சான்றோர் வாய் (மை) மொழி : 141. அறிவியல்
சிந்தனைகள் - சித்தர் மரபு.
“ஊன் என்று உடலை நம்பி இருந்த பேர்க்கே
ஒரு நான்கு வேதம் என்றும் நூலால் என்றும் ;
நான் என்றும் நீ என்றும் சாதி என்றும் நாட்டினார்
;
உலகத்தார் பிழைக்கத்தானே ;
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள் ஆகாயம் நின்றநிலை அறியலாமே
“ என்று சாடுகின்றார் அகத்தியர்.
பேரறிஞர் இங்கர்சால் கூறியதும் பெரியார் ஈ.வே. ராமசாமி கூறியதும் சித்தர்கள் கூறிச்
சென்ற கருத்துகள்தாம் என்பதை நாம் இப்பொழுது அறிந்துகொள்ள இயலும்.
“பூட்டைத் திறப்பதும் கையாலே மனப்
பூட்டைத் திறப்பதும் மெய்யாலே
வீட்டைத் திறக்க முடியாமல் விட்ட
‘விதியிது’ என்கிறார் ஞானப் பெண்ணே
தாடி வளர்த்துச் சடை வளர்த்து நல்ல சந்யாசி
என்று ஒரு வேடம் இட்டே
ஓடித்திரிந்த விளையாட்டை இங்கே ஒப்புவது யாரடி ஞானப்
பெண்ணே.” - - வாலைச் சித்தர்.
இவ்வாறு மருத்துவத்துடன் அறிவையும் போதித்த ஞான ஆசிரியர்களே சித்தர்கள்.
“நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொண என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ..”
என்பது உயர்ந்த ஞானப்பெருவெளியில் நின்று நடமிடும்
சிவவாக்கியரின் பாடல்.
உடலும் உயிரும் பூரணமும் ஒன்று என்பது அகத்திய ஞானம். உள்ளத்தே இருக்கும் இறைவனை அடையமுடியாமல் வெறும்
வழிபாட்டினால் பயனில்லை என்பது சித்தர்கள் அனைவரும் கூறும் அறிவுரையாகும்.
“ சாத்திரம் இல்லையடி –அகப்பேய்
சலனம் கடந்ததடி’
சாதி பேதம் இல்லை –அகப்பேய் தானாக நின்றவர்க்கு’
-அகப்பேய்ச் சித்தர்.
“உடம்பினைப் பெற்ற பயன் ஆவது எல்லாம்
உடம்பில் உத்தமனைக் காண்’ –ஒளவையார் ஞானக்குறள்.”
சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் ; சாதி சமயப் பூசல்களையும் ; அர்த்தமில்லாத சடங்கு சம்பிரதாயங்களையும் கடுமையாகச் சாடுகின்றனர்.
பற்றுகளைத் துறந்தால் அனைத்தும் கைகூடும் என்பது
சித்தர்கள் கருத்தாகும்.
அறுவை சிகிச்சையைப்பற்றியும்
அகத்திஅய்ர் ‘சத்திராயுதசிதி’ என்ற நூல் கூறுகிரது.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் ..”
எனக் குலசேகரர் கூறியபடி சித்த மருத்துவர்கள் மக்கள்
மத்தியில் பெரும் பேற்றினைப் பெற்றிருந்தனர். காலப் போக்கில் தமிழ் மண் அடிமையுற நேர்ந்த
போதும், தமிழ் விரோதிகள் தமிழ் மண்ணை ஆண்டபோதும், சித்த மருத்துவத்தில் சந்தர்ப்பவாதிகள்
நுழைந்து விட்டனர். சித்த மருத்துவம் எரிதணலில் வீழ்ந்த புழுபோல் துடித்தது.
இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
சித்தர்கள் காட்டிய வழியில் ,மக்கள்
இயற்கையின் பேராற்றலை உணர்ந்து மூலிகைகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர். அறிவியல் போர்வை கொண்டு மக்களைச் சீரழித்த பன்னாட்டுவணிகர்கள்
சத்துநிறைந்த கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை
இன்னபிற உணவுகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டனர்.
அறிவியல் தன் தோல்விகளை ஒப்புக்கொண்டு, இன்று சித்தர் மருத்துவ குறிப்புகளைக் கையாளத்
தொடங்கி விட்டது.
தமிழனின் அறிவாற்றலை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.