கற்று மகிழத்தக்கவை.  

                 படிமையோன் என்பதற்குத்தவ ஒழுக்கத்தை உடையான்; என்று பாயிரப் பகுதியில் பொருள் கூறிய இவரேபடிமை என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபுஎன்று உரைக்கின்றார். (அகத் - 30) 

                யவனர் என்ற சொல்லை ஆரியச் சிதைவு என்று கூறுகின்றார். (எழுத் - 65.)  

                   உயர்வு தாம் பல: குலத்தால் உயர்தலும், தவத்தால் உயர்தலும், நிலையால் உயர்தலும், உபகாரத்தால் உயர்தலும் என. (சொல். -87.)உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினான் உயர்ந்தாரையும் காட்டும். கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும், செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்.” (அகத்.-3 

                 ”பிறப்பே குடிமைஎன்னும் சூத்திரத்தின் கீழ்நிம்பிரி கொடுமைஎன்னும் சூத்திரத்தின் கீழும் (மெய்ப்பா- 25,6.) பல சொற்களை இனிது விளக்கியுள்ளார்...........சூத்திர அமைப்பும் உரைப்போக்கும்........ ................................தொடரும்........................................