ஞாயிறு, 26 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –389 : குறள் கூறும்பொருள்பெறு.

 

274

 தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.


வஞ்சகன் ஒருவன் தவக் கோலத்தில் தன்னை மறைத்துக்கொண்டு சொல்லாலும் செயலாலும் இழிவானவற்றைச் செய்வது , வேட்டுவன் புதரில் தன்னை மறைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடுவது போன்றதாகும்.


அறியா மக்களை அருள், ஆசி என்று மாய வலைவீசிப் பிடித்துண்ணும் வேடதாரிகள்.


பொருள் நசை வேட்கையோன் முறை செயல் வேறில்லை.”

முதுமொழிக்காஞ்சி, 7:9

.

பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக