சனி, 16 மே, 2026

தமிழமுது –294 – தொல்தமிழர் இசை மரபு:154 .....இசைமரபு - மறுமலர்ச்சி - சிற்றிலக்கியங்கள் :

 தமிழமுது –294 தொல்தமிழர் இசை மரபு:154 - நீட்சியும் - 

  வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

இசைமரபு - மறுமலர்ச்சி - சிற்றிலக்கியங்கள் :    

  சந்தச் சிற்றிலக்கியக்கியங்களில் காவடிச் சிந்து  இலக்கியம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். பாரதியின் இலக்கியவளத்தில்  சிந்துக்கு தனி இடம் உண்டு. என்வே அவருடைய தாசன் அவரைச்சிந்துக்குத் ந்தைஎன்றார்.   இயல்பான நடையில் வழக்குச் சொற்கள் லிந்து இடம் பெற - காவடி நடைக்கு ஏற்பட சந்தப் பாடல்களைக்கொண்டது காவடிச் சிந்து ஆகும்.   

 “ மந்தமேதி உள்ளே எட்டும் - சினை  

வராலும் மேலெழுந்து முட்டும் - போது    

மடி சுரந்து ன்றுதனை நினைந்து -கண்ட    

மட்டும் பாலைக் கொட்டும். “ என்று,  

அண்னாமலை ரெட்டியார் காவடிச் சிந்துப் பகுதியில் வாழ்வியல் வழக்குச் சொற்கள் இடம் பெற்றுள்ளதை அறியலாம்.  கண்டமட்டும், எட்டும், முட்டும், கொட்டும், என்பன சந்த ஓசையைச் சுட்டுவன ஆகும். 

                        பொருட்சிறப்பு : சிற்றிலக்கிய வகயில் பெரும் பிரிவாக அமைவது பொருட் பாகுபாடு கொண்ட  இலக்கியங்களாகும் அகப்பாட்டு என்றும் புறப்பாட்ட என்றும் இரண்டு வகையில் அவ்விலக்கியங்களைப் பிரிப்பர். கோவை, மடல், தூது, ஊடல், உலா, உள்ளிட்ட இலக்கியங்கள் அகத்துத்துறையச் சார்ந்தவை.  அகத்துறை இலக்கியங்களுள் தலைமை சான்றது கோவை இலக்கியம். கோவை இலக்கியங்கள் 400 பாடல்களாகப் பாட வேண்டும் என்ற பாட்டியல் நெறிமுறை மீறப்பெற்றமையும் உண்டு.  

அகப்பொருள் சிர்றிலக்கியமாகிய உலா இலக்கியவகை தமிழ்ப் புலவர்களின் கவிச் சிறப்பை நிலை நாட்டுவதாகும். ஒட்டக்கூத்தர் பாடியமூவருலா’ 12ஆம்  நூற்றாண்டின் அரசியல் நிலையை -- முடி மன்னர்களின் பரம்பரையை எடுத்துக்காட்டும் சிறந்த இலக்கியமாகும். 

 “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற   மாணவனுக்கு வகுப்பது பரணி.” 

 என்று இலக்கண விளக்கப் பாட்டியல் பரணி இலக்கிய இலக்கணத்தைத் தரும். பரணி இலக்கியம் புறப்பொருள் சிற்றிலக்கியத்தில் தலை சிறந்ததாகும். இவ்விலக்கியங்கள் தமிழர்தம் வீரச்சிறப்பை எடுத்துக்காட்டுவதோடு சந்த வேறுபாட்டால் உணர்ச்சி வேறுபாட்டையும் பொருள் வேறுபாட்டையும் உணர்த்தும் தாழிசைகளைக் கொண்டு விளங்கிப் படிப்போர் உள்ளத்தைப் பரவசப்ப்டுத்துகின்றன 

கலம்பகம், பிள்ளைத்தமிழ், சதகம், மாலை உள்ளிட்ட சிர்றிலக்கியங்கள அவ்வக்காலக் கவிஞர்களின் ஆன்மிக உணர்வுகளையும் பாட்டுடைத் லைமக்களின் பெருமைகளையும் இயற்கை வருணனைகளையும் உவமைச் சிறப்புகளையும் யாப்பு வளங்களையும் கொண்டு விளங்கித் தமிழின் இன்சுவையை எடுத்துக்காட்டுகின்றன. 

                              ...................தொடரும்........................