சனி, 25 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –388 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –388 : குறள் கூறும்பொருள்பெறு.


268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்.


தன்னுயிர்மேல் கொண்ட பற்றினை முழுதும் நீங்கப் பெற்றானை உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் கைகூப்பி வணங்கும்.


தம் உயிரையும் போற்றாது ஆற்றுவர் தவம்.


நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப

 இன்னே பெறுதி முன்னிய வினையே.”திருமுருகாற்றுப்படை, 65,66.


புலவனே..!  நீ வீடு பேறு வாய்க்க வேண்டும் என்று விரும்பினாயானால் உன் மனத்தில் எழுந்த அவா கைகூடுவதோடு, நல்வினைப் பயனால் நீ நினைத்தவை எல்லாம் இப்பொழுதே அடையப் பெறுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக