ஞாயிறு, 2 ஜனவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –393: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –393: குறள் கூறும்பொருள்பெறு.


300                                                        

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.


உண்மையிலேயே யாம் கண்டவற்றுள் வாய்மையைவிடச் சிறந்த ஒன்று வேறு எதுவும் இல்லை. மனிதனுக்குப் பெருமை தருவது வாய்மை ஒன்றே


வாய்மை - எவராலும் வெல்லுதற்கு அரிய ஒன்று. 


கள்ளார் கள்உண்ணார் கடிவ கடிந்தொரீஇ

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்தள்ளியும்

வாயில் பொய் கூறார் வடுவறு காட்சியார்

சாயில் பரிவது இலர்.” – நாலடியார், 157.


சான்றோராவர்  திருடார்; கள் குடியார்;  தள்ளத்தக்கனவற்றைத் தள்ளி வைப்பார்;  எவரையும் இகழ்ந்து பேசார்;  வாயால் பொய் மொழியார்; வறுமை வந்துற்றபோதும் வருத்தம் கொள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக