சனி, 18 டிசம்பர், 2021

  

தன்னேரிலாத தமிழ் –383 : குறள் கூறும்பொருள்பெறு.


 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்

பேரறி வாளன் திரு.


இன்னார், இனியார் என வேறுபாடு காணாது மக்களுக்கு அரும்பெரும் உதவிகளைச் செய்யும் பேரறிவு உடைய ஒப்புரவாளன் பெற்ற செல்வம்; ஆற்று நீர் அற்றுப்போகும் காலத்தில் ஊர் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உயிர்காக்கும்  ஊற்றுநீர்  போன்றது.


 பிறருக்கு ஒன்று ஈயாச் செல்வர் சிற்றறிவினர்.


நடு ஊருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்.” ---நாலடியார், 96.


பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள், ஊரின் நடுவே மேடை சூழ விளங்கும் பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக