ஞாயிறு, 26 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-47. உரையாசிரியர்- தெய்வச்சிலையார் :

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-47.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- தெய்வச்சிலையார் : மு.வை.அரவிந்தன். 

வடமொழிப் புலமை 

                           இவர் வடமொழியில் புலமை உடையவர். வடமொழி இலக்கணக் கருத்தை பல இடங்களில் எழுதுகின்றார். பாணினியின் இலக்கணக் கொள்கையை இரண்டு இடத்தில் சுட்டுகின்றார்.   

 “ஒரு வினை ஒடுச்சொல் உயர்பின் ழித்தே (88) என்ற சூத்திரத்தி்ற்கு ேறுபட்ட உரையை எழுதி, ‘இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும்என்று உரைக்கின்றார 

                               “வண்ணத்தின் வடிவின்(41) என்ற சூத்திரத்தின் உரையில் “வேற்றுமைத் தொகை.....என்பன தம்முள் ஒருபுடை ஒப்புமை உடைய ஆதலின் பாணினியார் தற்புருட சமாசம் என்று குறிப்பிட்டார்” என்று கூறுகின்றார். ்சில தமிழ்ச்சொற்களுக்கு அவற்றோடு ஒத்த வடசொற்களைக் குறிக்கின்றார். முதல் - காரகம் (69)  உரிச்சொல் - தாது ...... என்று குறிக்கின்றார்.  

உரைநடை இயல்பு:  

                                     தெய்வச்சிலையார் உரைநடை உயிரோட்டமுடையதாய் எளிதாய் உள்ளது.  

                                    கீழே இவரது உரையின் ஒரு பகுதியைக் காணவும்.  “ காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர் பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லா உயிர்க்கும் தோன்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன் ; உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத் தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு, இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியும் ஆகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம் பொருள். வினை என்பது ஊழ். பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்த்துவது. அச்சொல்லின் இயன்ற மந்திரம் விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று.(55). 

 .............................. மக்கள் வாழ்க்கையும் நாகரிகமும்..................தொடரும் ...........  ..................... .  

சனி, 25 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-46. உரையாசிரியர்- தெய்வச்சிலையார் :

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-46.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- தெய்வச்சிலையார் : மு.வை.அரவிந்தன். 

புதிய உரை 

                         திருக்குறளில் சில பாக்களுக்குப் புதிய உரை எழுதுகின்றார். அறனோக்கி - (90) வானின்றுலகம் - (103) அழுக்காறு உடையார்க்கு(165) ்ற்றார் அழிபசி(425), ஆகிய குறள்களுக்குச்சிறந்த உரை எழுதியுள்ளார்.  

               எச்சவியலில் 16ஆம் நூற்பா உரையில்உலகம் உவப்பஎன்று தொடங்கும் திருமுருகாற்றுப்படையின் முதல் ஆற அடிகளுக்குச் சிறந்த நயம் எழுதுகின்றார்.  

                        சூத்திரங்களை இடம மாற்றி அமைத்தல 

                            இவர் சொல்லதிகாரத்தில் உள்ள சூத்திர அமைப்புகளை மாற்றியுள்ளார். அவ்வாறு மாற்றியமைக்குத் தக்க காரணமும் கூறுகின்றார்.     

                                  எச்சவியலில் உள்ள மூன்று சூத்திரங்களைக் கொண்டுவந்து, வினையியலின் இறுதியில் வைத்து உரை எழுதுகின்றார். அவற்றை அவ்வாறு அமைக்குமுன்வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றது என்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்று அன்று.” என்று கூறுகின்றார்.. மேலும்இவை மூன்று சூத்திரமும் ஈண்டைத் தொடர்புட்டுக்கிடந்த இதனை உரை எழுதுவோர், பிரிநிலை வினை என்னும் சூத்திரத்துள் சொல்லப்பட்ட பெயரெச்சம், வினையெச்சம் என்பவற்றை ஈண்டு ஓதப்பட்ட பெயரெச்ச வினையெச்சமாகக் கருதி ஆண்டு சேரவைத்தார் என்பாரும் உளர். என்று பிறர் கருத்தையும் தருகின்றார் 

                               எச்சவியலில்இசைநிறைஎன்னும் 15ஆம் சூத்திரத்தை 29ஆம் சூத்திரமாகவும் வேற்றுமை மயங்கியலில்அது வென்வேற்றுமைஎன்னும் 10ஆம் சூத்திரத்தையும்ஆறன் மருங்கின்என்னும் 13ஆம் சூத்திரத்தையும் மாற்றி 15, 16ஆம் சூத்திரங்களாக வைத்துள்ளார். 

 ...........வடமொழிப்புலமை............தொடரும்............