வெள்ளி, 28 மே, 2021

தன்னேரிலாத தமிழ் -270.

 

தன்னேரிலாத தமிழ் -270.

554

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.


செங்கோல் வளைய,  அறனழிந்த செயல்களைச் செய்யும் மன்னன்,  குடி மக்கள் பழிதூற்ற, வளமிழந்து நாடு நலியக் குற்றங்கள் பெருகிக் கொற்றமும் சிதையும்.

ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக்

கொள்ளி கொடுத்து விடல். ”—பழமொழி, 200.


ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக் கொடுத்தல், குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக