செவ்வாய், 29 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 155

 தன்னேரிலாத தமிழ் - 155

426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு.


உலகத்துச் சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எவ்வாறு நடந்து கொள்கிறதோ அவ்வாறே நாமும் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும்உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டேஎன்பார் தொல்காப்பியர்.


தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரைத்

தூயவர் என்று எண்ணியே துன்னற்க…”நீதிவெண்பா, 72.


 தீயவர்கள் மிகச்சிறந்த கல்வியறிவு  பெற்றவர்களாக  இருந்தாலும் அவர்களைப் பெரியோராகக் கருதி நெருங்காது விலகி இருக்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக