தமிழமுது – 61.
அசுணம் - விலங்கா / பறவையா..?:
அசுணம்:
”விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவருந் தீங்குரல்
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்.” நற்றிணை; 244.
மழை பெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர் காலத்துக் கூதாளி
மலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின் விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலும் என்று
நறுமணம் கமழும் மலை முழையிலிருக்கும் அசுணமாகிய விலங்கு செவி கொடுத்துக் கேட்கும்.
“ மறையின் தன்யாழ் கேட்ட மானை
அருளாது
அறைகொன்று மற்றதன் ஆருயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு …” கலித்தொகை; 143,
வஞ்சனையாலே தான் மீட்டிய
யாழ் இசையைக் கேட்ட அசுணமாவை, இவ்வின்பம் உற்றதென்று அருள் செய்யாமல் முன்பு செய்த வஞ்சனையைக் கெடுத்துப்
பின்னர் அதன் அரிய உயிர் போகும்படி பறையைத் தட்டினாற்போல்.
“பறைபட வாழா அசுணமா…”
நான்மணிக்கடிகை; 4.
கேகயப் பறவைகள், பறையின் ஓசை தம் செவியில்பட்டால்
உயிர் வாழ மாட்டா.
அசுணம் பறவையா விலங்கா..? என்பதில் குழப்பம் நிலவினும் மலையின் பிளப்பாகிய
குகையில் வாழ்வதாக, நற்றிணை
244, அகநானூறு , 88 - இவ்விரு பாடல்கள் வழியும்
பிற சான்றுகளாலும் அசுணம் விலங்கினமே என்பதில் ஐயமில்லை. ஆயினும்
இவ்விலங்கு பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கின்றன. அசுணம் அழிந்து போன விலங்கினங்களுள் ஒன்றாக இருக்கலாம்.
………………………தொடரும்………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக