சான்றோர் வாய் (மை) மொழி :
193–அறிவியல் சிந்தனைகள்: தமிழர் அறிவியல் சிந்தனை-
What is Science ….?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.
எப்பொருள் எவ்வகைமைத்தாயினும்
;எத்தன்மைத்தாயினும் அஃதாவது உயிருள்ளவையாயினும் உயிரற்றவையாயினும் அப்பொருளின்
இருப்பையும் இயல்பையும் இயக்கத்தையும்
கண்டறிவதே அறிவு என்கிறார். இஃது அறிவியலின்
அரிச்சுவடி என்க.
“
Science – a branch of knowledge requiring systematic study and method –
especially one of those dealing with substances ……..” – animal and vegetable
life and natural laws……..”
பொருள் என்ற
சொல்லுக்குத் தமிழ் அகரமுதலி – 23 பொருள் விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளது.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
.
”
Whatever be the apparent diversity of things it is wisdom
To
analyses and perceive the basic truth of
the matter.”
The
enlightened man who has true understanding, will be able to uncover the
differing exteriors and lay bare the one central and immanent substance of all
things of this world. Emerson’s concept of the ‘over soul’ based on the
Upanishadic belief in cosmic unity conforms to Valluvar’s philosophy. And T.S.
Eliot’s line, “ All things affirm thee in living”. Also echoes the same idea.
Valluvar
does not believe in the mere acceptance of things only on the basis of
tradition or sanctity. He wants the core of ultimate truth to be arrived at by
going right behind appearances with vigorous use of reason.” ..(Tr.)
Dr.S.M.Diaz.
அறிவியலின்
அடிப்படை – இயற்கையின் இருப்பையும் இயக்கத்தையும் அறிவதே.
தமிழரின் அறிவியல் அறிவு இயற்கையை (இருப்பை)அறிதல் இயற்கையோடு இயைந்து(இயக்கத்தை) வாழ்தல். இவ்வகையில் மனித இனத்தின் நேரிய வாழ்வை நெறிப்படுத்தினர்.
இஃது தமிழரின் அகவாழ்க்கையை அறிவியல் படுத்தியது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது புறவாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றன. வானூர்தியும் கணினியும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; உண்மையும்
ஒழுக்கமும் இல்லாமல் மனிதனாக வாழ முடியாது. அறிவியலற்ற அகவாழ்க்கை
அமைதியற்ற சமுதாயத்தை உருவாக்கும். உலகின் இன்றைய நிலையை உற்றுநோக்குங்கள்-
மனநோயாளிகள் கையில் மனிதம் அழிக்கும் நவீன ஆயுதங்கள். “”
Arts without science - useless ; Science
without arts -- dangerous .”” ---
தொல்காப்பியரும், திருவள்ளுவரும் சங்க இலக்கியப் புலவர்களும் தமிழை அறிவியல் மொழியாக ஆக்கிக் கொடுத்துள்ளனர். இத்தொடரில்
மேற்குறித்துள்ள செய்திகள் தமிழரின் அறிவியல் சிந்தனைகளைத் தெற்றென விளக்கும் இத்தொடர்
இன்றுடன் நிறைவடைகிறது. மீண்டும் ஒருதொடரில்
சந்திப்போம்.
”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.
கற்பிக்கும் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து, அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு, வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.
Dr. R.KUMARAN- +91 94433
40426.
Account No: 0914101167707
IFSC CODE : CNRB0001854
MICR CODE : 613015003
TEL No: 94890 45822.
CANARA BANK, 46 E, ARULANANDA NAGAR,
NANJIKOTTAI ROAD, THANJAVUUR – 613007
நன்றி…வணக்கம்.