திங்கள், 6 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள்

வறுமையும் புலமையும்
பசி தினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண
              குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது, புறம்.159: 21-25
உரை:உயர்ந்த கொம்பை உடைய கொல் யானையைப் பெற்றாலும் முகம் மாறித் தரும் பரிசினை ஏற்க மாட்டேன். என் தாய், மனைவி ஆகிய இருவருடைய நெஞ்சமும் விருப்பமுறும்படி, பசி தின்பதால் வருத்தமுற்ற எனது சுற்றமும் மகிழும்படி மலர்ந்த முகத்துடன் நீ, யான் இன்புற விரைவில் பரிசில் தந்து விடுவையாயின், சிறிதாகிய குன்றி என்னும் அளவையுடைய பொருளாயினும் அதனை ஏற்றுக்கொள்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக