செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

“வஞ்சித்துப் பழுகும்....


வஞ்சித்துப் பழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் கானுங்கொல் என்ரு அஞ்சி
அங்கம் குலைவது அறிவு.” ====நீதிநெறிவிளக்கம்.

பொய் வேடம் பூண்டு பிறரை வஞ்சித்து வாழும் மூடர்களே..!  அனைவரையும் ஏமாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளாதீர்கள் ; நீங்கள் வஞ்சித்தவற்றை யெல்லாம் எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான் என்பதை உணர்ந்து உங்கள் உடல் பதறுவதே உண்மையான இறை அறிவாகும்.

1 கருத்து: