செவ்வாய், 1 ஜூலை, 2025

தமிழமுது – 62 . திருக்குறள்- கடவுள் வாழ்த்து

 

தமிழமுது  62 . திருக்குறள்- கடவுள் வாழ்த்து ;

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.” தொல்.புறத்.85.

மாற்றாரை வென்று உயர்த்திய கொடியின் சிறப்பினைப் பாடுவதுகொடிநிலை.

மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக்க் குறிப்பதுகந்தழி.

வள்ளல் தன்மையைக்குறிப்பதுவள்ளி.

பாட்டுடைத் தலைவனைப் பாடும்போது கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் என்பர்.

கொடிநிலை மின்னலுக்கு நிலையாகிய மேகம்வான் சிறப்பு.

கந்தழிகந்து அழி ; பற்றுக்கோட்டை அழித்தல்நீத்தார் பெருமை.

வள்ளிவள்ளன்மை ; அறத்தன்மைஅறன் வலியுறுத்தல்.

 என்றும் பொருள்கூறிப் பொருத்திக்காட்டுவர்.

திருக்குறள் பதிப்புகள் ;

முதல் பதிப்பு – 1811 ஆம் ஆண்டு அம்பலவாணக் கவிராயர், பரிமேலழகர் உரைப்பதிப்பு. 1840 ஆம் ஆண்டு, இராமானுசக் கவிராயர் 24 அதிகாரங்கள் மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்புடன்.

ஒப்பிட்டு உண்மை அறிதல்  முதல் பதிப்பு 1812  என்றும் கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக