ஞாயிறு, 28 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-260.

 

தன்னேரிலாத தமிழ்-260.


பால் இல் குழவி அலறவும் மகளிர்

பூ இல் வறுந் தலை முடிப்பவும் நீர் இல்

வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்

இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்.  -புறநானூறு, 44.


பால் இல்லாது குழந்தைகள் அழுகின்றனர்; மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர்; நல்ல வேலைப்பாடு அமைந்த வீட்டில் உள்ளோர் நீர் இல்லாது வருந்திக் கூவுகின்றனர் ; இனியும் இங்கே இருத்தல் கொடுமையன்றோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக