திங்கள், 29 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 31: சோழர்கால உறைக்கிணறுகள்


தமிழாய்வுத் தடங்கள் – 31: சோழர்கால உறைக்கிணறுகள்




தாகூர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர் ஏ. பிரதீபராசன், புதுச்சேரிக்கு அருகில் உள்ள சோழர்காலத் திருவாண்டார் கோவில் ஊரில் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட ஒரே அளவிலான 10 சுடுமண் உறைகள் கொண்ட கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த  உறைக்கிணற்றைப் பேராசிரியர் பி. ரவி அவர்களின் வழிகாட்டலில் கண்டுபிடித்துள்ளார். இவ்வகழ்வாயில் சோழர்காலத்தில் வளமான வாழ்க்கை வாழ்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்று அறியமுடிகிறது. இதே போன்ற சுடுமண் உறைகள் கொண்ட கிணறுகள் அரிக்கமேடு, மணப்பேட்டைப் பகுகளிலும் அகழாய்வில் கிடைத்துள்ளன.  பேரா. ரவி  ஒரு மாணவர் குழுவை அமைத்து புதுச்சேரியைச் சுற்றியுள்ள ஊர்களில் விவான அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய இடங்களை கண்டறிய ஏற்பாடு செய்தார்.அகழாய்வுகள் சோழர்களின் அறிவியல் அறிவை உறுதிப்படுத்தியுள்ளது.

உறைக்கிணறு முன்னேறிய தொழில் நுட்பத்துடன்  ஒரு குளியல் அறை போலவும் நீர் வெளியேற சுடுமண் குழாய்கள் பதித்துள்ளனர்.

ராசன்  ஆய்வின் வழியே திருவாண்டார் பகுதியில் சோழர் காலத்தில் மக்கள்   நல்ல செழித்தோங்கிய வளமான நாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். என்றும்  கோவில் சுற்றுச் சுவர்களில் சிறப்பான வரலாற்றுக் குறிப்புகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது என்றும் கூறினார். மேலும்  சில ஆண்டுகளுக்கு முன் கோவிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது பல வெண்கலக் கடவுள் சிலைகள்   கிடைத்தன என்று ராசன் பேரா.ரவியிடம் கூறினார். பேரா. ரவி,  கி.பி.1300 இல் தில்லி சுல்தான் அலாவுதின் கில்சியின் படைத் தலைவர் மாலிக்காபூர் இப்பகுதியில் படையெடுத்துவந்தபோது  இங்கிருந்த பாண்டியர்களும் சம்புவராயர்களும் இப்பகுதியை விட்டு வெளியேறுமுன் இறைவன், இறைவி சிலைகளை மண்ணில் புதைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த உறைக்கிணறு போன்ற  வேறுபல் உறைக்கிணறுகளும் அரிக்கமேடு அகழாய்வில்  (2002இல்) கிடைத்துள்ளன.

தென்னிந்தியாவில் கிடைத்துள்ள கிணறுகள் கி.மு. முதல் நூற்றாண்டிற்கும் கி.பி. முதல் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலத்தவையாகும் என்பதை அண்மைக்கால அகழாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

மாணவர் ராசன், இவ்வகழாய்வு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ;  முன்னோர் நாகரிகத்தை அறிந்துகொள்வதற்கு மேலும் பல அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.

 



ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 39: சீனா – கேரளா; வாணிகத் தொடர்பு.

 

 தமிழாய்வுத் தடங்கள் – 39: சீனாகேரளா; வாணிகத் தொடர்பு.



கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கேரளாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற வாணிகத் தொடர்பான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.கொல்லத்தில் உள்ள தங்கசேரி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றபொழுது சீன மண்பாண்டச் சிதறல்கள் கிடைத்தன.

இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் கே.கே. முகம்மது , சீனாவில் ’சங்’ மரபினர் ஆட்சியின் போது பரவலகப் பயன்படுத்தப்பட்ட ”நச்சுத் தட்டு” (பாய்சன் பிலேட்டு) முன்னோர்கள் பயன்படுத்திய அசல் பீங்கான் தட்டுத் துண்டுகள் கிடைத்துள்ளன என்றும் சங் அரசர்கள் இந்தச் சிறப்பான தட்டுகளில் உணவருந்தினர், இத்தட்டு நச்சுகலந்த உணவாக இருந்தால் தட்டில் தெறிப்புகள் ஏற்படும் என்றும் வேறு சிலர் இந்தத் தட்டில் நச்சு உணவு இருந்தால்  தட்டின் வண்ணத்தையோ, உணவின் வண்ணத்தையோ மாற்றிக்  காட்டும் என்ற கதையை ஆராய வேண்டி த் தட்டின் சிதறிய துண்டுகளை கேரளா வரலற்று ஆய்வகத்தில் வைத்துள்ளதாக முகம்மது கூறினார்.

சீனத் தட்டுகளைப்போன்று கேரளத்தில் உற்பத்திசெய்ய கொல்லத்தில்  ஆலை அமைத்திருந்ததாகவும் அது பல நூற்றாண்டுகள் செயல்பட்டதாகவு கருதுவதாக  கேரளா தொல்லியல்துறை இயக்குநர் ஜி.பிரேம்குமார் தெரிவித்தார்.

சீன ஆலைகள் கொல்லத்தில் செயல்பட்டதாக மூன்று (வான் டாயூன், ஃபெய்கிசின்.  முகூன்)  சீனப் பயணிகளின் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் 600 காசுகள் தங்கசேரி  துறைமுகக் கடற்கரையில் கிடைத்துள்ளன. இக்காசுகள் ’டாங்’ (618 – 907) ’மிங்’ (1368 – 1644) அரசர்கள் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டவையாகும். இக்காசுகளில் வாழ்த்துச் செய்தியாக  ’வளத்துடனும் மதிப்புடனும் நீடூழி வாழ்க’ என்று பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசுகள் போல் போலியாக உருவாக்கப்பட்டுள்ள காசுகளை ’ பெங்சூய் ‘ சந்தையில் காணலாம் என்று முகம்மது கூறினார்.

 

(மேற்குறித்துள்ள வரலாற்றுச் செய்திகள் தஞ்சையத்  தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பிற்காலச் சோழர்கள் காலத்தில் நிகழ்ந்தவையாகும் என்பதைக் கருத்தில் கொண்டு மேலும் ஆராய்ந்து பர்க்கவேண்டும்.)

 

சனி, 27 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 29: 16 ஆம் நூற்றாண்டு நடுகல்

 

தமிழாய்வுத் தடங்கள் – 29: 16 ஆம் நூற்றாண்டு நடுகல்




பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி இயற்பியல் பேராசிரியர் சரவணகுமார் ,

ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தாதப்பள்ளி என்னும் ஊரில் இந்த அரிய நடுகல்லைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்நடுகல்லில் இருக்கும் வீரர்கள் 1.பெருமாள் 2.நாகனன். இவ்விரண்டு பெயர்களுக்கிடையில் சந்திரன், சூரியன் இடம்பெற்றுள்ளன. அஃதாவது கல்வெட்டுகளில் இடம்பெறும் ’சந்திர சூரியர் உள்ளவரை’ என்னும் பொருள் குறிப்பைக் கொண்டதாம். ஒரு வீரன் புலியின் முன்னே ஆயுதம் கொண்டு தாக்க, இன்னொரு வீரன் புலியின் பின் பக்கத்தில் தாக்குகிஆஅரான். இருவருமே வேட்டி அணிந்து, இடுப்பில் குத்துவாள் இருக்க,  அவர்கள் கையிலும் காலிலும் கழல்கள் அணிந்துள்ளனர். தலையின் ஓரத்தில்  கொண்டை முடிந்துள்ளனர். மலைப்பகுதியில் காணப்படும் இந்நடுகல், சிவலிங்க வழிபாடு, கர்நாடகாவில்  உள்ள வீரசைவர்களின் தாக்கத்தால் ஏற்பட்டதாகலாம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலைவாழ்மக்களின் தனிதன்மை உடைய பண்பாட்டினைச் சுட்டுவதாகும்.

 


வியாழன், 25 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 28: போர்க்களம் புகும் பெண்டிர்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 28: போர்க்களம் புகும் பெண்டிர்.


கிருட்டினகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள சந்தனப்பள்ளி எனும் ஊரில்   கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த  இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

கிருட்டினகிரி வரலாற்றுப்பேரவைத் தலைவர் அறம். ஏ. கிருட்டினன்,” இவ்விரண்டு நடுகற்களும் அரிதினும் அரிதாக நமக்குக் கிடைத்துள்ளது. பெண்டிர் போர்க்களம் நோக்கிச் செல்வது முதன்முதலாக இங்கே தான் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் அவர் , பொதுவாகப்  போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மட்டுமே நடுகல் நாட்டுவது மரபு.

குறிப்பாக ஒரு நடுகல்லில்  மூன்று பெண்கள் போர் ஆயுதங்களுடன் குதிரையில் செல்வதும் இன்னொரு நடுகல்லில் இரண்டு பெண்கள் குதிரை மீதேறிச் செல்வதக் காணலாம் .” என்று கூறினார்.

இவ்விரண்டு நடுகற்களும் சந்தனப்பள்ளி ‘பன்னியம்மன்’ இருந்துள்ளன . ஆனால் இவ்வூர் மக்களுக்கு  இவை வீரர் வழிபாட்டிற்குரியவை என்று தெரியாது.

கிருட்டினன்,  முதல் நடுகல்லில் இருக்கும் மூன்று பெண்களில் ஒருவர் அரசியாக இருக்கலாம், குதிரையில் இருக்கும் ஏனைய இருவரும் போர் மறத்தி களாக இருக்கலாம்.மூன்று பெண் வீரர்கள் தங்கள் வலது கையில் படைக் கருவிகளைக் கொண்டிருக்கின்றனர்.. இந்நடுகல்லில் ஓர் ஆண் இருக்கிறார், அவர் அப்பெண்களின் பாதுகாவலராகவோ அல்லது அவரும் ஒரு வீரராகவோ இருக்கலாம்” என்று கூறினார்.

எனினும் இந்நடுகற்களைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்குச் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை என்றார்.

தொல்பழங்காலத் தமிழர் வாழ்வியலில் பெண்டிர் போர்க்களம் புகும் மரபில்லை. மறக்குடி மகளிர் குறித்து விரிவாகப் பேசும் சங்க இலக்கியங்கள்  போர்த்தொழிலுக்குரிய ஆண் மறவர்களை ஈன்றெடுத்தலும் வெற்றி வீரனாக களத்தில் மார்பில் புண்பட்டு இறந்தானா  என்று பார்த்துத் தாய் மகிழ்வதையே இலக்கியங்கள் கட்டுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் போர்க்களம் புகுந்த வீர மங்கை வேலுநாச்சியார், குயிலி இன்றும் நம் நினைவில் நிற்பதை மேற்சுட்டிய நடுகற்கள் காட்டுகின்றன.


புதன், 24 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 27 : எடக்கல் குகையில் தமிழி கல்வெட்டு.

 

தமிழாய்வுத் தடங்கள் – 27 :   எடக்கல் குகையில் தமிழி கல்வெட்டு.



கேரளா, வயநாடு மாவட்டத்தில் எடக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள குகையில்  சிந்து வெளி நாகரிகத்தோடு தொடர்புடைய தமிழி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு ஒன்றினைத் தொல்லியல் ஆய்வாளர் எம்.ஆர். இராகவ வாரியார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டு கி.மு 5ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கும்  இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தது என்கிறார். இதில் உள்ள எழுத்துக்களை ’சிறீ வழுமி’ என்றும் இச்சொல்லின் பொருள் ’கடவுள் பிரம்மா’ என்பதாகும். இக்கல்வெட்டு எழுத்து வடிவ முறை இந்திய மரபு உடையதாகத் தெரிகிறது. எடக்கல் குகைகள் வளநிலப் பண்பாடு கொண்டவையாகும். எடக்கல் வெளிப்படுத்தும் நாகரிகம் இந்தியாவின் தென்பகுதி வரை பரவியது எனலாம். இக்குகைகளில்  சமண பெளத்தத் துறவிகள் வாழ்ந்து இவ்வெழுத்துக்களைக் கொண்டு இலக்கண இலக்கியங்களையும்  மருத்துவம், வானியல் முதலியவற்றைப் பாடங்களாக எழுதினர். எடக்கல் குகை அரிய பல வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும் என்கிறார் வாரியார்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 26 : பழனியில் சங்க காலக் குகை ஓவியங்கள்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 26 :   பழனியில் சங்க காலக் குகை ஓவியங்கள்.



2500 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலக் குகை வாழ் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கு உதவும் ஓவியங்களைத் தொல்லியல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வ றிஞர்கள் குழு, வி. நாராயணமூர்த்தி, கன்னிமுத்து ஆகியோர் தலைமையில் ஆண்டிப்பட்டி மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு ஆடு மேய்த்தவரிடம் குகை இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு  சுமார் இரண்டு மணி நேரம் மலை மீதேறி குகை ஓவியங்களக் கண்டனர். ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் மரப்பசை கொண்டும் பச்சிலை வண்ணங்களைக் கொண்டும் தீட்டப்பட்டிருந்ததை ஆய்வு செய்தனர்.  அவைகள் கேலிச் சித்திரங்கள் (இன்றைய கோட்டோவியங்கள்) போலிருந்தன. ஒரூ பக்கம் குழிதோண்டி அதில் யானையைப் பிடிக்கும் முறையும் அவர்கள்  தலைவன் யானை மீதேறி வருவது போலவும் இருந்தன. விழாவுக்காகப்  பெண்டிர் பானையில் நீர் எடுத்து வருவதுபோலவும், குழந்தைகள் கைகோர்த்து நடனமாடுவது போலவும் விழாவில் ஓர் ஆடு பலியிடுவது போலவும் ஓவியங்கள் இருந்தன. ஒவியங்கள் குறிஞ்சி நிலமக்களின் சடங்குகளைக் காட்டுவதாக அமைந்திருந்தன. தீட்டப்பட்ட ஓவியங்கள் சங்க கால இனக்குழு மக்களின் வாழ்வியலாகும். இதனால் இத் தொல்பழங்குடி மக்கள் கி.மு. 1000 – 300. காலப் பகுதியில் வாழ்ந்தனர் எனலாம். இவ்வோவியங்கள் மத்திய பிரதேச பீம்பெட்கா  குகை ஓவியங்களை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 


திங்கள், 22 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -25 – கீழடி – தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.

 

தமிழாய்வுத் தடங்கள் -25 – கீழடி – தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.



2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககாலத் தமிழரின் வாழ்வியலை உலகிற்கு வழங்கிய கீழடி அகழாய்வின் அருமை பெருமைகளை அறிந்த மாணவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை முதுகலை வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு 88 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன என்றார் பேராசிரியர் பி.டி. பாலாஜி. 60 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏற்கெனவே 33 மாணவர்கள்  பணம் கட்டியுள்ளனர். கடந்த காலங்களில் ஓரிரு மாணவர்களே சேர்ந்துள்ளனர். 216-17 இல் 18 மாணவர்களே சேர்ந்தனர். இவ்வாண்டு 4 பொறியியல் படித்த மாணவர்கள்  தொல்லியல் துறையில் முதுகலையில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

கீழடியில் கிடைத்துள்ள தமிழி எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.