திங்கள், 20 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –385 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –385 : குறள் கூறும்பொருள்பெறு.

 

235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.


புகழ் நிலைத்தற் பொருட்டுப் பொருள் வளமழிந்து வறுமையுறலும் வறுமையுற்ற போதும் இயன்றவரை, உயிர் ஒழியும் வரை அருஞ்செயலாற்றிப் புகழ் நிறுத்தி இறத்தலும் சான்றோர்க்கன்றி மற்றையோர்க்குக் கிட்டாது.


 நில்லாப் பொருள் போற்றாது ; நிலைக்கும் புகழ் போற்றுக.


நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.”புறநானூறு, 18.


நிலம் குழியாக உள்ள இடங்களில், நீர் நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும் ; அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் உலகம் உள்ளவரை தம் பெயரை நிறுத்திய புகழை அடைவர்; அவ்வாறு செய்யாதவர், இவ்வுலகத்தோடு தம் பெயரைச் சேர்த்த புகழை அடையார்.

1 கருத்து:

  1. காலம் குடபுலவியனாரைக் கொன்றுவிட்டது.ஆனால் அவர் கவிதை காலத்தை வென்றுவிட்டது.

    பதிலளிநீக்கு