திங்கள், 29 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-261.

 

தன்னேரிலாத தமிழ்-261.


மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும்

தவம் இலார் இல்வழி இல்லை தவமும்

அரசிலார் இல்வழி இல்லை அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்.” =நான்மணிக்கடிகை, 47.


மழையில்லாமல் உலகத்தார்க்கு எதுவும் இல்லை ; தவத்திறம் உள்ளவர் இல்லையேல் மழை இல்லை ; அத்தவமும் செங்கோன்மை இல்லாத இடத்தில் இல்லை ; அச்செங்கோன்மையும் நற்குடி மக்கள் இல்லா இடத்தில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக