வியாழன், 17 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 57. கலைஞர் கருணாநிதி.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 57. கலைஞர் கருணாநிதி.

எத்திக்கும் புகழ் மணக்கும்

தித்திக்கும் செம்மொழியே..!

கலைஞரின் எழுதுகோல்தானே செந்தமிழைச்  செம்மொழி என்று எழுதியது.

அன்றைய ஒன்றிய அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவிக்க மாண்புமிகு மேனாள் முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் விளைவே காலத்தால் அழியாத ; அழிக்க முடியாத கன்னித் தமிழை ஒன்றிய அரசு,  செம்மொழிப் பட்டியலில் முதல் மொழியாக அறிவித்தது.

 கலைஞர் அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டி, திருமதி சோனியா காந்தி அவர்கள் எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு.

November 8, 2005.

Dear Thiru Karunanidhi ji,

I have received  your letter of 28th  October. I am glad that all the formalities for declaring Tamil as a Classical Language  have now been completed. This is an achievement for all the constituents  of the UPA Government , but particular credit goes to you and your party.

With Regards

Yours Sincerely

Sonia Gandhi

தலைவர் கலைஞர் அவர்களின் பெரு  முயற்சியால் செந்தமிழுக்குச் செம்மொழி எனும் தகுதியை ஒன்றிய அரசு வழங்கியது.  கலைஞர் அவர்கள் தமிழைச் செம்மொழியாக்க எடுத்துக்கொண்ட  முயற்சிகள்  பெரும் போராட்டமாக அமைந்திருந்தன.  அவர் போராடிப் பெற்ற வரலாற்றைச் “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” எனும் தலைப்பில் ‘முரசொலியில்’ எழுதினார்.

                     கலைஞர் ஆற்றிய  அரும்பெரும்பணிகளைப் போற்றிச் ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்  பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய  பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்,   கலைஞரின் களவெற்றியை உலகம் அறியவேண்டும் என முடிவு செய்து,  கலைஞரின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 56.கவிக்கோ அப்துல்ரகுமான்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 56.கவிக்கோ அப்துல்ரகுமான்.

“எம்மொழிக்கும் மூத்தவளே

எம்மொழியாய் வாய்த்தவளே

செம்மொழியாய் மொழிகளுக்குள்

செம்மாந்திருப்பவளே.”

திங்கள், 14 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 55. அறிஞர் மணவை முஸ்தபா.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 55. அறிஞர் மணவை முஸ்தபா.

செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள்.

1. தொன்மை

2. தனித் தன்மை

3. பொதுமைப் பண்பு

4. நடுவு நிலைமை

5. பலமொழிகட்குத் தாய்

6.பட்டறிவு வெளிப்பாடு

7. பிறமொழித் தாக்கமின்மை

8. இலக்கிய வளம்

9. உயர் சிந்தனை

10. கலை,இலக்கியத் தனித் தன்மை –வெளிப்பாடு,பங்களிப்பு

11.மொழிக் கோட்பாடு

என மொழியியலார் வகுத்துள்ளனர்.”

                 உலக மொழிகளுள் நீண்ட நெடிய கால வரலாற்றுடன் தமிழ் மட்டுமே மேற்குறித்துள்ள தகுதிகளைக் கொண்டுள்ளது என்று ஹார்வார்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 54.பேராசிரியர் கா. சிவத்தம்பி.

 

. சான்றோர் வாய் (மை) மொழி : 54.பேராசிரியர் கா. சிவத்தம்பி.

                      Tamil is a classical Language ‘என்பதனைத் 

தொல்சீர் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் என்றே 

மொழிபெயர்த்தல் வேண்டும். அதாவது செம்மொழி என்பதிலும் 

பார்க்க ‘ தொல்சீர் மொழி’ என்பதே பொருத்தமானதாகும்.

வெள்ளி, 11 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 53. பேராசிரியர் தமிழண்ணல் .

 

சான்றோர் வாய் (மை) மொழி : 53. பேராசிரியர் தமிழண்ணல் .

            “தமிழ் மிகத் தொன்மை மிக்க காலம் முதலே ‘செம்மொழி’யாகத் திகழ்கிறது. அதிலுள்ள வாய்மொழி இலக்கியப் பண்புகளும் விலங்கு நிலையை விட்டு மனித நிலைக்குச் சிறிது சிறிதாக மாறிய வீர நிலைக் காலமும் பண்பாட்டு மானுடவியல் வளர்ச்சிக் காலமும் அதன் முதிர்ந்த  செறிந்த செம்மொழித் தன்மையைக் காட்டுகின்றன. இதனை அடிப்படையாகக்கொண்டு வளர்ந்த இலக்கியமே தமிழ்ச்சங்கச் செம்மொழிச் செவ்வியல் இலக்கியம்.”

வியாழன், 10 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 52. பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட்.

 

. சான்றோர் வாய் (மை) மொழி : 52. பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட்.

                   “இந்தியாவின் ஏனைய தற்கால மொழிகளைப்போல் அல்லாமல் தமிழ், இம்மூன்று அடிப்படைத் தேவைகளையும் ஒருங்கே நிறைவுசெய்கின்றது. தமிழ்மொழி முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழையமொழி ; (இலத்தீனைப் போன்று மிகப் பழைமை வாய்ந்தது; அரபு மொழியினும் மிகத் தொன்மையானது.) முற்றிலும் தனித்துவமுடைய, தனக்கே உரிய மொழி மரபில் தோன்றி வளர்ந்தது. அதனால் சமற்கிருதமோ ஏனைய மொழிகளோ எவ்விதத் தாக்கமும் செல்வாக்கும் ஏற்படுத்தவில்லை. அதனுடைய தொன்மை இலக்கியங்கள் விவரிக்கவொண்ணாத அளவிற்கு மிக விரிந்துபட்டவை, மிகச் செழுமையானவை.”

 

புதன், 9 அக்டோபர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 51. பரிதிமாற்கலைஞர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 51.  பரிதிமாற்கலைஞர்.

             1887இல் ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனும் தமது நூலில் “

“”திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ்மொழியின்கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம்..” எனக் கூறி உரிய விளக்கங்கள் அளித்து, ‘தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்தவழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பதே நிச்சயம்.”