திங்கள், 22 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 33. தொல் தமிழர் வாழ்வியல்.

 


 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 33.

தொல் தமிழர் வாழ்வியல்.

 

இலெமூரிய மக்கள் பல கலைகளில் தேர்ச்சியுற்றிருந்தனர். உடல் நோகாமல் உயிரைவிடும் ஆற்றல், இது தற்கொலையன்று; வடக்கிருத்தல் போன்றது. இறந்தவர் உடலை கெடாது பல்லாண்டு பாதுகாத்தக்கும் முறைகளைக் கற்றுக்  கொண்டிருந்தனர்.

தற்காப்புக்கலையில் உலகை மயக்கிய புரூஸ்லீ 32 வயதில் மரணம் அடைந்தார் அவர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று இன்றுவரை மர்மாகவே நீடிக்கிறது. புரூஸ்லீ தன்னுடைய குறிப்பேட்டில்  தற்காப்புக்கலை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் மரபை மாற்றித் தான் பல புதுமைகளைப் புகுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார் .

 

சனி, 20 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 32. தொல் தமிழர் வாழ்வியல்.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 32.

தொல் தமிழர் வாழ்வியல்.

 

திருமணம்

பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் திருமணத்தின் போது மணமகளின் முகத்தைத் திரைபோட்டு மறைக்கும் வழக்கம் இருந்தது. அந்நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. அதுபோல் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மீது அரிசி தூவும் வழக்கமும் இன்றுவரை தொடர்கிறது. வளமாக வாழவேண்டும் என்பதற்கான அடையாளம் இது.

 

 

வியாழன், 18 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 31. பதின்ம எண்முறை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 31.

பதின்ம எண்முறை

இன்று புழக்கத்திலிருக்கும் பதின்ம எண்முறை (  Decimal Number 

System ) இந்தியாவில்தான் தோன்றியது. பின்னர் அது அரபு வழியாக 

ஐரோப்பாவுக்குப் பரவியது. கி.பி. 7 இல் சிரியன் பாதிரியார் செவரஸ் 

 செபோக் ( Syrian bishep Serverus Sebokht   ) இந்தியர்கள் ஒன்பது 

எண்களுக்குக் குறியீடுகளையும் கொண்டிருந்தனர் என்று 

குறிப்பிடுகிறார். எனினும் பதின்ம எண் மதிப்பு முறை யாரால் 

கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிய முடியவில்லை என்கிறார்கள்.

( பதின்ம எண் மதிப்பு முறை தொல்காப்பியர் உலகுக்கு வழங்கிய 

கொடை என்பதை “ புள்ளி” என்னும்  ஆய்வுக்கட்டுரையை  என் 

‘உயிருக்குநேர்’ நூலில் விளக்கியுள்ளேன்.)

 

செவ்வாய், 16 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 30. உழவன் கணக்கு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 30.

உழவன் கணக்கு

360- நெல் ---1 செவிடு

4-செவிடு – 1 –ஆழாக்கு

2—ஆழாக்கு ----1-உழக்கு

2. உழக்கு ----1.---உரி

2.-உரி-----1. நாழி

4- உழக்கு – 1-நாழி

8-நாழி--- 1. மரக்கால்

4.படி ---1. மரக்கால்

12- மரக்கால் ---1,கலம்

24- மரக்கால் ---1. மூட்டை

2 ½ - மூட்டை --- 60.- மரக்கால்- 1.- உறை

18. மரக்கால் ----1.- கோட்டை

6. மரக்கால் ----1- பறை

2. பறை -  1. கலம்

 

 

திங்கள், 15 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 29. இன்றைய எழுத்து வடிவம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 29.

இன்றைய எழுத்து வடிவம்

“ சோழர்கள் காலத்தில் இன்றைய

தமிழ் எழுத்தின் வடிவம் செப்பமுறத் தொடங்கியது. தொல்காப்பியர் காலத்துக்கும் முந்தைய கி.மு. 1800 அளவில் தோன்றிய 12, உயிரும் 18, மெய்யும் மூன்று சார்பெழுத்துக்களும் கொண்ட எழுத்தமைப்பு கடந்த 3800 ஆண்டுகளாகத் திரிபின்றிக் காக்கப்பட்டிருப்பது உயர்தனிச் செம்மொழியாய்த் தமிழ் வளர்ந்து வந்ததைக் காட்டுகிறது.” பேரா. இரா. மதிவாணன்.

 

ஞாயிறு, 14 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 28. மாத்திரை

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 28.

மாத்திரை

“தமிழில் எழுத்துவடிவுக்கும் எண் வடிவுக்கும் இசைவடிவுக்கும் நெருங்கிய தொடர்பு தொன்றுதொட்டு உண்டு.

‘ககரங் கொட்டெ எகரம் அசையே

ஏகாரம் தூக்கே  அளவே ஆய்தம்’

என்பது அடியார்க்குநல்லார் மேற்கோள். இவை மாத்திரைப் பெயர்கள், கொட்டு அரை மாத்திரை அதற்கு வடிவு – க ; அசை ஒரு மத்திரை , அதற்கு வடிவு – எ; தூக்கு இரண்டு மாத்திரை அதற்கு வடிவு – உ, அளவு மூன்று மாத்திரை அதற்கு வடிவு – ஃ எனகொள்க’ என்பது நல்லாரின் விளக்கம். – அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

சனி, 13 மே, 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 27. சிந்துவெளி

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 27.

சிந்துவெளி

“ தெற்காசிய பகுதியில் தோன்றிய மிகப்பெரிய நகரிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகமாகும். சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 2600 – 1900 இக்காலப்பகுதியில் செழித்து சிறந்து விளங்கியது  அரப்பன் நாகரிகம் .

1) சிந்துவெளி எழுத்துக்களை எழுபது வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர். எனினும் அவ்வெழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. ஏனெனில்  சிந்துவெளி எழுத்துக்கள் – குறியீடுகள்.

அவை: மிகச்சிறியவை, சுருங்கக்கூறும் தன்மையுடையவை; ஐந்துமுதல் 26 வரையிலான குறியீடுகள்.

2.) இவை எம்மொழிக்குரியவை என்பது தெரியவில்லை.

3) இரு மொழி தன்மையற்றவை. இதன் மொழி வேறு எந்த மொழியுடனும் தொடர்பற்றதாக இருக்கிறது ; பொருள், தனித்த தன்மை உடையது.

 எனினும் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட மொழிக்குக் குறிப்பாகத் தமிழுக்கு  நெருக்குமானவையாக (இலக்கண அடிப்படையில்) இருக்கின்றன. எண்கள் செங்குத்துக் கோடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கம் தமிழர்களீடம் இருந்ததை சங்க இலக்கியம் (அகநானூறு ) வழி அறியலாம்.”