ஞாயிறு, 19 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –384 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –384 : குறள் கூறும்பொருள்பெறு.

 

221

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.


 இயலாதவர்க்கும் இல்லாதவர்க்கும் ஒன்று ஈவதே ஈகை ; ஏனைய ஈகை

எனப்படுவதெல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் ஈகையாகும்.

புகழ் கருதியோ, பெருமை கருதியோ, பதவி கருதியோ, இன்னபிற பயன்

கருதியோ கொடுப்பதெல்லாம்  ஈகையன்று ; கையூட்டு.

உழைத்த பொருளைக் கொண்டு  உதவி செய்தலே ஈகை.


இலம்படு புலவர் ஏற்ற கைந்நிறையக்

கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின்

வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி.” --- மலைபடுகடாம், 576 – 578.


 நன்னனே..! இல்லாமையால் வருந்தும் புலவர்தம் ஏந்தும் கைகள் நிறையும்படியாக, கழல் அணிந்த நின் கைகள் கவிழ்ந்து கொடுக்கும் பெருஞ் செல்வம், கெடுதல் இல்லாது, வற்றாமல் வளம் கொழிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக