வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :981


திருக்குறள் -சிறப்புரை :981
99.சான்றாண்மை
கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. --- ௯௮௧
சான்றாண்மை என்னும் நல்லொழுக்கம் நிறைந்தார், தாம்  ஆற்ற வேண்டிய கடமைகள் இவை என அறிந்து மன்னுயிர்க்கு நன்மை தருவனவற்றைச் செய்வதைத் தம் கடமையாகவே மேற்கொள்வர்.
” பிறர் நோயும் தம்நோய் போல் போற்றி அறன் அறிதல்
 சான்றவர்க்கு எல்லாம் கடன்….” –கலித்தொகை.
பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் போற்றி ஒழுகுதல் சான்றோர்க்கெல்லாம் கடமை ஆகும்.

1 கருத்து: