செவ்வாய், 14 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –380 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –380 : குறள் கூறும்பொருள்பெறு.


182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.


அறனழித்துத் தீயவை செய்தல் கொடுமையானது ; அதைவிடக் கொடுமையானது ஒருவன் இல்லாத இடத்து அவனைப்பற்றிப் பொய் புனைந்து  பழித்துக் கூறி நகையாடுவது. 


புறங்கூறல் இழிவு ; பொய்கலந்து புறங்கூறல் அதனினும் இழிவு ; பொய்கலந்து புறங்கூறிச் சிரித்து மகிழ்தல் இழிவினும் இழிவு.


கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுரை - தெள்ளிதின்

ஆர்க்கும் அருவி மலைநாட நாய்கொண்டால்

பார்ப்பாரும் தின்பர் உடும்பு.”--------பழமொழி, 87.


ஒலிக்கும் அருவியையுடைய மலை நாடனே...!

பார்ப்பனரும்  நாய்கொண்ட  உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர்.  அதுபோலக்  கள்ளியிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம் நோக்கி இகழாது, உயர்வாகக் கொள்வதைப்போலக்  கீழானவர் வாயில் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் அதனை இகழாது போற்றுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக