வெள்ளி, 3 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –370 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –370 : குறள் கூறும்பொருள்பெறு.


81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.


உற்றார் உறவினர், மனைவி, மக்களோடு, இல்லறத்தை நல்லறமாக  நடத்தி, மனநிறைவோடு  வாழ்வதன் நோக்கமே வீட்டிற்கு வரும் விருந்தினர்களைப் போற்றிப் பாதுகாத்தல் பொருட்டே ! நல்ல விருந்தினர்களைப் பெறத் தவறியவன் பொருள்களைப் பாதுகாக்கும் பூதமேயன்றி நல்ல இல்லறத்தான் ஆகான் என்பதாம்..


நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்

இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்

கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்….” புறநானூறு., 316.


 நேற்று தன்னை நாடிவந்த விருந்தினர்களைப் பேணுவதற்காகத் தன்னுடைய பழைய வாளை ஈடாக வைத்தான் ; இன்று வந்துள்ள விருந்தினரைப் பேணுவதற்குச் சிறிய யாழினைப் பணையம் வைத்துள்ளான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக