செவ்வாய், 31 மார்ச், 2026

தமிழமுது –251– தொல்தமிழர் இசை மரபு:111 ..ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)

 தமிழமுது –251– தொல்தமிழர் இசை மரபு:111 நீட்சியும -  வீழ்ச்சியுமஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

                              மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 8. 

 

நாடகம் என்பது - தமிழ்ச்சொல்லேநடித்தல் என்பது இன்னொருவனைப்போல் அல்லது இல்லாததை உள்ளது போலச் செய்து காட்டுதல்.  முத்தமிழ்  தொன்றுதொட்டு இயலிசை நாடகம்் என்றே வழங்கும்நாடகக்கலை கூத்துநடனம்நாடகம் என முத்திறப்படும்.. 

 

           ுதித்தாடுவது கூத்து,அதுவேத்தியல்பொதுவியல் உலகியல்தேவியல் ; வசைக்கூத்துுகழ்க் கூத்துவரிக்கூத்துவரியமைதிக் கூத்து (வரிச்சாந்திக் கூத்துஅமைதிக் கூத்து (சாந்திக்கூத்துவேடிக்கைக்கூத்து (விநோதக்கூத்து.) அகக் ூத்துபுறக் கூத்துவிளையாட்டுக் கூத்துவினைக் கூத்து ; வெற்றிக் கூத்துதோல்விக் கூத்து எனப் பல்வேறுவகையில் இவ்விருவகைப்படும் 

            நடனம் அல்லது நடம் என்பது அழகுற ஆடுவதுஅது 108 உடற்கரணங்களோடும் கை கால் கண் வாய் முதலிய உறுப்புகளின் தொழிகளோடும் கூடியதுகைவினைகள் எழிற்கைதொழிற்கைபொருட்கை என முத்திறப்பட்டுபிண்டி அல்லது இணையா வினைக்கை யெனப்படுஒற்றைக்கை வண்ணம் முப்பத்துமூன்றும் பிணையல் அல்லது இணைக்கையெனப்படும் இரட்டைக்கை வண்ணம் பதினைந்தும் கொண்டதாகும்.  

                தமிழ் நடனம் இன்று பரதநாட்டியம் என்று வழங்குகின்றதுபரத சாத்திரம் வடமொழியில் இயற்றப்பட்டதுகி.மு.4ஆம் நூற்றாண்டாகும்அதற்கு முந்தியது தமிழ்ப் பரதமேயென்பதை “நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன.” என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரைப் பாயிறத்திற் கூறியிருப்பதால் அறிந்து கொள். . 

..........................தொடரும் ..........................