சனி, 26 பிப்ரவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –397: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –397: குறள் கூறும்பொருள்பெறு.

 

319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.


பிறருக்குத் துன்பம் தரும் செயலை முற்பகல் ஒருவன் செய்தானாகில் அவனுக்கு அக்கேடு செய்ததற்குரிய பலன்  (துன்பம்) பிற்பகலே எவரும் ஏவாமல் தானே வந்துசேரும்.


துன்பத் தீ, மூட்டியவனையே சூழ்ந்து அழிக்கும்.


முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு

 பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்.”சிலப்பதிகாரம், 21.


முற்பகல் பிறருக்குக் கேடு செய்தவன் ; பிற்பகல் தானே அக்கேட்டை அடைவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக