வியாழன், 9 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –375: குறள் கூறும்பொருள்பெறு.


137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

 எய்துவர் எய்தாப் பழி.


கல்வியும் செல்வமும் மேன்மையைத் தருவதாயினும் அஃதில்லாரும்  சிறந்த ஒழுக்கத்தினால் மேன்மை அடைவர் ;  வேறு எவ்வகையில் உயர்ந்தவராயினும் ஒழுக்கம் தவறியோர் அடையக்கூடாத  அழியாப் பழியை  அடைவர்.


எய்தாப் பழி : தன்குடிப்பெருமையை அழிப்பதோடு, தலைமுறையையும் தலைகுனியச் செய்யும் என்க

.

திரு ஒக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய

அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்….. --- நான்மணிக்கடிகை, 6.


 தீமை இல்லாத நல்ல ஒழுக்கம் நிறைந்த செல்வத்தைப் போன்றதாகும்; நன்னெறியினின்றும் நீங்காது ஒழுகுதல் அறவழிப்பட்ட சிறப்பினை நல்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக