புதன், 30 செப்டம்பர், 2020

 

 தன்னேரிலாத தமிழ் - 156

452

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.


நீர் எவ்வகையான நிலத்தில் வந்து சேர்கிறதோ அந்நிலத்தின் தன்மைக்கேற்ப நீர் திரிந்து வேறுபடும். அதுபோல் மக்களும் தாம் சேர்ந்த இனத்தின் இயல்புக்கேற்பவே அறிவைப் பெறுவர்.


ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்

 மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க…..” – நன்னெறி, 22.


மக்களுள் உயர்வையும் தாழ்வையும் அவர் கொண்டிருக்கும் அறிவினால் மதிப்பிட வேண்டுமே அல்லாமல் பிறப்பால் / சாதியால் றி முற்படுதல் தவறாகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக