ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 151

 

தன்னேரிலாத தமிழ் - 151

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். --குறள். 457.

 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்- என்ற  ஓர் உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை  உலகிற்கு வழங்குகிறார் திருவள்ளுவர். மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு(1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் .

மேற்சுட்டியுள்ள குறட்பாவை, அறிவியல் உலகம் திருவள்ளுவரின் அரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனநலம் என்பது மனத்துக்கண் மாசின்றி இருத்தலே. அஃதாவது..

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. --குறள். 34.

ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக