வெள்ளி, 24 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –387 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –387 : குறள் கூறும்பொருள்பெறு.

 

253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.


கொலைக் கருவிகளைக் கையில் வைத்துள்ளோர் மனம், கொலைத் தொழிலை நாடிச் செல்லுமாறுபோல ,  புலால் உணவைச் சுவைத்து  மகிழ்ந்த மனம் , புலால் உணவையே நாடிச் செல்லும்.


உயிர் பறித்து உண்ணும் மனம் ; அருள் சுரந்து நிற்பதில்லை.

பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எப்பொருளும்

முற்றினான் ஆகும் முதல்வன் நூல் பற்றினால்

பாத்துண்பான் பார்ப்பான் பழிஉணர்வான் சான்றவன்

காத்துண்பான் காணான் பிணி.”------சிறுபஞ்சமூலம், 6.

பற்று அற்றவனால் சொல்லப்பட்ட நூலைப் பற்றினான் தவசியாவான்; எப்பொருளையும் முழுதறிந்தவன் முதல்வன் ஆவான் ; நூலின்கண் சொல்லியபடியே பகுத்துண்பவன் பார்ப்பானாவான் ; பழியை உணர்வான் சான்றோன் ஆவான் ;  உண்ணக்கூடாது என்று சொல்லியவர்றை உண்ணாது தன்னைக் காத்துக்கொள்வான் நோய்வாய்ப்படான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக