வெள்ளி, 17 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –382 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –382 : குறள் கூறும்பொருள்பெறு.


203

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


பகைவர்க்கும் தீமை செய்யாது விட்டொழித்தலை உறுதியாகக் கொண்ட  அறிவே, அறியும் அறிவுநிலைகளில் எல்லாம் தலைசிறந்த அறிவாகும்.

பகைவர்க்கும் அருளும் அறிவு,  பேரறிவு.


கற்றனவும் கண் அகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்…” ------நாலடியார், 340.


 கற்ற கல்விபற்றியும் சிறந்த ஒழுக்கம்பற்றியும்  குடிப்பிறப்பின் பெருமை பற்றியும் மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதே பெருமை உடையதாம்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக