திங்கள், 24 மார்ச், 2025

3.இன்பநிலைக் கோட்பாடு – எபிகூரஸ்- EPICURAS.கி.மு. 342…..தொடர்ச்சி……….

 

சான்றோர் வாய் (மைமொழி : 179-அறிவியல்

சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 

3.இன்பநிலைக் கோட்பாடுஎபிகூரஸ்- EPICURAS.கி.மு. 342…..தொடர்ச்சி……….

இயற்கையின் விதிகளுக்கேற்ப உலகம் இயங்குகிறது. இஅற்கையின் சட்ட, திட்டங்களை மாற்றவோ…. மீறவோ முடியாது. கடவுள் உண்டு என்று கொண்டாலும் கடவுளுக்கும் உலகியல் வாழ்க்கைக்கும் எள்ளவும் தொடர்பில்லை. மனித வாழ்வில் கடவுள் குறுக்கீடு உண்மையில்லை.

இன்ப நுகர்வே வாழ்வின் குறிக்கோள் அரிய மனித வாழ்வின் முதலும் முடிவுமாக இருப்பது இன்ப நுகர்வே.  உணர்வுகளோடு ஒன்றியூறும் இன்பத்தைத் தவிர வேறு எதனையும் நன்று என்று தீர்மானிக்கவோ, அடைவதற்கோ முயற்சி செய்யவோ முடியவில்லை. – என்றார் எபிகூரசு.

 இயல்பான ஆசையை நிறைவு செய்து மனத்தை சமநிலைப்படுத்தும் இன்ப உணர்வை நாடவேண்டும்.

 

 மனிதனை அச்சுறுத்தி, கோழையாக்கி வைத்திருந்த சமயத்தை வேரொடுபிடிங்கி மனிதனின் காலடிப் பட்டுக் கசக்கி அழியச் செய்வதில் வெற்றி கண்டவர் எபிகூரசுஎன்கிறார் இவர் மாணவர் லுக்ரிடஸ்.

……………………தொடரும்………………..

ஞாயிறு, 23 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 178-அறிவியல் சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 

சான்றோர் வாய் (மைமொழி : 178-அறிவியல்

சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 

1.)     இன்பநிலைக் கோட்பாடுஎபிகூரஸ்- EPICURAS.கி.மு. 342.

வாழ்வின் உறுதிப்பொருள் இன்பத் துய்ப்பே ! இதனை உருவாக்கியவர் எபிகூரசு . இவர் எபிகூரசு சிந்தனைத் தோட்டம் எனும் பள்ளியை நிறுவியவர். மரணத்திற்குத் தன்னை விருந்தாக்கி மகிழ்ந்தவர். 

மரணத்தின் வாயிலில் நிற்கும் நான்  மகிழ்கின்றேன். நோயின் பெரும் பசிக்கு என்னுடைய இரப்பையும், சிறுநீரகங்களும் உணவாகின்றன. உன்னோடு கலந்துரையாடிய அந்த நாட்களை நினைவுகூறும்போது  என் நெஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறது.” என்றார்.

 இவர் தத்துவம் பொருள்முதல் தத்துவம். இப்பேரண்டமும் அதன் பொருள்களும் அணுக்கூட்டத்தால் ஆன பொருளே. அணுக்களின் சிதைவால் உடல் அழியும்போது உயிரும் அழிந்து விடுகின்றது. உயிர் என்ற ஒன்று தனியே உண்டு . அதற்கு இறவாமை என்ற ஒரு பண்புண்டு என்பதெல்லாம் வெறுங் கற்பனையே..!

மனித வாழ்வு இறைவன் எழுதிய தீர்ப்பின்படி நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் செல்கிறது என்பதும் வெற்றுக் கற்பனையே …! மனிதனை அடிமையாக்கும் சமயங்கள் புனிதமற்றவை.

……………………………தொடரும்…………….    

சனி, 22 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 177-அறிவியல் சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 

சான்றோர் வாய் (மைமொழி : 177-அறிவியல்

சிந்தனைகள்: நால் வகைக் கோட்பாடுகள்:

 அரிஸ்டாட்டிலின் காலத்திற்குப் பின் கிரேக்கத்தில் ஆடம்பர வாழ்வு அரும்பியது. தத்துவம் உயர்பீடத்திலிருந்து இறங்கி அன்றாட வாழ்க்கை நிலைக்கு வந்தது. இதனடிப்படையில் நால் வகைக் கோட்பாடுகள் உருவாயின.

1.)     வெறுப்புக் கோட்பாடுCynicism.

2.)     ஐயுறுதல் கோட்பாடு Scepticism.

3.)     இன்பக் கோட்பாடு - .Epicurism.

4.)     நடுநிலைக் கோட்பாடு Stoicism

 

1.)     சமுதாய அமைப்புகளையும் நடைமுறைகளையும் வெறுத்துரைத்த, தத்துவக் கோட்பாடு வெறுப்புக் கோட்பாடு. இதனை உருவாக்கியவர்  -

ஆண்டிஸ்தெனஸ் -… Antisthenes….. இவர் சாக்ரடீசின்  மாணவர்.

 உலகியல் சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் போலி மதிப்புகளையும் வெறுத்து முகம் சுளித்தார். உலகியல் இன்பங்களையும் ஆடம்பரங்களையும் வெறுத்தார்.. ஆடம்பரமாக வாழ்வதைக் காட்டிலும் அறிவு குழம்பிய பைத்தியமாக வாழ்வதையே விரும்புகிறேன் என்றார்.

டையோசீனஸ்- Diogenes:

அறிவின் சிகரம் ; அஞ்சா நெஞ்சன் ; உலகம் கொடியதுஉலகியல் வாழ்விலிருந்து ஒதுங்குவதே வீரம் ; உலகியல் வாழ்வு துன்பம் நிறைந்தது அதிலிருந்து விடுதலை பெற மனிதன் முயல வேண்டும். உலகியல் வாழ்விலும் பொருள்களிலும் காணும் இன்பம் பொய்யானது.தன்னிறைவால் கிட்டும் மனநிறைவே உண்மையான மகிழ்ச்சி. உறவும் பாசமும் மனிதனைத் துன்புறுத்தும். மனிதன் எதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அதிலிருந்து அவனுக்குத் துன்பமில்லை.

 

2.)     ஐயுறுதல் கோட்பாடு …பைரோ Biro –

எதையும் ஏற்றுக்கொள்ளாமல் ஐயக் கண்கொண்டு நோக்கியத் தத்துவம், உருவாக்கியவர் பைரோ.

மனித மனத்தால் சிந்தனையால் உறுதியான, முழுமையான தவறாத அறிவை எக்காலத்தும் பெறமுடியாதென்றார். ஒரு செயல்முறை சிறந்ததெனக் கொள்வதற்கு நியாங்களை நிரூபிக்க இயலாது. வசதிக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம் . ஐயுற்றுக் கேள்விக் கணைகளைத் தொடுத்தால் நிறுவப்பட்ட க் கோட்பாடுகள் யாவும் நிர்மூலமாகிவிடும்.

 கி.மு. நான்கில் நிலவிய தத்துவச் சிந்தனை சாக்ரடீஸ் எழுப்பிய விடையிறுக்க முடியாத வினாக்கள் – மக்களிடம் ஐயத்தை எழுப்பின.

 டைமோன் – தான் புலன்வழி உணர்ந்ததை உறுதியான ஒன்று என்று ஒருவன் வாதிடுவதை மறுக்கின்றார். தேன் எனக்கு இனிக்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால், தேன் இனிமையானது என்ற உறுதிப்பாட்டை மறுக்கிறேன். எந்தக் கருத்திற்கும் முரண்பாடான கருத்து ஒன்று உண்டு என்று நிலைநாட்டுகின்றனர்.

போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடப்பவனைப் புறக்கணித்துவிட்டுத்  தன்னுயிரைக் காத்துக்கொள்பவனே அறிவுடையவன். குற்றுயிராய்க் கிடப்பவனைக் காக்கும் பொருட்டுத் தன்னுயிரை விடுவதற்குத் தயங்கக் கூடாது என்பது எப்படி நீதியாகும்…?

’ஐயுறுதல் மட்டுமே இருந்தால் வளர்ச்சி இருக்காது’ என்பர்.

 

……………………………..தொடரும்…………………

வெள்ளி, 21 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 176-அறிவியல் சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

 

சான்றோர் வாய் (மைமொழி : 176-அறிவியல்

சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

 

 கடவுள் உண்டு என்றார் :

ஒவ்வொரு மாற்றத்திற்கும் கடவுள் காரணமில்லைஇயக்கத்தின் தொடக்கமாகக் கடவுளைக் கருதுகின்றார் -  தான் இயங்காமல் பிறவற்றை இயக்கும் பேராற்றல் உடையதாய்உரு ஒன்று இல்லாதாய் குறைவில்லா நிறைவாய்உலக சக்திகளின் தொகுப்பே கடவுள் என்கிறார் -  கடவுளுக்கு விருப்பு வெறுப்பு இல்லை எனவே சடங்கு எதுவும் செய்யத்தேவையில்லை என்கிறார்.

ஆன்மா ஒரு சக்தி ;

 ஆன்மாவையும் உடலையும் கருத்தளவில் பிரிக்கலாமே தவிர நடைமுறையில் பிரிக்க முடியாது. பொருள்களைப் போல்ஆன்மாஅணுவால் ஆனதில்லை என்பதால் அழியக்கூடியதும் இல்லை எனப் பெறப்படும்.

 மனித வாழ்க்கை :

மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்வின் குறிக்கோள், அஞ்சி ஒடுங்கும் கோழைத்தனம் ஓர் இறுதிநிலை. அஞ்சுதற்கு அஞ்சாமலிருப்பது இன்னொரு இறுதிநிலை. இவை இரண்டிற்கும் இடைப்பட்டநிலையே ஏற்புடைய வாழ்க்கை.

என்பதே அரிசுடாட்டில் கருத்தாம்.

 பெண்கள் :

பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும், இது இயற்கையானது.  முப்பது வயது ஆண் இருபது வயது பெண்ணை மணந்தால் அவர்களுடைய பாலுணர்வு ஒத்தநிலை உடையதாகவும் ஒரே காலத்தில் நிறைவு பெறுவதாகவும் அமையும்.

 கல்வி :

கல்வியை அரசுதான் தரவேண்டும். சிறந்த குடிமகனுக்கு ஆணையிடவும் இடவும் தெரியவேண்டும் ; ஆணைக்குப் பணிந்து நடக்கவும் தெரிய வேண்டும்.

சமுக அமைப்பு :

 சமுதாயத்தோடு இணங்கி நடக்கத் தெரியாதவன் விலங்கானவன் .  மொழியால் சமுதாயமும் ; சமுதாயத்தால் அறிவும் ; அறிவால் ஒழுங்கும் ; ஒழுங்கால் நாகரிகமும் விளைகின்றன.

சமுகப் புரட்சியை வெறுக்கிறார். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்த்தால் சமுதாயத்தில் அமைதி நிலவும் என்கிறார்.

 ஆட்சி :

 திறமைக்கு முதலிடம் தரும் குழுவாட்சி முறையே குற்றங்கள் குறைந்த ஆட்சியமைப்பு. மக்களாட்சி சிறந்தது என்றாலும் எண்ணிக்கை பலம் சிலரின் சிந்தனைகளை அழித்துவிடும். மக்களாட்சித் தத்துவமும் குழுவாட்சித் தத்துவமும் கலந்ததொரு அரசியலமைப்பு சிறந்தது என்று கருதுகின்றார்.

 

முடிவுரை:

அரிசுடாட்டிலின் இறுதிக்காலம் அவலம் நிறைந்ததாகவே இருந்தது. அலெக்சாண்டரின் ஆதரவாளர் என்பதால் மக்கள் இவரை வெறுத்தனர். ஏதென்சை விட்டு வெளியேறி, மனம் நொந்து நஞ்சுண்டு இறந்தார்.

 கிரேக்க நாட்டின் தத்துவப் பூங்காக்கள் சிந்தனை நீரின்றி வறட்சியால் பட்டுப்போயின.

…………………..தொடரும் ………………………………

வியாழன், 20 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 175-அறிவியல் சிந்தனைகள்: அரிஸ்டாட்டில்-3. – Aristotle; கி.மு. 384 – 322.

 

சான்றோர் வாய் (மைமொழி : 175-அறிவியல்

சிந்தனைகள்: அரிஸ்டாட்டில்-3. – Aristotle; கி.மு. 384 – 322.

உயிர்கள் தோற்றம் :

பருமையான சடம் தூய நுண்ணிய வடிவம்பெறும்வரை இடையே பல படிநிலைகளின் வாயிலாகக் கொள்ளும் வளர்ச்சியை ஒரு முறைப்பட்ட வளர்ச்சியாகக் கருதினார். உயிரினங்களுள் மனித இனம், உடல், உணர்வு, அமைப்பு ஆகியவற்றிலும் இயக்கத்திலும் முதிர்ச்சி பெற்றவடிவம்  என்றார்.

 

குரங்குகள் , மனித இனத்துக்கும் இதர விலங்குகளுக்கும் இடைப்பட்டவை என்ற அரிசுடாட்டிலின் கருத்து டார்வினால் மெய்ப்பிக்கப்பட்டது .

 

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் படிப்படியாக உயர்ந்து செல்லும், படிவரிசைக்கு ஒப்பிட்ட இவர் பறவைகளும் ஊர்வனவும் உடலமைப்பில் ஒத்திருக்கின்றன என்றார். நான்கு கால் விலங்குகளையும் மனித இனத்தையும் இணைக்கும் பாலமாகவும் குரங்கினம் அமைகிறது என்பதோடு உணர்வு, வாழ்க்கைமுறை, இனவிருத்தி ஆகிய பண்புகளில் ஒன்றைவிட மற்றொன்று சற்றே உயர்ந்த சீரான படிமுறையிலான உறவு காணப்படுகிறது என்றார்.

 

 உயிரற்றவையிலிருந்து உயிருள்ளவை தோன்றுகின்றன , ஆனால் எந்த இடத்தில்  இந்த மாற்றம் நிகழ்கிறது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாதபடி மாற்றங்கள் மிக நுட்பமாக நடைபெறுகின்றன. என்றாலும் உயிரற்றவைக்கு அடுத்தப்படியாகத் தாவர இன்ங்களைக் கூறலாம் என்பது அவரின் அறிவியல் பார்வைக்குச் சான்று.

 

உயிரின் மூலத்தையும் விலங்கினங்களின் வரலாற்றையும் ஆராய்ந்த அரிசுடாட்டில் மனிதனுக்கு அற்புத சக்தி ஒன்று உண்டு. அதுவே பகுத்தறிவு. அந்தப் பகுத்தறிவு ஒன்றினாலேயே உயிரினங்களின் வரிசையில் மனிதன் மேலே இருக்கிறான். உயிரினப்பாகுபாட்டில் இருந்த இடத்திலே இருத்தல் , இடம்விட்டு இடம் பெயர்தல், பகுத்தறிவு ஆகிய மூன்று நிலைகளில் தாவரங்கள், விலங்குகள், மனிதன் ஆகிய படிநிலைகளை வகுத்தளிதார்.

 

(After Aristotle for about 2000 years nothing was added to the knoeledge of Evolution.)

 

 

உலக வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிரினங்களைப் பற்றிய ஆய்வு நடைபெறாமல் இருந்திருக்க முடியாது, உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஆய்வு நிகழ்ந்திருக்கக்கூடும் .

(சான்றாக ………………..!

உயிரினப்பாகுபாடு குறித்த ஆய்வு வரலாற்றில் தமிழர்களின் குறிப்பாகத் தொல்காப்பியர் தொடங்கிப் பல சான்றோர் பெருமக்கள் பெற்ற இடங்களைக் காணலாம்.

 

 உலோகாயதச் சித்தர்

விலங்கிலிருந்து  வளர்ந்தவர் நாமேபின்

     விலங்காண்டி ஆனதும் மாந்தர்கள் தாமே

அலகில் இயற்கையில் கற்றனர் பாடம்மன

     ஆறாம் அறிவாலே உற்றனர் மாடம்

மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கைதன்

     மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை

ஏறிக்கொண்டிருந்திடும்  காலப்படியில்மனிதன்

     எத்தனைப் புதுமைகள் செய்தான் முடிவில்

தகுதியின் மிகுதியே வெல்லும் வெல்லும்இந்தத்

     தங்கவேல் லோகாயதரின் சொல்லும் வெல்லும்.”)

என்று தொன்மைக் காலந்தொட்டே உயிர்களின் தோற்றம் குறித்து  மிகத் தெளிவாகவே தமிழர்கள் இன்றை அறிவியல் ஒப்புக்கொள்ளும் அளவிற்குச் சிந்தித்துள்ளனர்.

……………அரிசுடாட்டில் -4………….தொடரும்…………

புதன், 19 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 174-அறிவியல் சிந்தனைகள்: அரிஸ்டாட்டில்-2. – Aristotle; கி.மு. 384 – 322

 

சான்றோர் வாய் (மைமொழி : 174-அறிவியல்

சிந்தனைகள்: அரிஸ்டாட்டில்-2. – Aristotle; கி.மு. 384 – 322.


 

இவர் எழுதிய நூல்கள்:

அறிவு, அறிவியல், அழகியல், தத்துவம். எனும் நால்வகைப் பகுப்புகளைக் கொண்டது. அறிவுத்துறைகள் அனைத்திலும் ஆய்வுசெய்து நூல்கள் எழுதிய தனியொரு சிந்தனையாளர்.

 

 அரிசுடாட்டிலின்அளவையியல்சிறப்புடையது. அறிவின் இயல்பு, அறிவைப் பெறுவதற்கான வழிகள்அறிவின் ஏற்புடைமை என்பன பற்றிய தெளிவு இல்லாதவர்களிடம் முறையான சிந்தனை ஓட்டம் இருக்காது என்பது இவரது துணிபு.

 

ஒவ்வொரு பொருளுக்கும் நான்கு காரணங்கள் இருக்கவேண்டும் என்று கருதுகிறார். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பொருளிலிருந்து குறிப்பிட்ட வடிவத்தில் குறிப்பிட்ட செயலால், குறிப்பிட்ட நோக்கத்திற்காக உண்டாகிறது. பொருள் வடிவம், செயல் நோக்கம், ஆகிய நான்கு காரணங்களும் ஒன்று சேர்வதால் ஏற்படுவதே உற்பத்தி.

 

 முக்கூற்றுச் சிந்தனை எனும் வழி அனுமானம் முழுக்க முழுக்க அரிசுடாட்டிலின் படைப்பு. “ மனிதர்கள் அனைவரும் பகுத்தறியும் விலங்குகள் ; சாக்ரட்டீசு ஒரு மனிதன் எனவே சாக்ரட்டீசு ஒரு பகுத்தறியும் விலங்குஎன்பதே முக்கூற்றுச் சிந்தனை. இது விளக்கத்தால் உண்மையை அறிவது, கண்டறிந்த உண்மைகளைப் பிறருக்கு நிரூபிக்க உதவும். புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க இச் சிந்தனைமுறை பயன்படாது..

 

சாக்ரட்டீசுக்கு முன்பு தத்துவமும்  அரிசுடாட்டிலுக்கு  முன்பு அறிவியலும் இருந்தன என்பது உண்மையே, ஆனால் இவர்களுடைய காலத்தில்தான் அவை வியக்கத்தக்க அளவில் வளர்ச்சியடைந்தன என்பதும் மறுக்க முடியாத உண்மையே.” என்கிறார் ரெனான்.

 

 அரிசுடாட்டில் இயற்கையின் போக்கினையும் மாறுபாடுகளையும் உற்றுநோக்கி ஆராய்ந்தார். இயற்கைச் சுழல் தோற்றம், வளர்ச்சி, மாற்றம், அழிவு என்ற நிலையில் இயங்குகிறது. உயிரின்ங்களுள் மனித இனம் உடல், உணர்வு ஆகியவற்றின் அமைப்பாலும் இயக்கத்தாலும் முதிர்ச்சி பெற்றிருக்கிறது. அரிசுடாட்டில் தரும் அறிவியல் கருத்துகள் பலவும் இன்றைய அறிவியலோடு ஒத்துப்போகவில்லை.

……………..அரிசுடாட்டில் ………..தொடரும்……….

செவ்வாய், 18 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 173-அறிவியல் சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

 

சான்றோர் வாய் (மைமொழி : 173-அறிவியல்

சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

The Father of All Sciences.

அறிவியல்துறை அனைத்திலும் அரிசுடாட்டிலின் சிந்தனை படர்ந்திருந்தது. இயற்கையை அறிவியல் கண்கொண்டு கூர்ந்து நோக்கினார்.

வாழ்க்கை வரலாறு :

பிளேட்டோவின் மாணவர் அறிவியல்கள் அனைத்திற்கும் தந்தைஅளவையியல் முறைகளை அறிமுகப்படுத்தியவர்கிரேக்கச் சிந்தனைகளை அறிவியல் நோக்கில் திருப்பியவர்பிளேட்டோவின் கருத்துக்களுக்கு எதிரானவர்அலெக்சாண்டருக்கு ஆசிரியர்இவர் தந்த அரசியல். கல்வியால் உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் ஆற்றல் பெற்றார் அலெக்சாண்டர்.

 உயிர் கொடுத்தவர் தந்தை  ; வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தந்தவர் அரிசுடாட்டில் ; அலெக்சாண்டர் துணையோடு உலகெங்கும் உள்ள அறிவு நூல்கள், செடிகொடிகள், விலங்கினங்கள் இவை அனைத்தையும் சேகரித்து அரிய கல்விக்கழகம் ஒன்றை நிறுவினார்.

அலெக்சாண்ட்ரியாவில் நிறுவப்பட்ட அந்தக் கல்விக்கழகத்திற்கு  ‘ லைசியம் ‘ – (……..)  என்று பெயர். இங்கு அறிவியல் வளர்க்கப்பட்டது ; அறவியல் கோட்பாடும் உருவாக்கப்பட்டது.

 உலகை வென்று திரும்பிய மாவீரன் பாபிலோன் நகரில் மாண்டு போனான். அலெக்சாண்டர் விரும்பியதை நிறைவேற்ற படைத்தளபதி  ’சிலியோமீனிசு’ நைல் நதிக்கரையில் “அலெக்சாண்ட்ரியா என்ற அரிய நகரை நிறுவினான். அங்கு ஏற்படுத்திய பல்கலைக் கழகத்தில் உலகில் உள்ள விஞ்ஞானிகளையு,ம் விஞ்ஞான நூல்களையும் ஒன்று சேர்த்தான். கிரேக்க விஞ்ஞானிகள் அனைவரும் அலெக்சாண்ட்ரியா வந்து சேர்ந்து தங்கள் விஞ்ஞானப் பணியைத்துவக்கினர். அப்பல்கலைக் கழகத்தில்  ஏறத்தாழ ஐந்து இலட்சம் நூல்கள் இருந்தன.

கொடுமைகள் அரங்கேறின:

 ”கி.பி. 800இல் முசுலீம்களின் ஆளுகைக்குப் பண்டைய உரோமப் பேரரசின் பகுதிகள் அனைத்தும் வந்துவிட்டன. அரேபியாவும் பாரசீகமும் சிசிலியும் வட ஆப்பிரிக்காவும் மேற்கு இந்தியாவும் முசுலீம்களின் கரங்களில் சிக்கின. முசுலீம் தலைவர்களில் ஒருவரான அமீர், அலெக்சாண்ட்ரியாவில் கிரேக்க மக்களால் சேகரிக்கப்பட்டு வைத்திருந்த அறிவியல் நூல்கள் அனைத்தையும் நெருப்பிலிடுமாறு உத்தரவிட்டார், நூல் நிலைய நிருவாகிகள் எவ்வளவு எடுத்துரைத்தும் அமீர் செவியில் எதுவும் ஏறவில்லை ! “மக்களுக்குத் தேவையானவை அனைத்தும் திருக்குரானில் கூறப்பட்டுவிட்டன. மேலும் அதில் கூறாதது எதுவாயினும் இந்நூல்களில் இருப்புன், அது மதத்திற்கு விரோதமாகும் ; எனவே உடனே நெருப்பிடுங்கள்” என்றார்.

அலெக்சாண்ட்ரியா நூல் நிலையத்திலிருந்த அரும்பெரும்  அறிவியல் செல்வங்களை ஆறுமாத காலம் அமீரின் படைகள் நாலாயிரம் வெந்நீர்த் தொட்டிகளில் தினசரி இட்டு  எரித்துக் குளித்தனர். உள்ளத்தில் அழுக்கை நிரப்பிய அவர்கள் உடலில் அழுக்குப்போக அவ்வெந்நீரில் குளித்திருப்பர். “ – மருத்துவர் எச். செல்வராசு, மனித வரலாற்றில் மூன்று இலட்சம் ஆண்டுகள், பக்.70-71.

அரிசுடாட்டில் தொடாத துறைகளோ, எழுதாத நூல்களோ இல்லை எனலாம்.

…………………அரிசுடாட்டில்………………தொடரும்…..