வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -54

மெய்ப்பொருள் காண்பது அறிவு -54
மதம்

 “ மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துகிற இயற்கை, சமுக சக்திகளைப் பற்ற முனையும் உணர்ச்சிப் படிவம்தான் மதம்.

 இனக்குழுக்களிலிருந்து நாடுகளும் அரசுகளும் தோன்றின; சட்டமும் அரசியலும் தோன்றின. இவற்றோடு மனிதர் மனத்தில் மனிதரைப்பற்றிய விகாரமான பிரதிபலிப்பு தோன்றியது. இதுதான் சமயம் என்பது. மாறிய சமுதாய அமைப்பில் மனித மனத்தின் இப்படைப்புகள் மனித சமுதாயத்தைஆட்டிப்படைப்பதாகத் தோன்றின. உழைப்பைவிட உழைப்பைத் திட்டமிடும் மனம் உயர்ந்ததாயிற்று. ” ---எங்கல்ஸ்.

“ அறிவியல் வளர வளர மதம் சிதைவுறுகிறது. தன் சூழலின் மீதும் தன் மீதும் தன் அதிகாரத்தை நிறுவ அறிவு உதவும் பொழுது அவன் விசுவாசத்தின் தேவையிலிருந்து விடுபடுகிறான்.” –ஜார்ஜ் தாம்சன்.

“ இந்த விசுவாச விடுவிப்பு என்பது சுலபமாக நடந்து விடுவதில்லை, ஏனெனில் இந்த விசுவாசங்கள் பற்றிய நடைமுறைகள் பண்பாட்டின் அங்கங்களாகிவிடுகின்றன.”
– கா. சிவத்தம்பி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக