வியாழன், 8 ஏப்ரல், 2021

தன்னேரிலாத தமிழ்-262.

 

தன்னேரிலாத தமிழ்-262.

சென்ற காலமும் வரூஉம் அமையமும்

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

வானமும் நிலனும் தாம் முழுது உணரும்

சான்ற கொள்கை சாயா யாக்கை

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர்.”  -மதுரைக்காஞ்சி, 477 – 481.

உயர்ந்தோர் உலகத்துச் செய்திகளையும்; எல்லா நிலங்களின் செய்திகளையும் ;தம் நெஞ்சால் அறிதற்குக் காரணமாகிய அறிவுடையர்,

சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடு மிக உணர்ந்து, அவற்றை உலகத்தார்க்கு உரைப்பர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக