ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-57.- ஓர் அறிவியல் அறிஞர்.
”தொல்காப்பியம் புள்ளி: (Dot)
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.)
சிந்துவெளிக் கணக்கு : சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ள சான்றுகளை நோக்கின் - சிந்துவெளி மக்கள் நடைமுறை கணக்கு வழக்குகளில் தேர்ந்துள்ளவர்களாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. அவர்கள் தயாரித்த செங்கல்லின் கனபரிமாணம் 4: 2 ; 1 என்ற அளவைத் துல்லியமாகக் கொண்டுள்ளது. மேலும் நிலைப்படுத்தப்பட்ட சிற்றளவைகளாக 1/20, 1/10, 1/5. ½ 1,2,5 போன்ற நிறுத்தல் அளவைகளையும் கொண்டிருந்தனர். - விக்கிபீடியா.
சிந்துவெளி வரிவடிவங்களில் எண்கள் குத்துக்கோடுகளைக் கொண்டிருந்தன 1முதல் 9வரை எண்களைக்குறிக்க I, II, III .......என ஒழுங்கமைவு உடைய கோடுகளைக்கொண்டு கணக்கிட்டனர்.
பத்து என்ற எண்ணைக்குறிக்க ஓர் அரைவட்டம் (10)பயன் படுத்தியுள்ளனர். இதே வடிவங்களை எகிப்தியர்களிடம் காணமுடிகிறது என்கிறார் அறிஞர் ஐராவதம் மகாதேவன். இந்த அரைவட்டம் முழுவட்டமாகிச் சுழி என்று பெயர் பெற்றிருக்கலாம். கணக்கியலில் இடம்பெறும் சுழி (ஜீரோ) இந்தியர் அளித்தது என்று வரலாறு கூறுகிறது.
முப்பாற் புள்ளி: ஃ :
-சார்பெழுத்துக்களுள் அடங்கும் ஆய்தம் குற்றியலிகரம், குற்றியலுகரம் போல அரை மாத்திரை பெற்று நிற்கும். அக்கேனம், ஆய்தம், தனிநிலை, புள்ளி, ஒற்று, என இவ்வெழுத்துக்கு ஐந்து பெயர்கள் உள. வடிவம் =
” குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன, என்றார் தொல்காப்பியர்.
அடுப்புக்கூட்டுப்போல மூன்று கூற்றதாகிய புள்ளியும் ஆய்தம் என்று அதன் வடிவம் பற்றி உரையாசிரியர்கள் குறிக்கின்றனர்.ஆய்தம் ஃ இதே வடிவத்தில் கனிதத்தில் ஒரு குறியீடாக விளங்குகிறது.
புள்ளி, முப்பாற்புள்ளி ஆகிய இவ்விரண்டின் தோற்றம் வளர்ச்சி, நிலைபேறு ஆகியவற்றை மேலும் ஆராய்ந்து தமிழரின், குறிப்பாகத் தொல்காப்பியரின் அறிவியல் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.
.................தொடரும்............................................