வியாழன், 30 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 138. அறிவியல் சிந்தனைகள். வடலூர் வள்ளலார்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 138. அறிவியல்

சிந்தனைகள்.  வடலூர் வள்ளலார்.


சித்தர் கோவை :

 திக்கெட்டும் பரவியிருந்த சித்தர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள். அவர்களுடைய காலங்களைக் கணிக்கமுடிய வில்லை. இன்றும் அவர்கள் அருவநிலையில் உலவுகிறார்கள் என்றும் கூறுவர்.

 

 தொன்மைக்கலத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்களுக்கும்  மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  சித்தர் கோவையில் உள்ள, பட்டினத்தடிகள், பத்ரகிரியார், இராமலிங்க அடிகள் முதலியோரின் சில பாடல்களும் அவர்கள் சித்தர்களே என்பதைப் புலப்படுத்துகின்றன.

 

 வடலூர் வள்ளலார் : 1823 – 1873.

 

அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப் பெறும் இராமலிங்க அடிகள், சமயத்தில் நின்று சடங்குகளை எதிர்த்தார், இதனால் அவரியற்றிய ’அருட்பாவை’ மருட்பா என்று கூறினர் சைவர். யாழ்ப்பாண ஆறுமுக நாவலர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார், அருட்பாவே வென்றது.

 

சமுக அறிவியல் சிந்தனைகள்:

 கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக….

உருவ வழிபாட்டை எதிர்த்தார்.

பல தெய்வ வணக்கம் வெறுத்தார்.

 அந்நியராட்சியை ஒழிக என்றுரைத்தார்.

சாதி சமய வேறுபாடற்ற மக்கள் ஒற்றுமையை விரும்பினார்.

 ஒளிவழிபாடு போற்றினார்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைத்தார்.

 சாதி, மத போதமின்றி அனைவரும் ஒரே பந்தியில் அமர்ந்து உண்டனர்.

 மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார்.

 இச்சாதி சமய விகற்பங்களெல்லாம் தவிர்ந்தே

எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல் வேண்டும் என்றார்.

  ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும். என்றார்.

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அனைத்து உயிர்களித்தும் அன்பு கொண்டு கருணையுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

வள்ளலார் அருள் வாக்கு :

“ எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ;

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவருளந்தான்

சுத்த சித்துருவாய் என்பெருமான் நடம்புரியும் இடமென நான் தேர்ந்தேன்..”

 

அருட்பிரகாச வள்ளலாரின் அருள் வேண்டுவோர் வட்டித்தொழிலை விட்டொழித்தல் நன்று.

 

“ வட்டி மேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்

     வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்

     பெட்டியை நிரப்பிகொண்டு ஒட்டியுள்ளிருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் தேரீர்

     பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிப்போல் வாழ்கின்றீர் கொட்டிபோற் கிளைத்தீர்

     எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.”

 

சாதி மத பேதங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களைப் பார்த்து அருட்பிரகாச வள்ளலார் ……….

 

“” சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

     சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற  உலகீர்

     அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே.”

 

’ நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும்’

‘உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும்’

’எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்பு தரல் வேண்டும்’

’புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும்’

’பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்’

வள்ளலார் போறி ஒழுகும் வாய்மை நிறைந்த தூய்மை நெறியை ஈண்டு உணர்ந்து ஒழுகுதல் நன்றாம்.

 

……..சித்தர்……..வள்ளலார்… ……. தொடரும்…………

புதன், 29 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 137. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்-மருத்துவம்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 137. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்-மருத்துவம்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

சித்த மருத்துவ நூல்கள்:

சித்த மருத்துவ நூல்கள் ஏராளமாகவுள்ளன. பல நூல்கள் ஆராயப்படாமல் உள்ளன. பலவற்றிலுள்ள ’பரி பாஷை’ சொற்கள் என்னவென்றே புரியவில்லை. திருமூல்ர், அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி முதலியோரின்  சித்த முறைகள் சிறப்பாக உள்ளன. பொருள்களின் இயல்புகளைப் பற்றியன்நூல் ‘ குணவாகடம்’ எனப்து.  பல குணவாகட்த்  திரட்டுகள் உள்ளன. அகத்தியர் பெயரால் பல மருத்துவ நூல்கள் உள்ளன.

 அகத்தியர் ஆயிரம். அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம், அகத்தியர் வைத்திய பூரணமும், சட்டை முனியின் வாத காவியம் ஆயிரம் , தேரையரின்  தைல வர்க்கங்களும், திருமூலரின் எண்ணாயிரமும், கோரக்கரின் ஏழு மூலிகை வைத்தியமும், போகர் எழுநூறும், தன்வந்திரியின் கருக்கடை நிகண்டும், புலிப்பாணி வைத்தியமும், இரமதேவரின் கருக்கடை நிகண்டும், திருவள்ளுவரின் ஞானவெட்டியானும் சிறப்புற்ற நூல்களுள் சில.

 இவையெல்லாம்  செய்யுளாக உள்ளன. பழகுதமிழில் அமைந்துள்ளன. எளிதில் பொருள் விளங்கிக் கொள்ள முடியாத குழூஉக்குறிச் சொற்கள் பல இடையிடையே இருக்கின்றன.  மருந்து செய்யும் முறை பற்றிச்  சொல்லிக்கொண்டே வரும் போது இடையிலே தொடர்பில்லாமல் ஒரு தத்துவம் குறுக்கிடும். பிறகு மருந்து முறை தொடரும் ;  பிறகு மந்திர முறைகள் சொல்லப்படும். இப்படி இடையிடையே ஞான யோக மார்க்கங்களும்  மருத்துவ நூல்களில் இடம் பெறுகின்றன. பல நூறு ஆண்டுகளாக வாய்மொழியாகவே பயிலப்பட்டு அண்மைக்காலத்தில் அவை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 

சித்த மருத்துவத்திற்கு உள்ள  தலையாய சிறப்பு. ‘ தீர்க்க முடியாத நோய்கள் என்றும், அந்நோய்களுக்கு மருந்து கிடையாது’ என்று கூறும்  மருத்துவ முறைகளைப் போலன்றி எந்த் நோயையும் தீர்க்க முடியும் என்று சித்த மருத்துவம் உறுதியாகக் கூறுவதே.

 

 பழந்தமிழ்ச் சித்தர்கள் அறிவுபூர்வமாக ஆண்டவன் உட்பட அனைத்தையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள்;  தத்துவம் தந்த மெய்ஞ்ஞானிகள் ; சித்த மருத்துவம் மூலம் உடற் பிணி போக்கியவர்கள். சமுதாயச் சீர்திருத்தம் வேண்டியவர்கள் ; கண்மூடிப் பழக்கங்களெல்லாம் தொலைந்து உண்மையான இறை நெறி பரவப் பாடுபட்டவர்கள்.

 --பேராசிரியர் சிவா.

 

சித்தர்……..மருத்துவம்… ……. தொடரும்…………

செவ்வாய், 28 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 136. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்-மருத்துவம்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 136. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்-மருத்துவம்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.


சித்தர் மருத்துவம் - சிறப்பியல்புகள்

 “சித்தர்கள் வளர்த்த மற்றொரு அற்புதமான கலை சித்த மருத்துவமாகும்.

இரசம் உலோகம், உப்பு முதலிய தாதுப் பொருள்கள், செடி,கொடி, முதலிய தாவர வகைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் மிகப் பழங்காலத்தே நுட்பமாகச் சித்தர்கள் அறிந்திருந்தமை, இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகும்.  ஒவ்வொரு பொருளின் தனி இயல்பையும் அப்பொருள் பிற பொருளுடன் கலப்பதால் ஏற்படும் விளைவையும், கலக்கும் முறையையும் ; இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள் கிடைக்காதபோது, அவற்றை வைப்புச் சரக்காக உருவாக்குவதுபற்றியும் தாது, தாவர, சீவ வர்க்கங்களையும் உலோக பாடாணங்களையும் பற்பம், செந்தூரம், இளகம் மணப்பாகு, கருக்கு, குடிநீர் முதலிய மருந்து களாகச் செய்யும் முறைபற்றியும் மிக நுட்பமாகவும் விரிவாகவும் சித்த மருத்துவம் விளக்குகிறது. மருந்துக்கு வேண்டிய பொருள்கள் எந்தெந்தக் காலங்களில் எங்கெங்கே கிடைக்கும் என்பதைப் பற்றியும் மருத்துவ நூல்கள் கூறுகின்றன.    

 காலாங்கிநாதர் ஐந்நூறு அல்லது கொல்லிமலை ரகசியம் என்னும் நூலில், கொல்லி மலை பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக  சோதி விருட்சம் என்னும் மரத்தின் வேரில் துளையிட்டு அதில் இரு பலம் பாதரசத்தை ஊற்றி அடைத்து மூடி இரு மாதம் சென்று பார்த்தால் இரசம் கட்டி மணியாக இருக்கும். அதனுடம் முப்பு என்னும் அதிசய மருந்துப் பொருளையும் பிறவற்றையும் சேர்த்து மருந்தாகச் செய்து முறையாக ஒரு மண்டலம் உண்டால், நரை திரை மூப்பு நீங்கி நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழலாம் என்று தெரிவிக்கிறது.

 சித்த மருத்துவத்தில் முக்கியமான பிரிவு ’மணிமந்திர ஒளடதம்’  என்பது. இதற்குப் பலவாறு பொருள் கொள்கிறார்கள். மணி என்பது இரசமணியாகும். நீராக இருக்கும் பாதரசத்தை மருந்துப் பொருள்களுடன் கூட்டினால் நெருப்பிற்கு நிற்குமாறு கட்டி மணியாக்குதல் என்பது பொருள். ஒரு சித்த மருத்துவர் இரசத்தை மணியாகக் கட்டுவதற்கு அறிந்திருக்கிறார் என்றால் அவருக்குச் சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கூறுகளில் தெளிவும் அறிவும்  உள்ளன என்பது பொருள்.

இரச வாத வித்தை என்பது மற்றொரு பிரிவு. செம்பு போன்ற உலோகங்களைப் பத்தரைமாற்றுத் தங்கமாக மாற்றுவது.. இதை ‘வாதம்’ சுடுதல்  என்று கூறுவர். செம்பை, பொன்னாக்க முயன்று தோல்வியைத் தழுவியவர் பலருண்டு ‘வாதி கொட்டால் வைத்தியன்’  என்னும் மொழியும் இதனை  உறுதிப்படுத்தும்.”

 --பேராசிரியர் சிவா.

திங்கள், 27 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 135. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்-மருத்துவம்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 135. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்-மருத்துவம்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

அறுவை மருத்துவம்

 

                              சிந்துவெளி அகழ்வாராய்ச்சில் கிடைத்துள்ள சான்றுகளின்படி, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை மருத்துவத்திலும் பல் மருத்துவத்திலும் சிறந்துவிளங்கியமை அறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பல் மருத்துவத்தில் பல்துளையிடல் முறையினை தொல்லியல்அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்நிகழ்வின் காலப்பகுதி கி.மு. 9000 – 7000  என்றும் கணக்கிட்டுள்ளனர்.

                   இந்தியாவில் அறுவை மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சுஸ்ருதர் (கி.மு. 600) இமாலயத்தில் வாழ்ந்தவர். இவர் காசியில் மருத்துவர் தன்வந்திரியிடம் அறுவை மருத்துவம் பயின்றவர். ’ சுஸ்ருத சம்கிதாநூல் இவருடைய மருத்துவத்  தொகுப்பாகும்.  தற்கால அறுவை மருத்துவ முன்னோடியாக இவர் போற்றப்படுகிறார்.

                  தமிழுலகில் பதினெண் சித்தர்கள் மருத்துவத்திற்கு ஆற்றிய அரும்பெருந்தொண்டுகளைப் புதிய கண்டுபிடிப்புகளை இன்றும் உலகம் வியந்து போற்றுதலை நாம் அறிவோம்..

                 இன்றைய மருத்துவ அறிவியலோடு சித்தர் மருத்துவம் வளர்ந்து வருதலே இம்மருத்துவமுறைக்குக் கிடைத்த அறிவியல் ஒப்புதலாகும். சித்தர்கள் உடலியல் உளவியல் நோயியல் என்றவாறு அறிவியல் நோக்கில் ஆராய்ந்து மருத்துவம் செய்தனர்நோய்நாடி நோய் முதல்நாடி…’  வளி முதலா எண்ணிய மூன்றும்’ – ( திருக்குறள், மருந்து.- 95) ஆராய்தறிந்த உண்மையை வள்ளுவத்தில் காணலாம்.

                மேற்சுட்டிய சங்கஇலக்கியப் பதிவு அறுவை மருத்துவத்தில் வெள்ளிய ஊசி பயன்படுத்தியதைச் சுட்டுகிறது.. தொல்தமிழ்ப் பழங்குடியினர் கருவேல மர முள்ளைப் பயன்படுத்தி அறுவை மருத்துவம் செய்துள்ளனர் . முள்ளை முள்ளால் எடுத்தல் என்னும் பழமொழியை நோக்குக. 

Surgery and Medicare among the Tamils

                          “The quotes drawn from Purananooru, Malaipatukataam testify that ancient Tamils used to tune the flute of Aambal stem, tolling small bells, blowing of flavored smoke  by burning  white mustard  and singing the songs of Kaanchi meter in the halls where they keep the warriors  wounded in battles. Foliage if margosa and Irava tree will be inserted on the ceiling in the front yard of their homes. Apart from providing a congenial  therapeutic  effect on the warriors, these placements of folio, sound of the bell incense and songs would prevent the vicious demons from entering the house, they believed.

                                 It may be recalled that even to-day in the rural areas, neem leaves are found inserted on the ceiling of houses where persons affected with measles or small pox are kept for recuperation. Invocation of lullaby on a female deity Mariyamman will also be sung to provide a soothing effect on the diseased person.”

Surgery

                       The passage from a poem by the Sangam poet Paranar in Patirrupathu speaks of a warrior’s chest sporadically marked with scars because of sutures once made with the help of pure needles on the body when it had been wounded because of sharp arrows in the battle field.

                 Sushrutha of the 6th century B.C. is said to have been the most ancient surgeon. No less is the surgical work seems to have been performed in the Sangam period. Ancient Tamil Siddhars are also reputed for having handled pathological analysis of human body before administering their herbo mineral medicines to the patients.” –Editor.

 

விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு -  மூன்று நாட்களுக்குமேல் இரண்டுக்கும் மதிப்பில்லை என்பது தமிழன் கண்ட வாழ்வியல் அறிவியல்.

 பத்து மிளகு இருந்தாபகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்என்ற பழமொழி தமிழனின் அறிவியல் மருத்துவம்.

 குடலேத்தம் தெரியாமா கோடி வைத்தியம் பண்ணினானாம்என்ற பழமொழி இன்றும் செல்லுபடியாகிறதே.

சுக்கு, மிளகு, திப்பிலி   - தப்பில்லை ,  இன்னும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் உணவாகும் மருந்தன்றோ..!