தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு.
ஆசிவகம் :
கி.மு. 6 இறுதியில் இந்தியச் சிந்தனை மரபில்
வேத, வைதிக எதிர்ப்பு நிலவியது.புத்தர்,
மகாவீரர், பக்குடுகை நண்கணியார், பூரணர், நரிவெரூத்தலையார் முதலியோர் தோற்றிய ஒரு புதிய
கோட்பாடு – ஊழியியல் – ஆசிவகம்
= வாழ்க்கை முறை. கணிநந்தவாசான்,
பூதப் பாண்டியன்நண்பன், - ஆசிவகத்தைச் சார்ந்தவன் என்பர். பூதப்பாண்டியன் இவரை ‘ வெஞ்சின இயக்கன்’ எனக் குறிப்பார். சங்க காலத்
தமிழில் நல்வெள்ளையார், இவரைப் பாலிமொழி ‘பரமச்சுக்க நிலை’ என்கும். இவர் படைத்தலைவர்,
ஆசிவகர் இவருக்காக எடுக்கப்படுவதுதான் குதிரை எடுப்பு (புரவி எடுப்பு) நிகழ்கிறது.
ஐயனாரின் மூன்று நிலைகள் – போர்க்கோலம்,
பூரணம் பொற்கலை (இரு மனைவியருடன்) மணமாகாத ஐயனார் ஆகியனவாகும். பூரணர், மற்கலி, கணிநந்தவாசான்
இம்மூன்று அறிஞர்களும் ஐயனார்களாகப் போற்றப்படுகின்றனர்.
சித்தன்ன வாசல் ஓவியம் ஐயனார் வரலாற்றின்
மூல ஊற்று என்றும் அவ்வோவியங்கள் சமணர்க்கு உரியவையல்ல என்பர்.
ஐயனார் – சாத்தன் – குதிரை வாகனன். ஐயனார் ஆசிவகத்தில் துறவி எனப் போற்றப்டுகின்றார், அறிவு,
வளமை, வீரம் என மூன்றின் கூறுகளாக்க் கொண்டு
வழிபடுவர்.
சாத்தானாகிய ஐயனார் 96 வகையான தருக்க சாத்திரங்களில்
வல்லவர் என்பர்.
ஆசிவகர் உணவு – கஞ்சி
ஐயனார் படையல் – பொங்கல்.
ஐயனார் சிலையைத் துணியால் மூடிவிட்டு, கடா வெட்டு நடைபெறும். இந்நடைமுறை கருப்புகளுக்கு
உரியது (பெரியண்ண சாமி, ஒண்டிக்கருப்பு, பாலடிக் கருப்பு).
.………………………தொடரும்
------------------------------