ஞாயிறு, 12 டிசம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –378: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –378: குறள் கூறும்பொருள்பெறு.

 

169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.


பொறாமை நிறைந்தவனின் செல்வ வளமும் ;  நற்பண்புடையவனின் வறுமையும்  சிந்திக்க வேண்டியவையே. நினைத்துப் பார்த்தால் பொறாமையாளன்  செல்வமும் பண்புடையான் வறுமையும் நிலையில்லாதன என்பது இனிது விளங்கும்.


கடைக்கால் தலைக் கண்ணது ஆகிக் குடைக்கால் போல்

 கீழ் மேலாய் நிற்கும் உலகு.” ---- நாலடியார், 368.


விரித்துப் பிடித்திருக்கும் குடையின் காம்பைப் போல மேலோர் கீழோர் ஆவதும் கீழோர் மேலோர் ஆவதும் இவ்வுலகத்து இயற்கை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக