தமிழமுது – 49.
கடவுளைப்பற்றி….!
கடவுளைப்பற்றிய ஆராய்ச்சி :
கடவுளைப்பற்றிய தத்துவ ஞானஆய்வுகள் குறித்து அறிவது அவசியமாகின்றது.
என்று ஒருவன் கடவுள் உண்டு என்று சொன்னானோ….அன்றே அவன் அருகில் நின்ற ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டான் போலும்.
இன்றுவரை கடவுளை
எதிரும் புதிருமாக நின்று பேசி, உலாவரும் கருத்துகள் குறைந்தபாடில்லை. கடவுள் வழிபாடு
நாளுக்குநாள் பல்கிப்பெருகி வருவதைக் காணலாம். மக்களின் வேண்டுதல்கள்
கடவுளிடம் சென்று சேர்ந்ததா இல்லையா ? யாருக்கும் தெரியாது.
மதவேறுபாடின்றி கடவுளைப்பற்றி ஒரு வலுவான கட்டமைப்பை
நாள்தோறும் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றனர். ஆடம்பரம் ஆரவாரம் ஊர்வலம் நேர்த்திக்கடன் புனரமைத்தல் முதலிய சடங்குகள் ஆண்டுமுழுவதும்
மக்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருகின்றன. உடல் நோய்கள், உளநோய்கள் ஒவ்வொன்றூக்கும்
ஒவ்வொரு கடவுள்.
உண்மையில் எதிர்வினை என்பது – கடவுள் உண்டா
இல்லையா..? இப்போது இக்கேள்வி பிரச்சினை இல்லை ; கடவுள் நல்லவர், வல்லவர், கருணையுள்ளவர்,
வேண்டியவற்றை வேண்டியவாறே கொடுப்பவர், உலகையும் உயிர்களையும் படைத்தவர் என்றெல்லாம்
கதைக்கும் நீங்கள் யார் என்பதுதான் பிரச்சினையே..?
கடவுளை நன்கு அறிந்தவர் போலவும்,
உடன் இருந்து உறவாடியர் போலவும் கட்டுக்கடங்காத, கற்பனைக்கெட்டாத கதைகளைக் கூறி இடைத்
தரகர் போலச் செயல்படும் இவர்களின் நோக்கம் மிகவும் கீழ்த்தரமானது என்பதை யாவரும் அறிவர்.
வழிபாட்டிற்குரிய வழிமுறைகளை இவர்கள் விருப்பம்போல் உருவாக்கி வைத்துக்கொண்டு அவற்றைப்
புனிதம் என்றும் கற்பித்துத் சுகபோக வாழ்க்கையில்
வாழ்ந்துவரும் இவர்கள் கடவுளுக்குத் தோழர்களா அல்லது ஏமாற்றித் திரிபவர்களா
என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே கடவுள் மறுப்பாளர்களின் கோரிக்கையாகும்.
மக்களுக்கு
ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் அவை அனைத்திற்கும் கடவுளே கைகொடுப்பார் என்ற நம்பிக்கையில்
தன்னம்பிக்கையற்றுக் கோயில்களுக்குப் படையெடுக்கும் மக்களைச் சுரண்டுவதே கோயில் ஊழியர்களின்
மந்திரமும் தந்திரமுமாகும்.
கடவுள் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள் சொல்லி
மாளாது.
கடவுள் பிறந்த கதைகள், உலகத்தையும் உயிர்களையும்
படைத்த கதைகள், அற்புதங்கள் நிகழ்த்திய கதைகள், அருள்பாலித்த கதைகள், கடவுளின் குழந்தை குட்டிகள், மாமன் மச்சான் வகையறாக்கள்,
பங்காளிச் சண்டைகள், இன்னபிறவும் கடவுளின் ஆற்றல்களுக்குச் சான்றுகளாகப் பறைசாற்றப்படுகின்றன.
கடவுள் அருள்பாலித்தல் :
…………………..தொடரும்……………………………