சனி, 1 ஜனவரி, 2022

.தன்னேரிலாத தமிழ் –392: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –392: குறள் கூறும்பொருள்பெறு.

 

298

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.


உள்ளுக்குள் நிறைந்த அழுக்கை ( பொய், கொலை, களவு, காமம்….) வைத்துக்கொண்டு, குளித்து மூழ்கிப் பூசுவன பூசுவதால் மட்டும் ஒருவன் தூய்மை உடையவனாக முடியாது ;  அவன் அப்பழுக்கற்றவன் என்பது உண்மையைப் பேசும் உயர் குணத்தால் மட்டுமே வெளிப்படும்.


புற அழுக்கை நீரால் கழுவு ; அக அழுக்கை வாய்மையால் நீக்கு.


எய்திய செல்வத்தர் ஆயினும் கீழ்களைச்

செய் தொழிலால் காணப்படும்.” ---நாலடியார், 350.


எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும் செய்யும் தொழில்களைக் கொண்டு அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக