தமிழமுது –176– தொல்தமிழர் இசை மரபு:
சான்றோர் ஆய்வுரை – 36
தமிழிசை ஆய்வறிஞர் ஆபிரகாம் பண்டிதர்.
இராகம்,சுரம், சுருதி. ஆய்வுரை.
”பாலை : பகுப்பு அல்லது வகை: அது, ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாளை, சதுரப்பாலை என நான்கு வகைப்படும்.
ஆயப்பாலை - ஓர் இராசி வட்டத்தில் ச - ப ச - ப முறையாக வலமுறையாய் வரும் அரை, அரையான பன்னிரு சுரங்களும் ச - ம, ச - ம வாக இடமுறையாய்வரும் பன்னிரு சுரங்களும் அவைகளில் கிரகமாற்றும் பொழுதுண்டாகும் செம்பாலை, படுமலைப்பாலை, மேற்செம்பாலை முதலிய ஏழு பாலைகளும் மற்றும் சிறு பாலைகளும் உண்டாகும் விதத்தைச் சொல்லும் முறை.
வட்டப்பாலை - ஓர் இராசி வட்டத்தில் ச் -ப, ச - ப முறையில் வரும் பன்னிரு அரைச்சுரங்களையும் இரண்டிரண்டு அலகாகப்பிரித்து 24 அலகாக்கி விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய் வாசிக்கும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால்வகை யாழ்களையும் அவை ஒவ்வொன்றிலுண்டாகும் அகநிலை, புறநிலை, அருகியல் பெருகியல் போன்ற 16 ஜாதிப் பண்களையும் பற்றிச் சொல்லும் முறை.
திரிகோணப்பாலை _ ஒவ்வொரு அலகில் கமகமாய்ப் பாடிய வட்டப்பாலை முறையைப்போல் ½ அலகு கமகமாய்ப் பாடும் முறை.
சதுரப்பாலை - திரிகோணப்பாலை முறையைப்போல ச - ப முறையில் வரும் இரண்டு சுரங்களில் கால், கால் அலகு கமகமாய் வாசிக்கும் முறை.
ஆயப்பாலைப் பண்கள் - ஆயப்பாலையில் பிறக்கும் இராகம், அது ஏழு விதமாம் அவை, செம்பாலைப் பண், படுமலைப்பாலைப்பண், செவ்வழிப்பாலைப்பண், அரும்பாலைப்பண், கோடிப்பாலைப்பன், விளரிப்பாலைப்பண், மேற்செம்பாலைப்பண் என்று சொல்லப்படும். அவைகள் ச, ரி, க,ம,ப,த,நி என்ற ஏழு எழுத்தையும் முறையே கிரக மாற்றிச் சொல்லும் பொழுது உண்டாகும் இராகங்களாம். அவைகளைத் தற்காலத்தில் முறையே சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி, அரிகாம்போதி பைரவி, சுத்தகோடி என்னும் இராகங்களாக வழங்குகிறோம்.
.....................................தொடரும்......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக