வெள்ளி, 31 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –391: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –391: குறள் கூறும்பொருள்பெறு.

283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.


திருடிக்குவித்த செல்வம்  எல்லையின்றிப்  பெருகுவதுபோல் தோன்றிப் பின்னர்  அச் செல்வம் முற்றிலும்  இல்லாது அழிந்தொழியும்.

கொள்ளையடித்துக் குவித்த பணம்  நீ, அழியும் காலத்தை அறிவிக்கும் நாடித் துடிப்பு.


ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம்தேட்டம்

மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.” ---நல்வழி, 8.


மண்ணுலகில் வாழும் மானிடரே…! விடா முயற்சியால் அளவுகடந்த பொருள்களை ஈட்டினாலும் அப்பொருள்கள் நம் ஊழ்வினையின்படி நல்லகாலமாக இருந்தால் நிலைத்திருக்கும் ; இல்லையேல் நிலைக்காமல் அழிந்து போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக