செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தமிழமுது -15 - சங்க இலக்கியச் சுவை. மகுளி – இழுகுபறை ஓசை. -2-

 

தமிழமுது -15   - சங்க இலக்கியச் சுவை.

மகுளிஇழுகுபறை ஓசை. -2-

அறிஞர் பொ.வே சோமசுந்தரனார் –உரை…..

”கடிப்பினால் உராய்தலால் உண்டாகும் மகுளியின் ஓசை ஈண்டுக் குடிஞையின் ஓசைக்கு உவமையென்க.

கேட்போர் தம்மியல்பிற்கேற்பப் பொருள் தெரியும்படி இசைக்கும் என்க. அஃதாவது ஆறலைக்களவர் கரந்துறையும் அந்நெறியில் பொருளொடும் போகும் வழிப்போக்கர்க்கு, “குத்திப்புதை.,” “சுட்டுக்குவி,” என்னும் பொருள்பட இசைத்தலும் வினைவயிற் செல்வோர்க்குத் தீ நிமித்தமாவதல் நன்னிமித்தமாகவாதல் அவர் மேற்கொண்ட வினை முற்றுமென்றாதல் முற்றாதென்றாதல் எதிர்காலப் பொருள் தெரிய இசைத்தலும் பிறவுமாம். ஆறலைக்கள்வர்க்கஞ்சிப் போவார்தம்மச்சத்தை இக்குரல் மிகுவித்துக் கேள்விக்கின்னாதாதல் பற்றிக் கடுங்குரல் என்றான்.”

……………….தொடரும்……………………………..

 

திங்கள், 28 ஏப்ரல், 2025

தமிழமுது -14 - சங்க இலக்கியச் சுவை. மகுளி – இழுகுபறை ஓசை.

 

தமிழமுது -14   - சங்க இலக்கியச் சுவை.

மகுளி – இழுகு பறை ஓசை.

“அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி

வருந்தினை வாழி என்நெஞ்சே பருந்து இருந்து

உயாவிளி பயிற்றும் யா உயர் நனந்தலை

உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்

கடுங்குரற் குடிஞ்ஞைய நெடுபெருங் குன்றம்

எம்மோடு இறத்தலும் செல்லாய் பின்நின்று

ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது

செல் இனி சிறக்க நின் உள்ளம் …”பொருந்தில் இளங்கீரனார் : அகநானூறு, 19. 1-8.

 

 என் நெஞ்சே…. நீ வாழ்வாயாக ..! நாம் புறப்பட்ட நாளன்று யான் வாரேன் என்று கூறி நம் வீட்டிலேயே நீ தங்கினாயும் இல்லை ; எம்முடன் இவ்வளவு தொலைவு வந்து மிகவும் வருத்தமுற்றாய்..!

யா மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள அகன்ற இடங்களில் பருந்து தங்கியிருந்து வழிச் செல்வோர் வருத்தம் அடையுமாறு இடைவிடாது ஒலி செய்யும் ; கடிப்பு உருள்கின்ற இழுகு பறையின் ஓசையினைப் போலப்  பொருள் தெரிய ஒலொக்கும் கடுமையான குரலைக்கொண்ட பேராந்தைகளையுடைய நெடிய பெருங்குன்றத்தை எம்மோடு தொடர்ந்து வந்து கடக்கவும் செய்கின்றாய் இல்லை.

பின்னே நின்று எம்மைக் கைவிட்டு நீங்கக் கருதுவாயானால் தையின்றி இப்பொழுதே செல்வாயாக, நின் உள்ளம் (நினைத்தது பெற்றுச்) சிறப்பதாக…!.

 

(உருள் துடி – கடிப்பு  (குறுந்தடி) உருள்கின்ற இழுகு பறை ; மகுளி – ஓசை  ; பொருள் தெரிய இசைத்தல் – காட்டு வழியில் பொருளுடன் போவார்க்குக் ‘ குத்திப் புதை , சுட்டுக் குவி’ என்னும் பொருள் தோன்ற ஒலித்தல்.; குடிஞை – கோட்டான் , பேராந்தை.)

……………….தொடரும்……………………………..

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

 

தமிழமுது -13   - தாய்மொழி வழிக் கல்வி.

.என்னுரை- முனைவர் இரெ. குமரன்.

இந்தியாவில் அனைத்துக் கல்வியாளர்களும்… உலக க் கலவியாளர்களும் ஒரே குரலில் ஓங்கி ஒலிப்பது தாய்மொழி வழிக் கல்வியைத்தான்.

ஒரு நாட்டின், ஓர் இனத்தின் ஒரு புதிய சமுதயத்தின் எழுச்சி முழக்கமாக இருக்கவேண்டிய  தாய்த்தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்கு மொழியாகி வெற்றி அறுவடைக்குரிய கருவியாக மாறிவிட்டது. இந்நிலை மாறினால்தான் தாய்மொழி தனக்குரிய இடத்தில்  அமரமுடியும் அதற்கு……

“தழாய்ந்த தமிழந்தான்

தமிழ்நாட்டின் முதலமைசராய்

வருதல் வேண்டும்” என்கிறார் பாவேந்தர்.

தாய்மொழி: இஃது ஓர் இனத்தின் முகவரி ; தமிழ்தான் தமிழனின் முகவரி.  பிழைப்புக்காகப் பேசும் மொழி வாழ்க்கை மொழியாகாது; அது வயிற்று மொழியாகும் ; பயிற்றுமொழியாகாது.

தமிழினம் தன் முகவரியை இழந்து கொண்டிருக்கிறது.”தாய்மொழிப் பயிற்சியில்லாதவன் தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. மொழிப்பற்று இல்லாதவன் நாட்டுப் பற்று இல்லாதவன் “ என்கிறார் வெ. சாமிநாத  சர்மா.  

தமிழ்நாட்டில்  கோவில் வழிபாடுகள் தாய்மொழியில் இல்லை.

“வேற்றவரின் வடமொழியை

வேரறுப்பீர் கோயிலிலே

மேவிடாமே.” –பாவேந்தர்.

“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றார்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்

துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினிலே

தூய்மையுண்டாகிவிடும் வீரம் வரும்” – பாவேந்தரின் இந்தக் கனவை இந்நாட்டில் யார் நிறைவேற்றுவார்கள்…எப்போது நிறைவேற்றுவார்கள்.? வீரம் விளைந்த இம்மண்ணில் விழுதுகளற்ற ஆலமரமா..?

பாவேந்தரின் எண்ணங்களும் கனவுகளும் சமுதாயத்தில் ஒரு தக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இடியென எழும் தாக்கத்தின் விளைவுகள் புரட்சிகரமான ஒரு வரலாற்றை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 நன்றி வணக்கம் – மீண்டும் ஒரு தொடரில் சந்திப்போம்.

……………….தொடரும்……………………………..

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”

பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.

 

 கற்பிக்கும் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து, அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு, வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.

 

Dr. R.KUMARAN- +91 94433  40426.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB0001854

MICR CODE : 613015003

TEL No: 94890 45822.

CANARA BANK, 46 E, ARULANANDA  NAGAR,

NANJIKOTTAI ROAD, THANJAVUUR – 613007

 

சனி, 26 ஏப்ரல், 2025

தமிழமுது -12 - தாய்மொழி வழிக் கல்வி. பேராசிரியர் க. கைலாசபதி : -1933 – 1982.

 

தமிழமுது -12   - தாய்மொழி வழிக் கல்வி.

பேராசிரியர் க. கைலாசபதி : -1933 – 1982.

ஒரு நாட்டின் தன்மானச் சின்னமாகத் திகழ்வது தாய்மொழிதான்.  ஒரு நாட்டில் தாய்மொழிக்குரிய இடம் தலைமை இடம்தான்; இதில் மாற்றுக் கரித்துக்கு இடமே இல்லை. ஒரு சுதந்திர நாட்டின் சிறப்பம்சம் தாய்மொழியின் தலைமை இடமே. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றோம் ; ஆங்கிலத்திலிருந்து விடுதலை பெறவில்லை. இதற்கிடையே இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுச் செயல்பட ஒரு சமாதான உரிமை ஒப்பந்தம் செய்யவும் முயலக்கூடாது. இந்தியா போன்று சுதந்திரமடைந்த இலங்கையில் அனைவரும் தம் தாய்மொழியில் கல்வி பயின்று வருகின்றனர். தாய்மொழிவழிக் கல்விதான் உண்மையான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்கிறார் டாக்டர் க. கைலாசபதி.

”In the academic world of Sri Lanka Mother tongue is given in due place and a child can study from the primary level to Higher education in its Mother tongue.

Heaving been a teacher for the past 25 years I firmly believe that only if the medium of instruction is the mother tongue, actual progress is possible.”

பேராசிரியர் பி. விருத்தாசலம்: 1940 -2010. 

தமிழ் மொழிவழிக் கல்வி இயக்கத் தலைவர். ஐயா அவர்கள் பல ஆண்டுகளாகத் தமிழ்வழிக் கல்விக்குப் போராடியவர். 1990இல் தஞ்சையில் தமிழ் வழிக் கல்வி மாநாட்டை நட்த்தித் தமிழ் உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

“ ஆங்கில மொழியைக் கற்பதில் தவறில்லை, ஆனால், பிற பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டும். இதனை வலியுறுத்துவதே தமிழ் வழிக் கல்வி இயக்கம் “ என்றார்.

 இயக்கம் இந்தப் புனிதமான நோக்கத்தை முன்வைத்துத் தமிழக அரசுக்கு உறுதுணையாக நின்று தமிழை வளர்த்து வருகிறது.

“உலகத்தில் எல்லா நாடுகளிலும் அந்தந்த மண்ணுக்குச் சொந்தமான அந்தந்த நாடுகளுக்குரிய தாய்மொழியில் கல்வி கற்பிக்கிறார்கள். கல்வி கற்ற மாணவர்கள் தம்முடைய தாய் நாட்டிலேயே தங்கித் தம் தாய்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்து, தாம் பிறந்த நாட்டை வளர்ப்பார்கள். ஆனால்,  தமிழ்நாட்டில்தான் மண்ணுக்குரிய மொழியாகிய தமிழில் கல்வி கற்பிக்க மறுத்து, அயல்மொழியாகிய ஆங்கிலத்தில் கல்வி கற்பிக்கும் கொடுமை நடக்கிறது. என்று கூறுகின்றார் பேராசிரியர் பி. விருத்தாசலம்.

……………….தொடரும்……………………………..

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

தமிழமுது -11. - தாய்மொழி வழிக் கல்வி. பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் : 1928 – 2015.

 

தமிழமுது -11.   - தாய்மொழி வழிக் கல்வி.

பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் : 1928 – 2015.

ஆங்கிலக் கல்வியின் வாயிலாக மிகப் பெரும்பான்மை மக்களிடமிருந்து கல்வி விலகியே இருக்கிறது. கல்விப் புரட்சி உண்டாக்க வேண்டிய காலகட்டத்தில் எழுத்தறிவு, இயக்கம் நடத்துவது ஏமாற்று வேலையே. ‘எல்லோருக்கும் கல்வி’’ என்ற கொள்கை நடைமுறைப்படுத்தபட வேண்டுமானால் அக்கல்வி எம்மொழி வழியாகத் தரப்பட வேண்டும் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“தாய்மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாகத் தாய்மொழிக் கல்வியை நாங்கள் வற்புறுத்தவில்லை. சமுதாயத்தின் எல்லாநிலை மக்களுக்கும்  கல்வியும் உயர்கல்வியும் கிடைக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாக இருப்பதற்கு முழுமுதல் காரணம் ஆங்கிலவழிக் கல்வியே.” என்கிறார்.

யுனெஸ்கோ ஆய்வறிக்கை.

“It should be remembered that only the native Language is the medium  of instruction  in most of the countries  of the world. Only in India it has become a problem due to opposition from scholars UNESCO after a through study has indicated that education through foreign medium is disadvantages.”

கல்வியில் இத்தகைய பின்னடைவிற்கு இன்றைய இந்தியக் கல்விக் கொள்கையே காரணம். நம்முடைய பண்பாட்டிற்கும் மொழிக்கும் ஏற்ப ஒரு புதிய கல்விமுறையை உருவாக்காமல் மேலை நாட்டுத் தாக்கத்திற்குஆட்பட்டுக் கிடப்பது முறையன்று என்பதை மிக நாகரிகமாகச் சுட்டிக் காட்டுகின்றார் கனடா நாட்டு அறிஞர் ஜான் ஸ்பெல்மேன்.

……………….தொடரும்……………………………..

வியாழன், 24 ஏப்ரல், 2025

தமிழமுது -10. - தாய்மொழி வழிக் கல்வி. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா- 1935 – 2017.

 

தமிழமுது -10.   - தாய்மொழி வழிக் கல்வி.

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா- 1935 – 2017.

தாய்மொழியில் பயிற்று மொழிச் சிக்கலுக்கு மிகப் பெரும்பான்மையான கல்வியாளர்கள் கூறும் காரணம் அறிவியலைத் தமிழில் பயிற்றுவிக்க முடியுமா..? என்பதுதான்.

 இவ்வினாவை எழுப்புவோர் தமிழர்களே, இவர்களின் இயலாமைக்கு மொழிமீது பழிபோடுவது அழகன்று, இவர்களுக்கு அறிஞர் மணவை முஸ்தபா கூறுவதாவது…..

 “ அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் ஆக்கம் தேடும் வகையில் மேற்கில் வெளியாகும் அறிவியல் நுட்பச் செய்திகளை உடனுக்குடன் தமிழில் தரும் அரிய வாய்ப்பை கூரியர் இதழ்வழி யுனெஸ்கோ ஏற்படுத்தித் தந்துள்ளது. எத்தகைய அறிவியல் நுட்பக் கருத்தாயினும் சொற்செட்டோடும் பொருட்செறிவுடனும் தமிழில் கூற முடிவதற்கு யாருடைய திறமையும் காரணமல்ல எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்ட தமிழ்மொழி இயல்பாகவே அறிவியல் மொழியாக அமைந்திருப்பதுதான்” என்கிறார்.

அறிஞர் வ.சுப. மாணிக்கம்: 1917 – 1989.

 இந்தியர்கள் தத்தம் தாய்மொழியோடு பிறமொழிகளையும் கற்க வேண்டும். குறிப்பாக நீண்டகால உறவுடைய ஆங்கிலத்தைத் தாய்மொழியின் புதுமை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். “ஒரு மாணவனுக்கு மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை தாய்மொழிதான் ஒரே பயிற்று மொழியாக இருப்பது இயற்கை” என்று கூறுகின்றார்.

……………….தொடரும்……………………………..

புதன், 23 ஏப்ரல், 2025

தமிழமுது -9. - தாய்மொழி வழிக் கல்வி. சிலம்புச் செல்வர் ம.பொ.சி – 1906 – 1995.

 

தமிழமுது -9.   - தாய்மொழி வழிக் கல்வி.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி – 1906 – 1995.

”பொறியியல், நவீன மருத்துவம், வான சாத்திரம், புவியியல் போன்றவற்றை அறிவியல் கலைகள் என்று சொல்வது பொருந்தும். இந்த அறிவியல் கலைகளை எந்த மொழியாலும் கற்பிக்கவோ, கற்க முடியும். சுதந்திரமாகவுள்ள ஒவ்வொரு நாட்டிலும் விஞ்ஞானக் கலைகள் உள்பட அனைத்துப் பாடங்களும் அந்தந்த நாட்டு மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன.

 சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கென இதுவரை பல்வேறு கல்விக்குழுக்கள் திட்டங்களை வகுத்தளித்துள்ளன. 1951இல் டாக்டர் ஏ.எல். முதலியார் கல்விக்குழு, தனது பரிந்துரைகளில் ஒன்றாக “ தாய்மொழியோ அல்லது தனது மொழியோதான் உயர்நிலைக் கல்வியில் பயிற்றுமொழியாக அமைய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பயிற்றுமொழிச் சிக்கல் மிகுந்த குழப்பத்தை  விளைவிக்கிறது. மாணவர்கள் கல்வியும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும் சுதந்திர இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆங்கிலப் பயிற்றுமொழிக் கல்வியால் சாதனைகளை இழந்ததோடு வேதனைகளை விலைகொடுத்து வாங்கியுள்ளோம் என்பதுதான் உண்மை. ஆங்கிலவழியில் படித்தால்தான் வேலை கிடைக்கும் அறிவு வளரும் என்ற “வெள்ளை மாயையிலிருந்து மக்கள் இன்னும் விடுபடவில்லை. படிப்பு ஒரு வேலைக்குரியது என்ற நிலையில் தாய்மொழியைப்பற்றி யாரும் கவலைப்படாமல் ஆங்கிலத்தோடு அழுது புரளுகின்றனர். மேலும் பண வருவாய் உடைய பதவிகளுக்குரிய படிப்புகள் யாவுமாங்கிலவழியில் இருப்பது இன்னுமொரு கொடுமை.ஆங்கிலத்தை ஒரு நூலக மொழியாக அறிவு வளர்ச்சிக்கும் உதவும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது காலத்தின் தேவையே.” என்கிறார் ம.பொ.சி அவர்கள்.

……………….தொடரும்……………………………..

 

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

தமிழமுது -8 - தாய்மொழி வழிக் கல்வி. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். 1884 – 1944.

 

தமிழமுது -8   - தாய்மொழி வழிக் கல்வி.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். 1884 – 1944.

ஐயா அவர்கள், தாய் மொழி வழியே கல்வி பயில்வதுதான் சாலச் சிறந்தது என்று வலியுறுத்துகின்றார்.

“கல்வியானது உலகில் வழங்கும் பல மொழிகளாலும் எய்தற்பாலதே யெனினும் தாய்மொழியிற் கற்றலென்பது ஒவ்வொருவர்க்கும் உரிய கடன்களுள் விழுமியதொன்றாம். அன்றியும் நாட்டு மக்களனைவரும் கல்வி கற்று அறியாமையினீங்குதற்கு வேற்று மொழியைத் துணையாகக் கொள்ளுதல் ஆற்று வெள்ளத்தைக் கடக்க மண் குதிரையைத் துணையாகக் கொண்டது போலும் பயனில் செயலேயாகும்.” என்கிறார்.

பாவேந்தர் பாரதிதாசன் – 1891 – 1964.

தமிழகத்தில் கல்வி அனைவர்க்கும் கட்டாயமாக்கப்படவேண்டும் எனக் கூறும் கவிஞர் அக்கல்வி, தாய்மொழிக் கல்வியாகவும் அதன்வழியே கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று…

“தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில்

கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்துகின்றார்.

……………….தொடரும்……………………………..

திங்கள், 21 ஏப்ரல், 2025

தமிழமுது -7 - தாய்மொழி வழிக் கல்வி. மகாகவி பாரதியார்- 1882 – 1921.

 

தமிழமுது -7   - தாய்மொழி வழிக் கல்வி.

மகாகவி பாரதியார்- 1882 – 1921.

ஆங்கிலக் கல்வியால் பெருகும் அறியாமையை எண்ணி வேதனையோடு பாரதியார்………

“ சென்ற நூறு வரிஷங்களாகைந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லட்சக்கணக்கான ஜனங்கள்படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி இருக்கின்றாகளா…?

இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய் தேறியவர்களிடம் மனச்சாட்சிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்கிதை மிகமிக்க் குறைவாக இருக்கிறது”  என்று ஆங்கிலக் கல்வியின் பயனை மதிப்பிட்டதோடு.

“தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை அனுசரனைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை.” என்றும் வருத்தப்படுகிறார்.

மேலும் பாரதியார்…..” கல்வி போதிப்பதற்கு ஒருவனது சொந்த தாய் பாஷை மட்டுமே இயற்கையானதும் மனிதப் பண்பிற்கு ஏற்றதுமான போதனாபாஷையாகும் என்பதே நமது முக்கிய வாதமாகும். யாராவது இதில் சந்தேகப்பட்டால் அவர் ஜப்பான், ஸ்காண்டினேவியா, இங்கிலாந்து, இத்தாலி, மெக்ஸிகோ அல்லது மனிதரை மனிதராக மதிக்கும் எந்த ஒரு தேசத்திலுள்ள கல்வித்துறை வித்வான்களைப் போய் விசாரித்துப் பார்க்கட்டும். முக்கியமாக தமிழ் தேசத்தைப் பொறுத்தமட்டில் அன்னிய பாஷையைப் பாட போதனைக்குப் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். ஏனெனில் சரியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் சொல்வதற்குத் தமிழ் பாஷை இங்கிலீஷ் பாஷையைவிடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.” எனும் பன்மொழியறிஞர் பாரதியார் கூற்றை உற்று நோக்குங்கள்.

……………….தொடரும்……………………………..

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

தமிழமுது -6 - தாய்மொழி வழிக் கல்வி.

 

தமிழமுது -6   - தாய்மொழி வழிக் கல்வி.

கமால்பாட்சா: தொடர்ச்சி.

மதக் கோட்படுகள், தொழுகைகள், தொழுகை அமைப்புகள், வழிபாடுகள் அனைத்தும் அரபியில் இருந்தன. கமாலின் துருக்கி மொழி திருத்தத்தில்  குரானும் விட்டுவைக்கப்படவில்லை. குரானே துருக்கி மொழியில் பெயர்க்கப்பட்டது.  தொழுகைகளும் தொழுகை அழைப்புகளும் மத போதனைகளும் வழிபாடுகளும் மற்ற மத நடவடிக்கைகளும் துருக்கி மொழியிலேயே நடைபெற வேண்டுமென விதிக்கப்பட்டன.  எதிர்ப்புகள் கிளம்பின ஆனால், கமால் அவற்றை மிகக் கடுமையாக அடக்கிவிட்டார்.” – (கு.. ஆனந்தன்.)

சுவாமி விவேகானந்தர் :- 1863 – 1902.

கல்வி மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். என்றார்.  மூளையில் பல விசயங்களைத் திணித்தல் கல்வியாகாது. கற்கும் கருத்துகள் உள்ளத்தோடு ஒன்றி அதன் மயமாகிப் புத்துயிரூட்டி மனிதத் தன்மையை மலரச்செய்து ஒழுக்கத்தைத் திருத்தி அமைப்பவனாய் இருத்தல் வேண்டும். அதாவது கசடறக் கற்றலும், கற்றபின் அதற்குத் தக நிற்றலும் வேண்டும்.  இதுவே போதனாமுறையின் இலட்சியமாதல் வேண்டும். கல்வி கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் கல்விச் சாலைகளும் இந்த இலட்சியத்திற்கு ஏற்றவாறு அமைதல் வேண்டும். ஊரெங்கும் நாடெங்கும் ஆண்களும் பெண்களும் கல்வியறிவு பெற்று உலக வாழ்க்கையை வளம் பெற நடத்தும் ஆற்றல் பெற வேண்டும். குருகுல முறையிலே தாய்மொழி வாயிலாக உலகியற் கல்வியையும் ஞான வாழ்விற்குரிய கல்வியையும்  ஒருங்கே போதித்தல் வேண்டும்  என்று கல்வியறிவு பெறுவதற்கான வழிமுறைகளைக் குறித்துள்ளார்.

……………….தொடரும்……………………………..

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

தமிழமுது -5 - தாய்மொழி வழிக் கல்வி.

 

தமிழமுது -5   - தாய்மொழி வழிக் கல்வி.

தாய்மொழி:

தாய்மொழிவழிக் கல்வி கற்பது மக்களின் உரிமை ; அதற்கு ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை. சமுக, பொருளாதார விடுதலையின்றி அரசியல் விடுதலை மட்டுமே முழுச் சுதந்திரமாகாது. அடிமை விலங்கொடித்து விடுதலை பெற்ற நாடுகள் பலவும் கல்விப் புரட்சியின் வழியே சமுக, பொருளாதார மாற்றங்களைக் கண்டு முன்னேறின.  விடுதலை அடைந்த பின்பு புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க முனைந்த தலைவர்கள் கல்வி வழியே அச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உதவாத வெறும் ஏட்டுக் கல்வியைப் புறந்தள்ளிவிட்டுத் தாய்மொழிவழிக் கல்வி அளித்துப் புதிய சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினர்.

இரசியா _ வி.. இலெனின்.

நாட்டுக்கு விடுதலையும் நாட்டு மக்களுக்கு அறியாமையிலிருந்து விடுதலையும் பெற்றுத் தந்தவர் இலெனின். இலெனின் கல்வியின் சிறப்பை நன்குணர்ந்த மேதை. இல்லாதவர்களையும் கல்லாதவர்களையும் எல்லாம் பெறச் செய்தவர். மாபெரும் அக்டோபர் புரட்சிக்குப்பின்னர் சோவியத ஒன்றியத்தின் கல்வி நிலை  குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிர்ந்தது.

தாய்மொழியாலேயே குழந்தைகள் கல்வி கற்க ஆவன செய்தார். இன்று சோவியத் ஒன்றியம் முழுவதிலும் 51 மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். அக்டோபர் புரட்சிக்குப்பின்பு சில சிறுபான்மை  இனத்தவர் மட்டும் அவர்களுடைய பேச்சு மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாத காரணத்தால் தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது எனக் கருதி, வரிவடிவமற்றிருந்த மொழிகளுக்கும் வரிவடிவங்களை அமைத்து  இலக்கியங்கள் மலர வழிவகை செய்யப்பட்டது. “ (–பேராசிரியர் சு.. சொக்கலிங்கம்.).

துருக்கி : கமால் அத்தாதுர்க் – 1881 -1925.

1923 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற துருக்கிக் குடியரசின் தலைவர் கமால் பாட்சா தன் நாட்டையும் மக்களையும் மொழியையும் பேணி வளர்க்க எதையும் செய்யத் துணிவு கொண்டவராயிருந்தார். மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுத்தார். சாதி சமய  மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். துருக்கி மொழியே ஆட்சிமொழி, துருக்கி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். அரபி, பெர்சியா மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. தாய்மொழிக்கு அரியணை அளித்துத் தன்மானச் சிங்கமெனத் திகழ்ந்தார் கமால் பாட்சா.……………………………….தொடரும்………………..

வியாழன், 17 ஏப்ரல், 2025

தமிழமுது -4 - தாய்மொழி வழிக் கல்வி.

 

தமிழமுது -4   - தாய்மொழி வழிக் கல்வி.

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்தபிறகும் சமுக் மாற்றத்திற்குத் தேவையான கல்விக்கொள்கை வகுகக்ப்படவில்லை. விடுதலை பெற்ற பல நாடுகள் அடிமைச் சமுதாயத்திலிருந்த கல்வி முறையைத் தூக்கி எறிந்துவிட்டன. புதிய கல்வித் திட்டங்களால் முன்னேறிய நாடுகள் தங்கள் தாய்மொழி வழியே கல்வி புகட்டியதால் மாபெரும் சமுதாய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அடைந்தன.

மொழி:

மொழி என்பது மனிதகுல மெய்யறிவின் பொக்கிசங்களைப் பாதுகாத்து மரபு வழியாக அளித்துச் செழுமைப்படுத்தவல்ல மதிப்புமிக்க சாதனமாகும்என்கிறார் லெனின்.

கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் நாடு முன்னேற்றமடைய ஒன்றிணைந்து உழைக்கவும் கலை, அறிவியல் செல்வங்களைக் கற்றுணர்ந்து ஆக்கப்பணிகளில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருப்பது மொழியே.. மொழிவழி உணர்வும் உணர்வில் அறிவு விழைவும் அறிவு விழைவில் இயற்கையை வெல்லும் ஆற்றலும் அவ்வாற்றல்வழி மாற்றங்களை நிகழ்த்தலும் இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தாய்மொழி:

மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன், சிந்திக்கும் திறன் தாய்மொழிவழியே நிகழ்கிறது. எனவேதான், தாய்மொழிவழிக் கல்வியறிவு பெறவேண்டுவது இன்றியமையாததாகின்றது..

குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது மனிதனின் மனவளர்ச்சிக்குத் தாய்மொழி. குழந்தை தனது முதல் பாடத்தைக் கற்பது தாயிடமிருந்துதானே..! ஆகவே, குழந்தையின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியன்றி வேறொரு மொழியை அவர்கள் மீது திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய பாவம் என்றே நான் நினைக்கிறேன்.” என்றார் காந்தியடிகள். …………………தொடரும்…………………

புதன், 16 ஏப்ரல், 2025

தமிழமுது -2 - குடியாட்சி – அரிஸ்டாட்டில்

 

தமிழமுது -2 - குடியாட்சி அரிஸ்டாட்டில்

நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக்காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப்படுவதுதான் ஒரு நாட்டிற்குச் சிறப்பு ; ஒரு நாட்டின் வாழ்வு தாழ்வுகளெல்லாம் அந்த நாட்டின் இளைஞர்கள் பெறும் கல்வியைப் பொறுத்திருக்கிறது.”

ஜான் லாக்

பார்லிமெண்டரி முறை சனநாயகம்கூட மக்களின் போராட்டங்களால் சில நாடுகளில் முதலாளி வர்க்கம் பெற்ற சலுகைகளாகும் .பார்லிமெண்ட் முறையில் முதலாளி வர்க்கம் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை மக்கள் மீது தொடுப்பதற்கு மக்களே தேர்ந்தெடுக்கும் பார்லிமெண்ட் என்ற சபையைப் பயன்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இச்சபையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதோடு மக்களுடைய உரிமை தீர்ந்து போகிறது. முதலாளித்துவ நாடுகளில் இச்சபையின் பெயராலும் சனநாயகத்தின் பெயராலும் முதலாளி வர்க்கத்தின் உடைமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரசின் அலுவல்களில் பொதுமக்கள் பங்குகொள்ள இயலாது. சுதந்திரங்கள் எல்லாம் சொத்துடைமையாளர்களுக்கே .”

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

தமிழமுது -3. பஞ்ச கவ்விய பஞ்சாமிர்த முறை.

 

தமிழமுது -3.

பஞ்ச கவ்விய பஞ்சாமிர்த முறை.

அருள்மிகு சிதம்பரநாத முனிவர் இயற்றிய நடராச சதகம்;

250 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியது. ; தருமையாதீன வெளியீடு -1976.

பாடல் எண் – 52.

கிருதமொரு பங்குத்தி யிருபங்கு பயமூன்று

     கிருதநேர் கோசல மயம்

கிளர்குசைப் புனல்மூ வுழக்கிவை கலந்தே

     கேடிலீ சானாதியா

முருமமுறு சுரிதி தரும் பஞ்சகவ் வியமுறையி

     தோங்குமைந் தமுத மாக்கல்

ஒருநூ றரம்பையின் கனியதற் கிருதெங்கு

     கண்ட சர்க் கரையெண் பலந்

தருமூ வுழக்குமது நெய்யதின் இரட்டியிவை

     தானெலாம் ஒன்று படவே

சமைவதாம் எனவுமை யவட்குமறை யாகமஞ்

     சாற்றினாய் உலக முய்ய

திரிநயன புரதகன சின்மய பராபர

     சிவாநந்த அருள் நிதியமே

சிவசிதம் பரவாச சிவகாமி யுமை நேச

     செகதீச நடராசனே!”

 பஞ்சகவ்விய அளவு :-

நெய் பங்கு – 1.

தயிர்  பங்கு –2.

பால் பங்கு – 3 .

கோசலம் லங்கு –1.

கோமயம்  பங்கு –1.

தருப்பை நீர் உழக்கு – 3.

இவற்றைக் கலந்து ஈசான முதலாச் சொல்லும் மந்திரங்களான் அமைக்கப்பெறும்.

 பஞ்ச கவ்வியம் :- பசுவினின்று உண்டாகும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம், ஆகியவற்றின் கலவை. _தமிழ்ப் பேரகராதி.

 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

புத்தாண்டும் அறுவடைக் காலமும்

 

புத்தாண்டும் அறுவடைக் காலமும்

“How time was measured in ancient ages. Land tillers knew that summer, the harvest time, occurred regularly. They counted time by periods from one harvest to the next. That was how time began to be counted by years.

People called a year in which a particularly memorable event happened the first year. For example, in one country years were counted from a big flood., in another from the founding of the capital , Rome. The next year was called second year, the one after that the third year and so on. Years were counted differently in different countries. This was very inconvenient.   F.Korovkin, History of the  ancient world, p.30.

புத்தாண்டை வகுத்தளித்தவர்கள் உழவர்களே..!

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 193–அறிவியல் சிந்தனைகள்: தமிழர் அறிவியல் சிந்தனை- What is Science ….?

 

சான்றோர் வாய் (மைமொழி : 193–அறிவியல் சிந்தனைகள்: தமிழர் அறிவியல் சிந்தனை- What is Science ….?

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

                      எப்பொருள் எவ்வகைமைத்தாயினும் ;எத்தன்மைத்தாயினும் அஃதாவது உயிருள்ளவையாயினும் உயிரற்றவையாயினும் அப்பொருளின் இருப்பையும் இயல்பையும் இயக்கத்தையும்  கண்டறிவதே அறிவு என்கிறார். இஃது அறிவியலின் அரிச்சுவடி என்க.

“ Science – a branch of knowledge requiring systematic study and method – especially one of those dealing with substances ……..” – animal and vegetable life and natural laws……..”

பொருள் என்ற சொல்லுக்குத் தமிழ் அகரமுதலி – 23  பொருள் விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளது.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு .

” Whatever be the apparent diversity of things it is wisdom

To analyses  and perceive the basic truth of the matter.”

The enlightened man who has true understanding, will be able to uncover the differing exteriors and lay bare the one central and immanent substance of all things of this world. Emerson’s concept of the ‘over soul’ based on the Upanishadic belief in cosmic unity conforms to Valluvar’s philosophy. And T.S. Eliot’s line, “ All things affirm thee in living”. Also echoes the same idea.

 

Valluvar does not believe in the mere acceptance of things only on the basis of tradition or sanctity. He wants the core of ultimate truth to be arrived at by going right behind appearances with vigorous use of reason.” ..(Tr.) Dr.S.M.Diaz.

                       அறிவியலின் அடிப்படைஇயற்கையின் இருப்பையும் இயக்கத்தையும் அறிவதே. தமிழரின் அறிவியல் அறிவு இயற்கையை (இருப்பை)அறிதல் இயற்கையோடு இயைந்து(இயக்கத்தை) வாழ்தல். இவ்வகையில் மனித இனத்தின் நேரிய வாழ்வை நெறிப்படுத்தினர். இஃது தமிழரின் அகவாழ்க்கையை அறிவியல் படுத்தியது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது புறவாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றன.                                       வானூர்தியும் கணினியும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; உண்மையும் ஒழுக்கமும் இல்லாமல் மனிதனாக வாழ முடியாது. அறிவியலற்ற அகவாழ்க்கை அமைதியற்ற சமுதாயத்தை உருவாக்கும். உலகின் இன்றைய நிலையை உற்றுநோக்குங்கள்- மனநோயாளிகள் கையில் மனிதம் அழிக்கும் நவீன ஆயுதங்கள். “” Arts without science  - useless ; Science without arts -- dangerous .”” ---

தொல்காப்பியரும், திருவள்ளுவரும் சங்க இலக்கியப் புலவர்களும் தமிழை  அறிவியல் மொழியாக ஆக்கிக் கொடுத்துள்ளனர். இத்தொடரில் மேற்குறித்துள்ள செய்திகள் தமிழரின் அறிவியல் சிந்தனைகளைத் தெற்றென விளக்கும் இத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.        மீண்டும் ஒருதொடரில் சந்திப்போம்.

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.”

பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியம், புறநானூறு: 183, 1- 2.

 

 கற்பிக்கும் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து , அத்துன்பத்தைப் போக்க உதவி செய்து, அவர்க்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டு, வெறுப்பின்றிக் கல்வி கற்பது பெரிதும் நன்மை பயக்கும்.

 

Dr. R.KUMARAN- +91 94433  40426.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB0001854

MICR CODE : 613015003

TEL No: 94890 45822.

CANARA BANK, 46 E, ARULANANDA  NAGAR,

NANJIKOTTAI ROAD, THANJAVUUR – 613007

நன்றி…வணக்கம்.

திங்கள், 7 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 192–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள். சர் ஐசக் நியூட்டன் – 1643 – 1727.

 

சான்றோர் வாய் (மைமொழி : 192–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

சர் ஐசக் நியூட்டன் – 1643 – 1727.

இவர் இங்கிலாந்து நாட்டவர் – இவர் கூறிய இயற்பியல் அறிவியல்  உண்மைகள் – தத்துவச் சிந்தனைகள் – அறிவியல் கண்டுபிடிப்புகள் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

”நான் கண்டு பிடித்தவையெல்லாம் என்முன்னோர்கள் தோளின் மீது ஏறிநின்று கண்டவையே..!” என்றார்.

கோப்பர் நிக்கஸ், கெப்லர், கலிலியோ முதலியோர்க்கு இருந்த சமய இடையூறுகள் இவருக்கு இல்லை. இவரின் அறிவியல் எழுச்சி சிந்தனையாளர்களை அனுபவ உலகிற்குத் தள்ளியது.

“எங்குமுள ஈர்ப்பு விசை இயக்கம் பற்றி இவர் தந்த விளக்கம் புதிய ஆய்வுகள் தோன்றவும் ; கண்டுபிடிப்புகள் பெருகவும் உதவியது. இதனால் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது ; நாகரிக வளர்ச்சியும் ஏற்படலாயின.

 

 

 

பிரான்சிஸ் பேகன் – 1561 – 1626.

அவலம் நிறைந்த வாழ்க்கை – அரசுப்பணி – பணி இழப்பு – பிறகு சில நூல்கள் எழுதினார் – கட்டுரை வடிவம் தோற்றுவித்தவர் இவரே.

”அறிவே ஆற்றல்” என்னும் கருத்திற்கு முதன்மை தந்தவர். அறிவியல் துணையோடு வாழ்க்கையில் எளிமையும் இன்பமும் அடைய வேண்டும் என்றார். உண்மைகள் இயற்கையில் பொதிந்து கிடக்கின்றன- மனத்தில் அல்ல.

 அனுபவத் துளிகளிலிருந்து அறிவியல் விதிகளை உருவாக்கும் அளவை முறைக்குத் தொகுப்பளவை என்று பெயர்.  பேகன் “தொகுப்பளவையின் தந்தை” (Inductive Logic)

 பகுப்பளவை,முறையே (Deductive Method)  அறிவியல் ஆய்வுக்குச் சிறந்தது என்றார். அரிஸ்டாட்டில் இக்கருத்திற்கு எதிரான தொகுப்பளைவையே சிறந்தது என்றார். அனுபவமும் சோதனையும் இல்லாத முறைகள் அறிவியல் ஆகா. மனத்தடைகள் (பற்று) மனிதனின் சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கின்றன.

மனத்தூய்மை சிந்தனைத் தெளிவைத் தரும். அரசியல், சமுகப் பொருளாதார ஆராய்ச்சி வளர்ச்சியில் இவரின் தொகுப்பளவை இன்றும் துணை புரிகிறது.

 What is Science ….?

…………………..தொடரும்…………………………….

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 191–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.அறிவியல் புரட்சி:

 


சான்றோர் வாய் (மைமொழி : 191–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.அறிவியல் புரட்சி:

 

 அறிவியல் புரட்சி:

அறிவியல் புரட்சி _-  முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன், ஈண்டு மேலும்  அறிவியல் வளர்ச்சி குறித்துச் சிலசெய்திகளை நினைவூட்டலாகக் கொள்ளவும்.

 தற்கால அறிவியல் வளர்ச்சியின் முன்னோடிகள் – கோப்பர் நிக்கஸ், கலிலியோ, கெப்லர், நியூட்டன் முதலியோரைக் குறிப்பிடலாம்.

 தாலமி வகுத்த புவிமைய பிரபஞ்சக் கோட்பாடு – பூமியை மையமாகக்கொண்டு பிரபஞ்சத்தின்  பிற கோள்கள் இயங்குகின்றன என்றார். 16ஆம் நூற்றாண்டில் கோப்பர் நிக்கஸ் தாலமியின் கருத்தை மறுத்தார்.

 

கோப்பர் நிக்கஸ்: - 1474 – 1543. போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தாய் நாட்டில் வானியல் ஆய்வுக்கூடம் அமைத்தார். சூரியனை மையமாகக் கொண்டு இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்றார். பிற கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்றார். இவர் எழுதிய நூலின் பெயர் “புரட்சிகள்’ என்பதாகும். இவருடைய கருத்து சமயக் கருத்திற்கு எதிரானதாக இருந்தது அதனால் இவரின் ஆய்வு முடிவுகள் இவர் இறந்தபின்தான் வெளியாகின.

கலிலியோ: - 1564 – 1643.

இத்தாலிய வானியல் விஞ்ஞானி. தனது ஆய்வுரையை உரையாடலாக அமைத்திருந்தார். “இரு முக்கியமான அமைப்புக் கொள்கைகள் பற்றிய உரையாடல்” என்பது அந்நூலின் பெயர். கோப்பர் நிக்கஸின் கருதுகோள்களை நிரூபித்தவர். நியூட்டன் பிறந்த நாளில் கலிலியோ இறந்தார். தொலைநோக்குக் கருவியால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்கினார். அதனால் , கலிலியோ சமயக் குர்றவாளியாகக் கருதப்பட்டார். சமய கூர்வாளுக்கு அஞ்சி அப்போதைக்குத் தன் கருத்தை மாற்றிக்கொண்டார்.

……………………………….தொடரும் …………………..

சனி, 5 ஏப்ரல், 2025

 

சான்றோர் வாய் (மைமொழி : 190–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

 

இலக்கியப் புரட்சி :

புது யுகத்தின்  முதல் குரல் இத்தாலியில்தான் ஒலித்தது. இங்கு ஒரு இலக்கியப் புரட்சியைத் தோற்றுவித்தவர்  “பொக்காசியோ” –கி.பி. 1313 – 1375. இவர் எழுதிய ’டெக்கமரான்’ கதைத்தொகுப்பு எழுச்சியை ஏற்படுத்தியது. மனவுணர்வுகள், உணர்ச்சிப் பிறழ்வுகள், இன்ப வேட்கை, சமய எதிர்ப்பு, உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடு ஆகியன மையக் கருத்துகள்.

கலைப் புரட்சி :

லியனார்டோ டாவின்சி – 1452 – 1519. இவர் அறிவுக்குப் பொருந்தாத கலைகளை வெறுத்தார். இயற்கைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இவர் ஓவியங்கள் வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ், லாஸ்ட் சப்பர், மோனோலிசா இவை மூன்றும் சிறந்ததென்பர்.

ஆயிரம் ஆண்டுகளாக ஒரே திசையிலும் ஒரே பாதையிலும் ஓடிய சிந்தனையை மடை மாற்றம் செய்து புதிய பாதை காட்டிய பெருமை 16ஆம் நூற்றாண்டு அறிஞர்களையே சாரும். இது மனித வாழ்வின் நாகரிகத்தை மாற்றியது ; அறிவியல் வளர்ச்சிக்கு உதவியது.

 அறிவியல் புரட்சி:

……………………………….தொடரும் …………………..

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 189–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 189–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

சமயக் காரிருள் அறிவுச் சூரியனின் கதிர்கள்பட்டு விலகியது. மக்களிடம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று மேலோங்கி சமயம்  பின்னுக்குத் தள்ளப்பட்டது. இலக்கிய மறுமலர்ச்சி ,  சமயச் சீர்திருத்தம், அரசியல் புரட்சி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றால் ஐரோப்பா கண்டம் முழுமையும் படர்ந்திருந்த அறியாமை மூடுபனி அகன்றது.

 

மக்கள் உலகியல் வாழ்வுக்கு முதன்மை தந்தனர். தொழில் புரட்சியும் – பொருளாதார உற்பத்திச் சாதனங்களும் பெருகின.

இடைக்காலம் (கி.பி. 5 – 15 ) இருண்ட காலம் என்றாலும் “புது யுகம்” என்ற கருவைச் சுமந்து வளர்த்த தாயாக இருந்தது புது யுகம் 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிறந்தது. சிறிதுசிறிதாக வளர்ந்து 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. பல நூறுஆண்டுகள் தடைப்பட்டுக் கிடந்த சிந்தனை ஓட்டம் அனையை உடைத்தெரிந்து ஐரோப்பிய நாடுகளின் மூலைமுடுக்களிலெல்லாம் பாய்ந்தோடியது.

மறுமலர்ச்சி:

கி.பி. 14 இல் கிரேக்கத்திலும் ரோமானிய  இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஐரோப்பாவில் பல துறைகளிலும் மாற்றம் . மக்கள் புது வரவும் உறவும் கொண்டனர். பழைய இலக்கியங்கள்  புதிய பார்வையில் பூத்தன. சிந்தனையில் புரட்சி, கலைகளில் புது வடிவம், புதிய கண்டுபிடிப்புகள்                     ஏற்பட்டன. சமுதாய அமைப்புத் தலைகீழாய் மாறியது..

புதுயுகத்தில் மனித முயற்சி மதிக்கப்பட்டது . சமயப் பற்றில் ஆற்றல் இழந்த மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்தான். தான் ஈட்டிய வெற்றிகளைக் கண்டு மகிழ்ந்தான்.

இலக்கியப் புரட்சி :

……………………………….தொடரும் …………………..

வியாழன், 3 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 188–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் தாமஸ் அக்கினாஸ் – Saint Thomas Acquinas – கி.பி. 1225 – 1274.

 

சான்றோர் வாய் (மைமொழி : 188–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் தாமஸ் அக்கினாஸ் – Saint Thomas Acquinas – கி.பி. 1225 – 1274.

இடைக்காலச் சிந்தனையில் தேக்கம் நிலவியது . கிரேக்கத் தத்துவங்களைப் புதிய சொற்களில் வடித்தனர் ;  கோட்பாடுகளைத்  திரித்தும் வளைத்தும்  கிறித்துவச் சமயத்திற்குப் பயன்படுத்தினர். மடாலயங்கள் சுதந்திரமான சிந்தனைக்குத் தடுப்புச் சுவர்களாயின.


 மடாலயக் கல்வி முறை வளர்ந்தது 10ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பாரிசு பல்கலைக் கழங்களில் தத்துவ விளக்கங்கள் ‘புலமைத்துவம்’ (Scholasticism)  எனப் பெயர் பெற்றது.  Scholasticism was a medieval European philosophical movement or methodology that was the predominant education in Europe from about 1100 to 1700.[1] It is known for employing logically precise analyses and reconciling classical philosophy and Catholic Christianity.[

 

 இதில் மதச் சார்புடைய தத்துவ வரையறைக்குட்பட்டுச் சிந்திக்க வேண்டியதாயிற்று. இச்சிந்தனை முறைகூட சிலவேளைகளில் சமயத் தலைமை அச்சுறுத்தியது. புலமைக் கோட்பாளர்கள் புரியாத மொழியில் பேசி,எழுதி வருவதைப் பெருமையாகக் கருதினர்.

 கல்விப் புரட்சி :

12ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்விப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சியின் பலனாக அரிஸ்டாட்டிலின் அளவையியல் தத்துவம்  வளரலாயிற்று. இது கிறித்துவத்திற்கு எதிரானபோதும் அதனைப் போற்றினர். அளவையியல் கல்வியும் பயிற்சியும்  சிந்தனையைச் செழிக்கச் செய்தன. அரிசுடாட்டில் தத்துவத்திற்கு வலிவும் பொலிவும் தந்தவர் அக்கினாஸ்.

சமயமும் தத்துவமும்  இருவேறு களப்பரப்புடையவை அவற்றை இயைந்து போகச் செய்வதோ ஒருங்கிணைப்பதோ இயலாத செயல் என்றும் கூறினார்.

அக்கினாஸ் :

அக்கினாஸ் 25 நூல்கள் எழுதியுள்ளார். கிறித்துவ சமயத்தை அதன் வீழ்ச்சியினின்று காப்பாற்றியவர். இத்தாலியில் பிறந்தவர். கிறித்துவ  சமயத்தின்  தீவிர இயக்க மான   “தொமினிகண்” இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு துறவு வாழ்க்கை மேற்கொண்டார். கடவுள் முதல் மனிதன் வரை பருப்பொருள் முதல் நுண்பொருள் வரை அனைத்தையும் ஆராய்ந்துள்ளார்.

 இறையியல் சுருக்கம்  ”சம்மாவிரிவுரை’ நூலில் (Summa Theologica) கடவுள் உண்டு என்பதற்கு ஐந்து நிரூபணங்களைத் தந்துள்ளார். கடவுள் இயக்கப்படாத இயக்கி, தனக்குத்தானே இயக்கம் உடையவராகவும் பிறவற்றையெல்லாம்  இயக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்கிறார்.” என்றார்.

இறைமை வாழ்வு:

 மானிட வாழ்வின் முடிந்த பயன் இறைவனுடன் ஒன்றி வாழ்வதே..! இறைவன் அருளால்தான் இந்நிலை கிட்டும் . இறைவனை அறியும் அறிவே தலையாய அறிவு ; ஆன்மா உலகியல் நிலைக்கு அப்பாற்பட்டது. உடல் ஆசைகள் உலகியல் சார்ந்தவை ; ஆன்மாவின் ஆசையும் வேட்கையும் உலகியல் கடந்த நிலையிலேதான் நிறைவுறும்.

இவரின் தத்துவக் கருத்துகள் அரிஸ்டாட்டிலின் கருத்துகளை அடியொற்றியவை.

…………………………….தொடரும்………………………