திங்கள், 3 ஜனவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –394: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –394: குறள் கூறும்பொருள்பெறு.

 

303

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் .


வெஞ்சினத்தால் விளைவது தீமை ஒன்றே அதனால்,  எவரிடத்தும் சினம் கொள்வதை மறந்துவிடு.. முற்றிலும் மறந்துவிடு.


வள்ளுவத்தில்,  நினைக்க வேண்டியவை நிறைய இருக்க, மறக்க வேண்டிய ஒன்றே ஒன்றை, மறவாது கூறிய வள்ளுவரை மறக்காதே. 

           

கற்ற கல்வி அன்றால் காரிகை

 செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்.” ---மணிமேகலை,23.


காரிகையே..! கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் கற்ற அறிவுடையோர் ஆவர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக